Social Icons

கவிதைக்கு பொய் அழகு..!!



சமீபத்தில் என்னுடைய ரசிகை ஒருவருடன் சேட் செய்து கொண்டிருக்கும்போது, அவர் சொன்ன ஒரு வாக்கியந்தான் இந்தக்கதைக்கு ஆரம்பப்புள்ளி. இந்தக்கதை உருவாகக் காரணமாயிருந்த அந்த ரசிகைக்கு இந்த சமயத்தில் ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நன்றி ரசிகையே ..!! துருதுருவென, சற்றே வெகுளியான, முக்கியமாய் அழகான.. ஒரு கல்லூரிப்பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது..? அந்த மாதிரி ஒரு பெண்தான் இந்த கதையின் நாயகி..!! கொஞ்சம் இம்சை பிடித்தவள் என்று கூட அவளை சொல்லலாம்..!! எல்லாவற்றையும் விட அவளிடம் இன்னுமொரு குணம் கூட இருக்கிறது.. அதுதான் இந்தக்கதையின் ஹைலைட்..!! அப்புறம்.. அந்த வாசகி சொன்ன அந்த வாக்கியம்.. "பொய் பொய்யா சொல்றடா.. புழுகு மூட்டை..!!" கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்


கதீட்ரல் ரோட்டில் இருந்து உள்ளே செல்லும் ஒரு குறுகிய சாலையில், எழுபத்தைந்து சதவிகிதம் முடிவடைந்த நிலையில் நின்றிருக்கிறது அந்த கட்டிடம். எட்டு தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம். ஏழாயிரம் பேர் வசதியாக அமர்ந்து வேலை பார்க்க கூடிய கொள்ளளவு. பகல், இரவு என முழு வீச்சில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களில், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் ஒரு யூனிட் அங்கு வந்து குடியேற போகிறது.

அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில், மாலை வெயிலுக்கு கண்களை சுருக்கியவாறு நான் நின்றிருந்தேன். கட்டிடத்தின் ஒரு ஓரத்தில் இருந்த அந்த பெரிய பிரமிட் வடிவ ஸ்ட்ரக்சரின், ஸ்லோப் அளவை நான் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ஒரு கையில் ரச மட்டம், இன்னொரு கையில் டேப்..!! பிரமிட் உச்சியில் சரியாக இருந்த அளவு, கீழே வர வர, டிராயிங்கில் இருப்பதை விட அரை இன்ச் அளவு குறைந்தது. அருகில் வெல்டிங் அடித்துக் கொண்டிருந்த பையனிடம் நான் எரிச்சலாக கத்தினேன்.


"டேய்.. மேஸ்திரியை எங்கடா..?"

"டீ சாப்பிட போயிருக்கார்ண்ணா.."

"மட்டம் கரெக்டா இல்லைடா.. அரை இன்ச் கம்மியாவுது.."

"நான் அப்போவே சொன்னேண்ணா.. அவுரு கேக்கலை.. பரவால்ல வுடுன்னாரு.."

"ப்ச்.. என்னடா நீங்க..!! இந்த சின்ன வேலையை இப்படி சொதப்புறீங்க..!! எப்ப வருவாரு..?"

"தோ.. அஞ்சு நிமிஷம்ண்ணா.. வந்துருவாரு.."

நான் அந்த பிரமிடையே கொஞ்ச நேரம் எரிச்சலாக பார்த்தேன். அப்புறம் அமைதியாக நடந்து சென்று, இன்னும் பூசி முடிக்கப்படாத அந்த பேராபெட் சுவரில் சென்று அமர்ந்தேன். கான்க்ரீட் கற்கள் என் புட்டத்தை குத்துவதை கண்டுகொள்ளவில்லை. கதீட்ரல் ரோட்டில் வேகமாய் ஓடிய வாகனங்கள் மீது பார்வையை வீசினேன். நூறு அடி உயரத்தில் மேலே அமர்ந்து, சென்னையின் ஆரவாரத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே, மேஸ்திரிக்காக காத்திருந்தேன்.

நான் அசோக். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆறு ஆண்டுகளுக்கு முன், ஹைதராபாத்தில் உள்ள ஒரு காலேஜில் B.Arch முடித்தேன். இரண்டாண்டுகளுக்கு முன்பு தனியாக பிசினஸ் ஆரம்பித்தேன். இந்தக் கட்டிடத்தின் ஒரு சில வேலைகள் மட்டும் எனக்கு காண்ட்ராக்ட் விடப்பட்டிருக்கின்றன. ஆஹா ஓஹோ என போகாவிட்டாலும், ஓரளவு ஓகே என்று சொல்லுமளவிற்கு போனது பிஸினஸ்..!! இந்த இரண்டு ஆண்டுகளில் உருப்படியாய் ஏதாவது சம்பாதித்திருக்கிறேன் என்றால், அது.. அதோ.. கீழே மரநிழலில் நிற்கிறதே.. என்னுடைய ரெட் கலர் ஸ்விஃப்ட்..!! அதுதான்..!!

ஒரு பத்து நிமிடத்தில் மொட்டை மாடி திறப்பு வழியாக வெளிப்பட்டார் கடற்கரை. மேஸ்திரி..!! உடன் நடந்து வந்த இன்னொருத்தனிடம், அவனுடைய மனைவியை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியபடி வந்தவர், என்னை பார்த்ததும் அமைதியானார். வாயில் புகைந்து கொண்டிருந்த பீடியை கீழே போட்டு வெற்றுக் காலால் மிதித்து அணைத்தார். மடித்துக் கட்டியிருந்த வேஷ்டியை இறக்கிவிட்டார். முகத்தில் சிரிப்பை வரவைத்துக் கொண்டபடி நக்கலாக சொன்னார்.

"இன்னா சார்.. அங்க போய் குந்தினுக்குற..? வுழுந்துறப் போற.. இந்தாண்ட வா..!!"

"ப்ச்..!! நக்கலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை உனக்கு..!! வேலைல மட்டும் கோட்டை வுட்டுடு..!!" சொல்லிக்கொண்டே நான் எழுந்து அவரை நோக்கி நடந்தேன்.

"இன்னாயிப் போச்சு இப்போ..? வேலைல இன்னா கொறை கண்டுக்கின நீ..?" கடற்கரையின் குரலில் இப்போது ஒரு சீரியஸ்னஸ் வந்திருந்தது.

"அந்த பிரமிட் மட்டம் சரியில்லை.. அரை இன்ச் டிஃபரன்ஸ் வருது..!!"

"ஹே.. அரை இன்ச்தான சார்..? சும்மா வுடு.. ஒன்னும் ஆவாது..!!"

"ப்ச்.. புரியாமப் பேசாத கடக்கரை.. அது மேல க்ளாஸ் வருது.. அரை இன்ச் டிஃபரன்ஸ் இருந்தா.. க்ளாஸ் உக்காராது..!!"

"க்ளாசா..? இதுல போய் இன்னாத்துக்கு க்ளாஸ் போடுறானுங்கோ.. அறிவு கெட்டவனுங்கோ..!!" கிண்டலாக சொன்ன கடற்கரையை நான் முறைத்துப் பார்த்தேன். அதை உணர்ந்ததும் அவர் கொஞ்சம் கம்மலான குரலில் கேட்டார்.

"இன்னா சார்..?"

"அந்த க்ளாஸ் போடுற ஐடியா நான் சொன்னது...!!"

"ஓ.. உன் ஐடியாதானா..? இன்னாத்துக்கு க்ளாஸ்லாம் போடுற இதுல நீ..?"

"ப்ச்.. அதுலாம் உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது கடக்கரை.. இந்த மாதிரி ஏதாவது வேலை பண்றதுக்குத்தான் எனக்கு பணம் தர்றாங்க.. நான் சொல்ற வேலையை மட்டும் செய்.. போதும்..!!"

"சரி வுடு.. பண்ணிர்லாம் வுடு.."

"எப்போ..?"

"அதான் பண்ணிர்லாம்னு சொல்றேன்ல..?"

"இப்போ பண்ணு.. இன்னைக்கு நான் உக்காந்து பாத்துட்டுத்தான் போறேன்.." நான் சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்க, கடற்கரை சிரித்தார்.

"எதுக்கு சிரிக்கிற இப்போ..?" நான் சற்றே எரிச்சலாக கேட்டேன்.

"நான் பண்றேன்.. ஆனா பாக்கத்தான் நீ இருக்கமாட்ட.."

"ஏன்..?"

"அங்க பாரு.. பாப்பா வந்தினுகிது.."

கடற்கரை கை நீட்டிய திசையில், தூரமாய் நான் பார்வையை வீசினேன். கதீட்ரல் ரோடிலிருந்து பிரிந்து வந்த சாலையில், ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு கவி வருவது தெரிந்தது. இந்தக்கதையின் ஹீரோயின்..!! மிதமான வேகத்தில் வந்தவள், எங்கள் பில்டிங்கை அடைந்ததும், வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டாள். நான் திரும்பி கடற்கரையை பார்க்க, இப்போது அவர் முகத்தில் ஒரு கேலிப்புன்னகை.

"இன்னா.. இப்போ உக்காந்து வேலையை இருந்து பாத்துனு போறியா..?" அவர் கிண்டலாக கேட்க, நான் ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தினேன்.

"வேலையை முடிச்சிடு கடக்கரை.. நான் காலைல வந்து பாக்குறேன்.."

"ஒன்னும் கவலைப்படாத.. போயினு காலைல வா.. வேலை முடிஞ்சிருக்கும்.."

அவர் என் முதுகை பார்த்து சொல்ல, நான் என் லேப்டாப் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டேன். படிக்கட்டில் இறங்கிக்கொண்டே, செல்போன் எடுத்து கவியின் நம்பரை தட்டினேன். கால் பிக்கப் செய்யப்பட்டு நான் ஹலோ சொல்வதற்கு முன்பே, எதிர் முனையில் கவி சோகமான குரலில் கொஞ்சலாக சொன்னாள்.

"அசோக்... இப்போதான் வீட்டுக்குள்ளயே நொழையுறேன்டா செல்லம்.. ரொம்ப லேட் ஆயிடுச்சு.. டயர்டா வேற இருக்கு.. என்னால அங்க வர முடியாதுன்னு நெனைக்கிறேன்.. நாம நாளைக்கு மீட் பண்ணலாமா..? ம்ம்..? ஓகேவா..?"

அவள் குழைவான குரலில் கெஞ்சிக்கொண்டிருக்க, நான் பதில் சொல்லாமல் காதுக்கு கொடுத்திருந்த செல்போனை, கடுப்புடன் கையில் எடுத்து பார்த்தேன். டிஸ்ப்ளேயில் வெண்பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த கவியின் முகத்தை சற்றே எரிச்சலாய் முறைத்தேன். 'ஆரம்பிச்சுட்டியா..????' என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். அப்புறம் மறுபடியும் செல்போனை காதுக்கு கொடுத்து,

"லூசு..!!!! நீ வந்ததை.. மேல இருந்து நான் பாத்துட்டேன்..!!" என்றேன் எரிச்சலை அடக்கிக்கொண்டு.

"ஓ.. பாத்துட்டியா..? ச்ச்சே.. திடீர்னு உன் முன்னாடி வந்து நின்னு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சேன்.. எல்லாம் போச்சு..!!" இப்போது அவளது குரல் சோகம் விடுத்து ஏமாற்றமாய் ஒலித்தது.

"ம்ம்ம்.. அதுசரி.. என்ன.. அஞ்சு மணிக்குலாம் வந்து நிக்கிற..? ஆறு மணிக்குத்தான் வருவேன்னு சொன்ன.."

"ஹஹா.. அது சும்மா பொய் சொன்னேன்.."

"எதெதுக்குத்தான் பொய் சொல்றதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா உனக்கு..?" நான் சற்றே கோபமான குரலில் கேட்க,

"சரிசரி.. ஆரம்பிச்சுடாத.. இனிமே பொய் சொல்லலை.. போதுமா..?" அவள் என்னை சாந்தப் படுத்தினாள்.

"சரி கீழேயே இரு.. வர்றேன்.."

"பரவால்ல அசோக்.. மேல வர்றேன்.."

"ப்ச்.. தேவையில்லாம எதுக்கு எட்டு மாடி ஏறுற..? நான் கால் பண்ணினதே அதுக்குத்தான்.. கீழேயே வெயிட் பண்ணு.. வந்துக்கிட்டே இருக்குறேன்..!!"

சொல்லிவிட்டு நான் காலை கட் செய்தேன். பக்கவாட்டில் கைப்பிடி இல்லாத.. முழுதாய் இன்னும் பூசி முடிக்கப் படாத படிகளில், பொறுமையாக கவனமாக இறங்கினேன். இன்னும் எட்டு மாடிகள் இறங்க வேண்டும். அதற்குள் கீழே எனக்காக காத்திருக்கும் கவியை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

கவி என்கிற இந்த கவிதாவை ஒரு வருடமாக எனக்கு தெரியும். இப்போது ஒரு நான்கைந்து மாதமாக இருவரும் காதலிக்கிறோம். நான் பிசினஸ் ஆரம்பித்த காலத்தில் எனக்கு ஒரு பெரிய காண்ட்ராக்ட் கிடைத்தது. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் ஆடிட்டோரிய கட்டிடம் வடிவமைக்கும் பணி. கவியை அங்குதான் நான் சந்தித்தேன். அவள் அந்த கல்லூரியில்தான் படித்தாள். இப்போதும் படிக்கிறாள்.


ஸ்டூடண்ட்ஸ் ரெப்ரசண்டேடிவ் என்கிற முறையில் அடிக்கடி ஆடிட்டோரியத்தை பார்வையிட வருவாள். க்யூட்டான முகவெட்டுடன்.. துறுதுறுவென கண்களுடன்.. பளபளக்கும் உதடுகளில் படபட பேச்சுடன்.. கவி என்னை எளிதில் கவர்ந்தாள். தினமும் சைட்டுக்கு செல்வதோடு, அவளை சைட் அடிக்கும் பணியையும் செவ்வனே செய்தேன்.

அவளுக்கும் என்னிடம் எதோ ஒன்று பிடித்திருந்திருக்கிறது. ஆரம்பத்தில் அவள் ஆடிட்டோரியத்தை பார்வையிட வருகிறாள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் அவள் என்னைத்தான் பார்வையிட வருகிறாள் என்று அப்புறந்தான் எனக்கு மெல்ல விளங்கியது. வேலை எப்போது முடியும் என்று கேட்பதை விட்டுவிட்டு.. பர்சனல் கேள்விகள் கேட்டு, என்னைப்பற்றி தெரிந்து கொள்ளும் வேலையிலேயே குறியாக இருந்தாள்.

பேசினோம். பழகினோம். நெருங்கினோம். நான்கு மாதத்துக்கு முன்னால் ஒருநாள்.. கேண்டில் லைட் வெளிச்சத்தில்.. கேக் ஆர்டர் செய்து வருவதற்கு இடைப்பட்ட கேப்பில்.. கைவிரல்களை கோர்த்துக் கொண்டு.. ஆசையாய் எங்கள் ஐஸும் ஐஸும் பார்த்துக்கொள்ள.. ஐ லவ் யூ சொல்லிக் கொண்டோம்..!!

ஏஞ்சல் மாதிரி என் வாழ்வில் கவி நுழைந்ததை எண்ணி நான் ஏராளமாய் சந்தோஷப் பட்டிருந்தாலும், அவ்வப்போது எரிச்சலும் பட்டிருக்கிறேன். ஏன் என்று கேட்கிறீர்களா..? கதையை படியுங்கள். புரியும்..!!

கவி தமிழ்பெண்ணாய் இருந்தாலும், டெல்லியிலேயே பிறந்து வளர்ந்தவள். குடும்பம் டெல்லியில்தான் இருக்கிறது. அவளுடைய அப்பா இன்டியன் ஆர்மியில் பிரிகேடியராக இருக்கிறார். அவளுடைய அம்மா அதே ஆர்மியில் டாக்டராக இருக்கிறார். அவளுடைய அண்ணனும் ஆர்மியில்தான் சேர்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறானாம். இப்படிப்பட்ட ஒரு டிஸிப்ளின்டான ஃபேமிலியில் பிறந்துவிட்டு, இவள் மட்டும் எப்படி இப்படி தறுதலையானாள் என்று அடிக்கடி எனக்கு டவுட்டு வரும்..!!

கிரவுண்ட் ஃப்ளோரை அடைந்ததும் கவி பார்வையில் பட்டாள். இப்போதுதான் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டவள் போல, ஃப்ரெஷாக இருந்தாள். அடர் சிவப்பு நிற டாப்சும், வெள்ளை நிற ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். டாப்ஸ் தொப்புளை மறைக்காமல் பளிச்சென்று காட்டியது. ஸ்கர்ட் முழங்கால் வரை மட்டும் மறைத்துவிட்டு, வேலை முடிந்ததென அங்கேயே நின்று கொண்டது. என்னை பார்த்ததும் அவள் 'ஈஈஈஈஈ...' என இளித்தாள்.

"ஹாய்...!!!!!" என்றாள்.

நான் அவளை கண்டுகொள்ளாமல் அவளை கடந்து சென்றேன். ஒருகணம் குழம்பியவள், அப்புறம் நாய்க்குட்டி மாதிரி என் பின்னாடியே வந்தாள். நான் காரை நெருங்கி, பின் கதவை திறந்து என் லேப்டாப் பேக்கை வைத்தேன். கதவை அறைந்து சாத்தும்போது, கவி கொஞ்சலான குரலில் கேட்டாள்.

"கோவமா..???"

"கார்ல ஏறு.."


சொல்லிவிட்டு நான் காரை சுற்றி வந்து, டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டேன். ஒரு சில வினாடிகள் தயங்கிய கவி அப்புறம் மெல்ல நடந்து வந்து கதவை திறந்தாள். எனக்கு பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்தாள். அமர்ந்ததும், ஒரு கையால் அவள் கதவை சாத்திக்கொண்டு இருக்கும்போதே, நான் எட்டி அவள் இடுப்பை வளைத்து இழுத்து, என்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டேன். அதை சற்றும் எதிர்பாராத கவி, 'ஆஆஆஆவ்வ்வ்வ்வ்...!!' என்ற அலறலுடன் என்னோடு வந்து ஒட்டிக் கொண்டாள்.

நான் கவியின் தேன்மிட்டாய் உதடுகளை தேடிப்பிடித்து கவ்விக் கொண்டேன். சர்ரென உறிஞ்சி தேனருந்தினேன். கவி சற்று திணறினாலும், பின்பு என் முதுகைப் பற்றி பிசைந்துகொண்டே என்னுடன் ஒத்துழைத்தாள். உதடுகளை என் வசம் இழந்துவிட்டு, விழிகளை இறுக்கி மூடிக் கொண்டாள். நான் முத்தமிட்டு முடித்த பிறகும், கொஞ்ச நேரம் கழித்துத்தான் அந்த விழிகளை திறந்தாள். கிறக்கமாய் ஒரு பார்வை பார்த்தபடி கேட்டாள்.

"எ..என்ன.. என்னைக்கும் நான்தான் இப்படி உனக்கு ஸ்வீட் ஷாக் கொடுப்பேன்.. இன்னைக்கு நீ கொடுக்குற..?"

"உன்னை பாத்ததுமே.. அப்டியே இழுத்து புடிச்சு கிஸ் அடிக்கணும் போல இருந்தது.. நடுரோட்ல கொடுத்தா நல்லாருக்காதேன்னுதான்.. உடனே கார்க்குள்ள வர சொன்னேன்.."

"ஏன் அப்டி கிஸ் அடிக்கனும்னு தோணுச்சு..?"

"தெரியலை.. இன்னைக்கு நீ ரொம்ப அழகா.. ரொம்ப செக்ஸியா இருக்குற மாதிரி இருக்கு.."

"எதனால..?"

அவள் குறும்பு கொப்பளிக்கும் விழிகளுடன் கேட்க, நான் அவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்தேன். குழந்தை மாதிரி க்யூட்டான முகம் (இப்போது வெட்கத்தில் சிவந்திருந்தது).. திராட்சை போல கரிய விழிகள் (கிறக்கத்தில் செருகியிருந்தன).. ஆப்பிள் துண்டுகள் போல அதரங்கள் (இன்னும் என் முத்த வன்முறையில் துடித்துக் கொண்டிருந்தன).. அப்புறம் கழுத்து.. கழுத்துக்கு கீழே.. திடீரென இன்று கொஞ்சம் எக்ஸ்ட்ராவாய் வீங்கிவிட்ட மாதிரியான உருண்டை மார்புகள்.. குட்டியாய், வட்டமாய், ஆனால் செக்சியாய் அழகுத் தொப்புள்.. யானைத்தந்தம் மாதிரியாய் வழவழ கால்கள்.. அவளுடைய மொத்த மேனியையும் மேய்ந்த என் பார்வை, பின்பு மீண்டும் அவளது மார்பு வீக்கத்தில் வந்து நிலைத்தது.. அழுத்தமாய்..!!

"ச்சீய்... பொறுக்கி...!!! இதைப் பாத்துத்தான் மூட் ஆயிட்டியா..?" சொல்லிக்கொண்டே அவள் இரண்டு கைகளாலும் தன் மார்புகளை மூடிக் கொண்டாள்.

"ஆமாம்.. இன்னைக்கு என்ன.. எப்போவும் இருக்குறதை விட பெருசா இருக்கு..?"

"ம்க்கும்.. அது எப்போவும் போலதான் இருக்கு.. உனக்கு இன்னைக்குத்தான் ஒழுங்கா கண்ணு தெரிஞ்சிருக்கு..!!"

"ஓஹோ..? சரி சரி.. கையை எடு.. கண்ணு ஒழுங்கா தெரியிறப்போவே நல்லா பாத்துக்குறேன்.." சொல்லிக்கொண்டே நான் அவளுடைய மார்புக்கு மிக நெருக்கமாக என் முகத்தை எடுத்து செல்ல, அவள் என் தலையை பிடித்து தள்ளிவிட்டாள்.

"அப்புறம் கண்ணு பெர்மனன்டா தெரியாம போயிரும்.. பரவாலையா..?"

"ஒருதடவை உன் அழகை முழுசா பாத்துட்டு.. அப்புறமா எனக்கு கண்ணு போனா கூட எனக்கு கவலை இல்லை.." சொல்லிவிட்டு நான் கண்ணடிக்க,

"என்ன.. இன்னைக்கு கொஞ்சம் ஓவராத்தான் பொங்குது உனக்கு..??" கேட்டாள் கவி.

"ஆமாம்.. ஓவர் மூடாகிப் போச்சு.. இப்டியே உன்னை கார்ல எங்கயாவது கடத்திட்டு போய்.."

"ம்ம்ம்... கடத்திட்டு போய்..??"

"கதற கதற கற்பழிக்கலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.."

"ஹாஹா.. எனக்கும் ஆசையாத்தான் இருக்குது.. ஆனா இன்னைக்கு வேணாம்.."

"ஏன்..?"

"இன்னைக்கு.. எனக்கு அந்த மூன்று நாட்கள்.. டொட்டடயிங்..!!" எதோ இன்று அவளுக்கு பிறந்த நாள் என்பது போல அவ்வளவு சந்தோஷமாக சொன்னாள்.

"ஓ..!!"

"இன்னொரு நாள் அந்த மாதிரி.. மாத்தி மாத்தி ரேப் பண்ணி விளையாடலாம்.. ஓகேவா..?" கவி குறும்பாக சொல்லிவிட்டு கண் சிமிட்டினாள்.

"ஹாஹா.. ஓகே ஓகே.."

"ம்ம்.. அப்புறம்..? என்ன ப்ளான் இப்போ..?"

"எங்கயாவது வெளில போகலாம் கவி.."

"ஹை.. ரொம்ப நாளா உன்னை கேட்டுட்டு இருக்கேனே.. ஐஸ்க்ரீம் வாங்கித் தர்றியா எனக்கு..?"

"ம்ம்.."

"ஹையா...!! காரை ஸ்டார்ட் பண்ணு.. டி.நகர் போலாம்..!! ஹேய்.. இருஇரு... என் ஸ்கூட்டிய என்ன பண்றது..?"

"அது இங்கேயே நிக்கட்டும்.. வந்து எடுத்துக்கலாம்.."

"வேற யாரும் தூக்கிட்டு போயிட மாட்டாங்களே..?"

"யாருக்காவது திடீர்னு பேரீச்சம்பழம் சாப்பிட ஆசை வந்துடுச்சுனா.. தூக்கிட்டு போக சான்ஸ் இருக்கு.."

நான் சொன்னதை கேட்டு கவி கண்களை இடுக்கி என்னை முறைத்துக் கொண்டிருக்கும்போதே, நான் காரை ஸ்டார்ட் செய்திருந்தேன். மிதமான வேகத்தில் காரை செலுத்தியவன், கதீட்ரல் ரோட்டை அடைந்ததும், வேகமெடுத்தேன். ஒரு பத்து, பதினைந்து நிமிடத்தில் நார்த் உஸ்மான் சாலையை அடைந்தோம். கண்ணாடி கதவுகளுடன் பளபளவென தெரிந்த அந்த ஐஸ்க்ரீம் பார்லருக்குள் நுழைந்தோம். கார்னர் சீட் தேடி அமர்ந்து கொண்டோம். அமர்ந்ததும் கவி என் கையை கட்டிக் கொண்டு, தோளில் சாய்ந்து கொண்டாள்.

"ஹேய்.. உனக்கு பட்டர் ஸ்காட்ச் புடிக்கும்ல.. அதையே ரெண்டு ஆர்டர் பண்ணிடவா..?" நான் கையில் எடுத்த மெனு கார்டை புரட்டாமலேயே கேட்டேன்.

"ஐயோ.. ச்சீய்.. அது எனக்கு புடிக்கவே புடிக்காது.." கவி முகத்தை சுளித்தாள்.

"புடிக்காதா..? அப்புறம் அன்னைக்கு புடிக்கும்னு சொன்ன..?"

"என்னைக்கு..?"

"ஒரு நாலஞ்சு மாசம் இருக்கும்.. நாம ஐ லவ் யூ சொல்லிக்கிறதுக்கு முன்னாடி.."

"ஓ.. அ..அது.. நீ புடிக்கும்னு சொல்லிருப்ப.. அதனால நானும் புடிக்கும்னு பொய் சொல்லிருப்பேன்.."

அவள் கூலாக சொல்லிவிட்டு இளிக்க, நான் பட்டென்று கடுப்பானேன். அவளுடைய முகத்தையே ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தேன். அப்புறம் மெனுகார்டை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டேன். நொந்து போனவன் மாதிரி, ஒருகையால் நெற்றியை பிடித்துக் கொண்டேன். கவி கொஞ்ச நேரம் தன் கட்டைவிரலை கடித்தபடி பரிதாபமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு மெல்ல என் புஜத்தை கீறினாள்.

"கோவமா..??"

"இல்ல.. அப்டியே குளுகுளுன்னு இருக்குது..!! ச்சை... வாயைத் தெறந்தாலே.. ஒரே பொய்....!!" நான் கோபத்தில் சீறினேன்.


"சாரிடா செல்லம்.." அவள் கொஞ்சிக்கொண்டே என் கன்னத்தை பிடிக்க,

"ப்ச்.. ஒன்னும் வேணாம் போ.. கையை எடு.." நான் அவளுடைய கையை தட்டிவிட்டேன்.

"சரி.. பட்டர் ஸ்காட்ச்சே ஆர்டர் பண்ணு.. நான் சாப்பிடுறேன்.."

"எனக்காக ஒன்னும் நீ புடிக்காததுலாம் சாப்பிட வேணாம்.."

"இல்லை.. எனக்கு புடிக்கும்.."

"திரும்ப திரும்ப பொய் சொல்லாத கவி.. அப்டியே அறைஞ்சுடுவேன்.." நான் கையை ஓங்க,

"ம்ம்ம்.. அறை அசோக்.. அறிவே இல்ல எனக்கு.. நல்லா அறை..!!" அவள் முகத்தை திருப்பி, நான் அறைவதற்கு வாட்டமாக கன்னத்தை காட்டினாள்.

"போடீ... லூசு...!!" நான் உயர்த்திய கையை கீழே போட,

"யுவர் ஆர்டர் ப்ளீஸ் சார்.." என்று பேரர் வந்து நின்றான்.

"எனக்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் டபுள் ஸ்கூப்.. அவளுக்கு என்ன வேணும்னு அவகிட்டயே கேட்டுக்கோ..!!" நான் வெறுப்பாக சொன்னேன்.

"மேடம்.." என்று அவன் கவியை பார்க்க,

"என் வூட்டுக்காரர் ஆர்டர் பண்ணினதே எனக்கும் கொண்டு வாங்க..!!"

அவள் நல்லபிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, மீண்டும் என் கையை கட்டிக்கொண்டாள். பேரர் ஒரு நமுட்டு சிரிப்புடன் நகர்ந்தான். அப்புறம் கொஞ்ச நேரம் நான் கவியிடம் எதுவுமே பேசவில்லை. ஆர்டர் செய்த ஐஸ்க்ரீம் வந்து, சாப்பிட்டு முடிப்பதற்குள் கவி அடிக்கடி என்னை சீண்டி பார்த்தாள். நான் முறைப்பை மட்டுமே பதிலாக அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். சாப்பிட்டு முடித்து, மீண்டும் காருக்குள் சென்று அமர்ந்தோம். இப்போது கவி என் இடுப்பை வளைத்துக் கொண்டு கொஞ்சினாள்.

"கோவம் இன்னும் போகலையா..?"

"ப்ச்.. விடு கவி.."

"ம்ஹூம்.. கோவம் போயிடுச்சுன்னு சொல்லு.. அப்போதான் விடுவேன்.."

"கோவம்லாம் போகாது.. விடு.."

"ப்ளீஸ் அசோக்.. நீ இப்டி மூஞ்சியை உர்ர்ருனு வச்சிருந்தா.. பாக்கவே சகிக்கலை தெரியுமா..? சிரிச்சாத்தான் உன் மூஞ்சி நல்லாருக்கு.. சிரி அசோக்.. ப்ளீஸ்..!! வேணுன்னா.. உனக்கு கோவம் போற வரை.. நல்லா என்னை கிஸ் பண்ணிக்கோ..!! ம்ம்ம்.."

என்றவாறு அவள், கண்களை மூடிக்கொண்டு உதட்டை பிதுக்கி காட்ட, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. முதலில் லேசான புன்னகைதான் என் உதட்டில் இருந்து வெளிப்பட்டது. பின்னர் அந்த புன்னகை பெரிதானது. சிரித்துவிட்டேன். அவ்வளவுதான்...!!! தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிந்த மாதிரி கவியின் முகம் பிரகாசமானது.

"ஹை... இப்டி சிரிச்சா.. எப்டி இருக்கு மூஞ்சி.. ம்ம்ம்ம்... லவ்யூடா குட்டி..!!"

கூச்சலிட்டவாறு கவி என்னை இறுக்கி அணைத்துக்கொண்டாள். நானும் இப்போது அவளை ஆசையாக தழுவிக் கொண்டேன். அவளது கூந்தலின் நறுமணத்தை வாசம் பிடித்தேன். அவளுடைய நெற்றியில் காதலாக ஒரு முத்தமிட்டு விட்டு, பின்பு அன்பான குரலில் கேட்டேன்.

"ஏண்டி இப்டி பண்ற..?"

"நான் என்ன பண்ணுனேன்..?" அவள் ஒன்றும் தெரியாத பிள்ளை மாதிரி கேட்டாள்.

"பொய் பொய்யா சொல்லி என்னை லவ் பண்ண வச்சிருக்கடி.."

"ஹாஹா.. பெரியவங்க சொல்லிருக்குறதைத்தான நான் பண்ணிருக்கேன் .?"

"பெரியவங்க என்ன சொல்லிருக்குறாங்க..?"

"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு ஆம்பளையை கவுக்கனும்னு சொல்லிருக்காங்கல்ல..?"

"லூசு... அது ஆம்பளையை கவுக்குறது இல்ல.. கல்யாணம் பண்றது..!!"

"ரெண்டும் ஒண்ணுதான்..!!" அவள் பட்டென்று சொல்ல, நான் சிரித்தேன்.

"ஹ்ஹாஹ்ஹா.. ம்ம்ம்.. ஆனா.. நீ என்னை கவுக்குறதுக்காக மட்டும் பொய் சொல்லலையே..? சம்பந்தமே இல்லாம.. உப்பு சப்பு இல்லாத மேட்டருக்குலாம் பொய் சொல்லிருக்க..!! என்னவோ.. பொய் சொல்லாம உன்னால இருக்கவே முடியாத மாதிரி.. அது ஏன்..?"

"அதுக்கு நான் பொறுப்பு இல்லைப்பா.. என் வளர்ப்பு சரியில்லை.."

"ஏன்.. பொய் சொல்லி.. பொய் சொல்லி.. வளர்த்தாங்களா உன்னை..?"

"இல்லை.. பொய்யே சொல்லக் கூடாதுன்னு ஓவரா கண்டிச்சு வளர்த்தாங்க..!!"

"ஓ.. அப்டி வளர்த்தே.. இந்த லட்சனத்துலதான் வளர்ந்திருக்கியா நீ..?"

"ப்ச்.. சொல்றதை கேளு அசோக்.. சின்ன வயசுல.. நாங்க பொய் சொன்னா.. அம்மா எங்க கால்ல சூடு போடுவா.."

"ம்ம்.."

"சூட்டுக்கு பயந்துக்கிட்டு.. அண்ணா பொய்யே சொல்ல மாட்டான்.."

"ம்ம்.. நீ என்ன பண்ணுவ..?"

"ஒவ்வொரு தடவை சூடு வாங்குறப்போவும்.. எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வரும்.. ஏன் பொய் சொல்ல கூடாதுன்னு எரிச்சல் எரிச்சலா வரும்.. அடுத்த நாளே அம்மாகிட்ட ஒரு பத்து பொய்யாவது சொல்லி அவளை நல்லா ஏமாத்திடுவேன்.. செம ஜாலியா இருக்கும்.."

"ம்ம்.. அப்புறம்..?"

"அப்புறம் என்ன.. அந்த பத்து பொய்ல ஒரு பொய்.. அம்மாவுக்கு தெரிஞ்சு போயிடும்.. மறுபடியும் சூடு.. மறுபடியும் பத்து பொய்.."

"ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா..."

"சிரிக்காதடா..!! இப்டி பொய் பொய்யா சொல்லி சொல்லி.. வாயைத் தொறந்தா.. என் கண்ட்ரோல் இல்லாமலே.. பொய் பொலபொலன்னு கொட்டுது.."

"ம்ம்.. இதுவரை எத்தனை பொய் சொல்லிருக்க எங்கிட்ட..?"

"அது ஒரு பெரிய லிஸ்டே இருக்குது.. இப்டி திடீர்னு கேட்டா.. எல்லாத்தையும் எப்டி சொல்றது..?"

"வேற எப்படி கேக்கணும்..?"

"நீ ஒவ்வொன்னா சொல்லி சொல்லி கேளு.. நான் உண்மையா பொய்யான்னு சொல்றேன்.."

"ம்ம்.. நல்லாருக்கே இந்த வெளையாட்டு.. ஓகே.. ஆரம்பிக்கவா..?"

"ஆரம்பி.."

"உனக்கு புடிச்ச ஆக்ட்ரஸ் ஜூலியா ராபர்ட்ஸ்.."

"ட்ரூ.."

"ஆக்டர் எட்வர்ட் நார்ட்டான்.."

"ஃபால்ஸ்.. ரியான் கோஸ்லிங்.."

"ம்யூசிக் டைரக்டர் AR ரஹ்மான்.."

"எஸ்.."

"பிடிச்ச கலர் பிங்க்.."

"நோ.. லேவண்டர்.."

"பிடிச்ச கிரிக்கெட்டர் சச்சின்.."

"ஃபால்ஸ்.."

"என்னது..??? சச்சினை பிடிக்காதா..?"

"கிரிக்கெட்டே பிடிக்காது.."

"அடிப்பாவி.. காலைல நான் ஃபோன் பண்றப்போ.. ஹைலைட் பாத்துட்டு இருக்கேன்னு சொன்ன..?"

"சும்மா பொய் சொன்னேன்.."

"அப்புறம் என்ன பாத்துட்டு இருந்த..?"

"எதுவும் பாக்கலை.. அப்போதான் பெட்ல இருந்தே எழுந்தேன்.."

"அப்போ.. அதிகாலைல ஆறு மணிக்குலாம் எழுந்துட்டேன்னு சொன்னது..?"

"சுத்தப்பொய்.."

"எக்சாமுக்கு படிச்சேன்னு சொன்னது..?"

"பச்சைப்பொய்.."

"குளிச்சுட்டேன்னு சொன்னது..?"

"உன்கிட்ட சொன்னப்போ குளிக்கலை.. அப்புறமா குளிச்சுட்டேன்.."

"இதுவும் பொய்தான..?"

"ச்சீய்.. உண்மை.."

"இன்னைக்கு காலேஜுக்கு போனேன்னு சொன்னது..?"

"உண்மை.."

"ஒரு பையன் உனக்கு லவ் லெட்டர் கொடுத்தான்னு சொன்னது..?"

"பொய்.."

"ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குதுன்னு சொன்னது..?"

"பொய்.. பொய்.."

"ம்ம்ம்ம்... உனக்கு இன்னைக்கு பீரியட்ஸ்னு சொன்னது..?"

"பொய்.. பொய்.. பொய்.."

ஹாஹாஹா..!! இப்போது தெரிகிறதா.. இவளை நான் ஏன் தறுதலை என்று திட்டினேன் என்று..? இந்த மாதிரி ஒரு பெண்ணைத்தான் இத்தனை நாளாய் நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன். தினம் தினம் இவள்.. பொய் சொல்கிறாளா உண்மை சொல்கிறாளா என.. போராடுவதே எனக்கு பொழப்பாய் போயிற்று..!! சில்லித்தனமாய் கவி சொல்கிற பொய்கள்.. சில நேரங்கள் சிரிப்பை வரவழைத்தாலும்.. சில நேரங்களில் சினத்தையும் வரவழைக்கும்..!! எப்படி என்று கேட்கிறீர்களா..? சொல்கிறேன்..!!

இந்தக்கதை ஆரம்பித்த தினத்தில் இருந்து ஒரு இரண்டு மாதத்தில், என்னுடைய லவ் மேட்டர் என் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து போனது. எனது வீட்டில் என்னைத்தவிர அம்மா, அப்பா.. அப்புறம் என் தங்கை அனிதா. கவியின் மேட்டரை துப்பறிந்து வீட்டில் போட்டுக் கொடுத்தது, சாட்சாத் என் தங்கை அனிதாவேதான். நான் எதிர்பார்த்த மாதிரியே, வீட்டில் பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் கிளம்பவில்லை. அப்பாதான் கொஞ்ச நேரம் கவியின் குடும்பத்தை பற்றி துருவி துருவி விசாரித்தார். எல்லாம் தெரிந்த பிறகு அவரும் திருப்தியாக சம்மதித்தார்.

என் வீட்டில் எல்லோரும் கவியை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்டார்கள். அவளை ஒருநாள் வீட்டிற்கு கூட்டி வர சொன்னார்கள். நானும் விரைவில் அவளை அழைத்து வருவதாக அவர்களிடம் சொல்லியிருந்தேன்.

அதன் பிறகு இரண்டு வாரம் கழித்து, கவியின் பிறந்த நாள் வந்தது. ஆக்சுவலாக அதற்கு முந்தைய தினம் இரவு, நான் கவியுடன்தான் ஊர் சுற்றிக் கொண்டு இருந்தேன். ஆனால் அடுத்த நாளை பற்றி அவளிடம் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை. சர்ப்ரைசாக ஏதாவது செய்து அவளை அசத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

உங்களுக்கே தெரிந்திருக்கும்.. என்னுடைய வேலை கொஞ்சம் கடினமான வேலை. சைட் சைட்டாக அலைய வேண்டும். எட்டு மாடி, பத்து மாடி என்று படிக்கட்டில் ஏறி இறங்க வேண்டும். அதனால் தினமும் வீட்டை அடையும்போது, எக்கச்சக்கமாய் களைத்துப் போயிருப்பேன். பத்து மணிக்கு மேல், கண்களை திறந்திருப்பது மிகவும் கடினமான விஷயமாய் இருக்கும். அன்று நான் பனிரெண்டு மணி வரை விழித்திருந்தேன். அவளுக்கு பர்த்டே விஷ் சொல்வதற்காக..!!

பனிரெண்டு மணியானதும் செல் எடுத்து கவிக்கு கால் செய்தேன். கால் செய்தேன்.. கால் செய்தேன்.. செய்துகொண்டே இருந்தேன். ரிங் போய்க்கொண்டே இருந்தது. அவள் எடுக்கவே இல்லை. நன்றாக தூங்கிவிட்டாள் போலிருக்கிறது. ஆசையாக வாழ்த்து சொல்ல விழித்திருந்தவன், அரை மணி நேரத்திலேயே வெறுத்துப் போனேன். எரிச்சலாக செல்போனை தூக்கி எறிந்துவிட்டு, இறுதியாக ஒரு கொட்டாவியை வெளியிட்டுவிட்டு, மெத்தையில் விழுந்து உறங்கிப் போனேன்.

அடுத்த நாள் காலையில் எழுந்தபோது, வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அத்தை (அப்பாவின் தங்கை), மாமா (அத்தை மீது பயம் ஜாஸ்தி), அத்தை பெண் நித்யா (என் மீது ஒரு கண் அவளுக்கு). நான் குளித்து முடித்து வெளியே வந்த போது, மொத்த குடும்பமும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். அம்மா ப்ரேக் பாஸ்டுக்கு அழைத்தாள். 'இதோ வருகிறேன்..' என்று எஸ்கேப் ஆகி, நான் பால்கனி வந்தேன். மீண்டும் கவிக்கு கால் செய்தேன். இந்த முறை இரண்டே நிமிடத்தில் பிக்கப் செய்தாள்.


"ஹலோ..." என்றாள் தூங்கி வழியும் குரலில்.

"ஏய்.. லேஸிலேடி.. பொறந்த நாளும் அதுவுமா.. இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்குற..?" என்றேன் நான் எரிச்சலும், கிண்டலுமாய்.

"யாருக்கு பொறந்த நாளு..?" அவள் 'யாரு கர்ப்பம்..' என்று தேவயானி கேட்பது போல கேட்டாள்.

"உனக்குத்தான்டி அறிவு கெட்டவளே..!! விஷ் யூ மெனி மோர் ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே..!! லவ் யூ டியர்.. உம்மாஆஆஆ...!!" நான் ரொமான்டிக்காக பேச,

"இன்னைக்கு எனக்கு பொறந்த நாளுன்னு.. உனக்கு யார் சொன்னா..?" அவள் சுரத்தே இல்லாமல் கேட்டாள்.

"நீதானடி சொன்ன..? செப்டம்பர் செவன்டீன்த்.."

"அது சும்மா பொய் சொல்லிருப்பேன்.. என் பொறந்த நாளு போன வாரமே போயிடுச்சு..!! இதுக்காகத்தான்.. சண்டேயும் அதுவுமா.. காலங்காத்தால.. நிம்மதியா தூங்குற புள்ளையை.. டிஸ்டர்ப் பண்ணுனியா..?"

அவள் சொல்ல சொல்ல, எனக்கு அவள் மீது அப்படியே ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அவள் மட்டும் அப்போது என் எதிரில் இருந்திருந்தால், 'பொளேர்.. பொளேர்..' என கன்னம் வீங்கும் அளவிற்கு கொடுத்திருப்பேன். போனில் என்ன செய்வது..? ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, அமைதியான குரலில் கேட்டேன்.

"ஓஹோ..? மகாராணியோட தூக்கத்தை கெடுத்திட்டனோ..?"

"எஸ்..!!!"

"ஓகே மகாராணி.. நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்க.. நான் அப்புறமா பேசுறேன்..!!"

அவளுடன் இன்னும் பத்து நாளைக்காவது பேசக்கூடாது என்ற முடிவுடன் காலை கட் செய்தேன். அடக்க முடியாத ஆத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தேன். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டே, மூன்று நான்கு இட்லிகளை முழுங்கினேன். வந்தவர்களிடம் கூட முகம் கொடுத்து பேசாமல், என் ரூமுக்குள் சென்று முடங்கிக் கொண்டேன். லேப்டாப்பை எடுத்து நோக்கமே இல்லாமல் எதை எதையோ படபடவென தட்டினேன்.

மனதுக்குள் கவியின் மீது டன் கணக்கில் கோபம். ச்சே.. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒருத்தி காதலியாக வந்து வாய்த்தாள்..? காதலியின் பிறந்த நாள் எந்த காதலனுக்குமே ஸ்பெஷலான விஷயம்தானே..? அன்று என்னென்னவெல்லாம் செய்து அவளை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று அவன் ஆசைப்படுவான்..? அந்த நாளை பொய் சொல்லி ஏமாற்றியிருக்கிறாளே..? இதில் போன வாரந்தான் அந்த நாள் போனது என்பது எக்ஸ்ட்ரா எரிச்சல்..!! அதிலும் தூக்கத்தை கெடுத்துவிட்டேன் என்று அவள் பதிலுக்கு என் மீது பாய்ந்ததில், ஆத்திரத்தின் உச்சிக்கே நான் சென்றிருந்தேன்.


கொஞ்ச நேரத்தில் அப்பாவும், மாமாவும் வெளியே சென்றுவிட, பெண்கள் அனைவரும் என் ரூமிற்கு வந்தார்கள். 'நீ லவ் பண்ற பொண்ணை பாக்கணும் போல இருக்கு அசோக்.. போய் கூட்டிட்டு வாயேன்..' என்றார்கள். நான் கவி மீது கோபத்தில் இருப்பதையோ, அவள் இந்நேரம் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருப்பதையோ அவர்களிடம் சொல்ல முடியுமா..? 'அவள் இன்னைக்கு கொஞ்சம் பிஸியா இருப்பா..' என்று சமாளித்துப் பார்த்தேன். அவர்கள் கேட்பதாக இல்லை. 'கொஞ்ச நேரந்தானே.. அதுமில்லாம சண்டே என்ன பிஸி..?' என்றார்கள்.

அதிலும் அந்த நித்யா, கவியை பார்ப்பதில் படு ஆர்வமாக இருந்தாள். 'நாளைக்கு நாங்க ஊருக்கு போயிடுவோமே அத்தான்.. இன்னைக்கே கூட்டி வாங்க..' என்றாள். 'எங்கிட்ட இல்லாதது அப்டி என்ன அவகிட்ட இருக்குனு நான் பாத்தாகணும்..' என அவள் மனதுக்குள் நினைத்ததை என்னால் தெளிவாக உணர முடிந்தது. எனக்கும் அது ஒரு கவுரவப்பிரச்னை மாதிரி ஆகிப் போனது. கவியை கூட்டி வந்து, அவள் அழகை ஒருமுறை பார்த்தால், இந்த நித்யாவின் பித்தம் தெளியும் என்று தோன்றியது. ஒத்துக் கொண்டேன். தனியாக வந்து கவிக்கு கால் செய்தேன்.

"ஒய்.. என்ன பண்ணிட்டு இருக்குற..?" கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டேன்.

"நேத்து மேட்ச்சோட ஹைலைட் பாத்துட்டு இருக்குறேன்.."

"செருப்படி விழும்.."

"ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா..."

"இளிக்காத... கடுப்புல இருக்குறேன்.."

"என்னாச்சுடா செல்லம்..? பர்த்டே பொய் சொல்லிட்டேன்னு கோவமா..?"

"அதுக்கெதுக்கு கோவப்படனும்..? சந்தோஷந்தான் எனக்கு.."

"சந்தோஷமா..?"

"ஆமாம்..!! உன் பர்த்டேக்கு உனக்கு ஏதாவது பட்டுப்பொடவை எடுத்துத் தரலாம்னு நெனச்சேன்.. எக்கச்சக்கமா செலவாயிருக்கும்.. நல்லவேளை..!! எல்லாம் மிச்சம் இப்போ..!!"

"பொடவையா..? ப்ளீஸ் அசோக்.. வாங்கித்தா அசோக்..!! எனக்குத்தான் போனவாரம் பர்த்டே வந்துச்சுல..?"

"நீதான் அதை சொல்லவே இல்லைல..? ஒன்னும் கெடயாது போ..!! பொய் சொன்ன வாய்க்கு போஜனம் இல்லைன்னு சொல்வாங்க.. பொய் சொன்ன பொண்ணுக்கு பொடவையும் இல்லை..!! போ..!!"

"என்ன நீ.. சும்மா சும்மா.. பொய் சொல்லிட்டேன் பொய் சொல்லிட்டேன்னு பொலம்புற.. அப்டி என்ன பெருசா பொய் சொல்லிட்டேன்.. நான் இதுவரை சொன்ன பொய்னால.. யாருக்காவது எங்கயாவது.. நல்லது கூட நடந்திருக்கலாம்..!! ஆனா இதுவரை யாருக்கும் எந்த கெடுதலும் நடந்தது இல்லை தெரியுமா..? எல்லாமே ஸ்வீட் லைஸ்...!! சும்மாவா திருவள்ளுவர் சொல்லிட்டு போயிருக்காரு..?"

"திருவள்ளுவரா..? அவரு என்ன சொன்னாரு..?" நான் குழப்பத்துடன் கேட்டேன்.

"பொய்மையும் வாய்மையிடத்து - இஃப் இட் இஸ் கமிங் ஃப்ரம் கவியின் வாய்..!! அப்டி சொல்லிருக்காருல..?" அவள் சீரியசான குரலில் சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா"

"ஹையா.. ஒருத்தன் சிரிச்சுட்டான்பா.." அடுத்த முனையில் கவியும் குதூகலித்தாள்.

"போடீ லூசு.. கோவமா இருக்குறப்போ.. இப்டி ஏதாவது லூசுத்தனமா பேசி.. சிரிக்க வச்சிடு.."

"ஹாஹா.. கோவம் போயிடுச்சா..?"

"ம்ம்.. போயிடுச்சு.."

"ஹை.. ஜாலி ஜாலி.."

"சரி சரி.. சொல்றதை கேளு.. இப்போ நீ.. உடனே கெளம்பி என் வீட்டுக்கு வரணும்.."

"ஏன்..?"

"எங்க வீட்டு பொண்ணுகளுக்கு உன்னை பாக்கணுமாம்.. ஊர்ல இருந்து அத்தையும், அந்த நித்யாவும் வந்திருக்காங்க.."

"ஓ.. என் சக்களத்தி வந்திருக்காளா..?"

"ஆமாம்.. வந்து உன் அசட்டு மூஞ்சியை கொஞ்சம் காட்டிட்டு போ.."

"ம்ம்.. ஓகே.. வீட்டுக்கே வந்துடவா..?"

"திரு.வி.க. பார்க் வந்துடு.. நான் அங்க வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.."

"சரிடா.." அவள் காலை கட் செய்யப் போவது போல சொல்ல, நான் அவசரமாக தடுத்தேன்.

"ஹேய்.. இருஇரு.."

"என்ன..?"

"கொஞ்சம் டீசண்டா ட்ரஸ் பண்ணிட்டு வாடி.. இந்த டைட் ஜீன்ஸ், தொப்புள் தெரியிற டாப்ஸ்லாம் வேணாம்..!! பொடவை கட்டிட்டு வா..!!"

"எனக்கு பொடவை கட்ட தெரியாதே.."

"கிழிஞ்சது.. அப்புறம் எதுக்கு பட்டுப்பொடவைலாம் கேட்ட நீ..? சரி.. ஏதாவது சுடிதார் மாட்டிட்டு வா.."

"ஓகே.. டன்.."

ஒரு மணி நேரம் கழித்து நான் கார் எடுத்துக் கொண்டு, திரு.வி.க பார்க் சென்றேன். கவிக்காக காத்திருந்தேன். ஒரு பத்து நிமிடத்தில் அவள் ஆட்டோவில் வந்து இறங்கி எனக்கு அதிர்ச்சி கொடுத்தாள். அதிர்ச்சிக்கு காரணம் ஆட்டோவில் வந்தது அல்ல.. அவள் அணிந்து வந்தது..!! புடவை..!!!! தங்க நிறத்தில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு, கூந்தலை இழுத்துக்கட்டி பின்னல் இட்டு, தலை நிறைய மல்லிகைப்பூ சூடிக்கொண்டு, மணப்பெண் மாதிரி வந்து நின்றாள்.


"என்னடி இது..???? கும்முன்னு வந்து நிக்கிற..? பொடவை கட்ட தெரியாதுன்னு சொன்ன..?"

"அது சும்மா பொய் சொன்னேன்.." அவள் கூலாக சொன்னதை கேட்டு நான் முறைக்க, அவள்

"சரிசரி.. ஆரம்பிச்சுடாத.. காரை ஸ்டார்ட் பண்ணு.. கெளம்பலாம்.." என்று எஸ்கேப் ஆனாள்.

"எங்கிட்ட பேசுற மாதிரி.. அங்கயும் வந்து லூசு மாதிரி உளறிட்டு இருக்காத..!! உன்னைப் பாத்து.. அங்க எல்லாரும் ஃப்ளாட் ஆகணும்.. அந்த மாதிரி நடந்துக்கணும்.. சரியா..?"

நான் அவளை எச்சரித்தவாறே காரை ஸ்டார்ட் செய்தேன். ஐந்தே நிமிடத்தில் என் வீட்டை அடைந்தோம். கவி வீட்டுக்குள் நுழைந்ததுமே, அம்மாவின் காலிலும், அத்தையின் காலிலும் விழுந்து நமஸ்காரம் செய்து எல்லோரையும் மிரள வைத்தாள். என்னையுந்தான்..!! ரொம்ப வெட்கப்படுபவள் மாதிரி ஆக்டிங் கொடுத்தாள். அனிதாவுக்கு கூட 'வாங்க.. போங்க..' என்று மரியாதை கொடுத்தாள். எல்லோரிடமும் எளிறுகள் தெரிய, இளித்து இளித்து பேசினாளே ஒழிய, என்னை தவறியும் கூட ஏறெடுத்து பார்க்கவில்லை. நானே வாயடைத்துப் போனவன் மாதிரி ஆனேன்.

நித்யாவை தவிர எல்லோருக்கும் கவியை சட்டென பிடித்துப் போனது. ஆமாம்.. அத்தைக்கும் சேர்த்துத்தான்..!! கவியின் குடும்பம், படிப்பு, வீட்டு பழக்க வழக்கங்கள் என்று எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்கள். வெட்கப்படும் அவளை தொட்டு தொட்டு பார்த்தார்கள். 'அண்ணீ.. அழகா இருக்குறீங்க அண்ணீ..' என்று அனிதா அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள். பாவம் நித்யா..!! பொறாமையில் அவள் பொசுங்குவது அவளுடைய முகத்திலேயே நன்றாக தெரிந்தது.

கவியை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது. 'பரவால்லையே.. வெவரமாத்தான் இருந்திருக்கா' என்று தோன்றியது. எல்லோரிடமும் திரும்பி திரும்பி பேசிக்கொண்டிருந்த, கவியின் முகத்தையே நான் ரகசியமாக ரசித்துக் கொண்டிருந்தேன். முக்கியமாய் அவளது தேனூறும் உதடுகளை..!! பேசுவதற்காக ஸ்லோமோஷனில் அசைந்த அந்த உதடுகள், எனக்குள் ஆசைத்தீயை மூட்டின. உடனடியாய் அந்த உதடுகளில் முத்தமிட வேண்டும் போல் இருந்தது எனக்கு. என்ன செய்வது..?

நான் மெல்ல நழுவி, கிச்சனுக்கு சென்றேன். ஹாலில் இருந்து அவர்களுடைய சலசல பேச்சு அடங்கும் வரை, கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அப்புறம் அத்தை அவளுடைய குடும்பத்தை பற்றி எதோ பேச ஆரம்பிக்க, அதுதான் சரியான சமயம் என்று எனக்கு தோன்றியது. கிச்சனுக்குள் இருந்தபடி, ஹாலை நோக்கி கத்தினேன்.

"கவி.... இங்க கொஞ்சம் வாயேன்..!!"

உடனே கவி எதோ அம்மாவிடம் கேட்பதும், அவள் கவியை எழுந்து போக சொல்வதும், கவி எழுந்து நடந்து வரும் சத்தமும் கேட்டது. நான் கவி வரும்வரை பொறுமையில்லாமல் காத்திருந்தேன். வந்ததுமே அவளுடைய இடுப்பில் கைபோட்டு இழுத்து, என்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவளது மார்புத்திரட்சிகள் கூர்மையாய் என் நெஞ்சை நச்சென்று குத்த, அவள் 'ஆ...!!!!' வென வாய் திறந்து கத்தப் போனாள். நான் அவளை கத்தவிடாமல் செய்தேன். திறந்த அவளுடைய வாயை எனது வாய் வைத்து மூடினேன். உறிஞ்சினேன்..!!!

எதிர்பாராத தாக்குதலால், முதலில் லேசாக திமிறிய கவி, பின்பு அடங்கினாள். அமைதியாக என்னுடன் ஒத்துழைத்தாள். அவளுடைய கன்னத்தை இரண்டு புறமும் தடவியபடி, நான் அவளுடைய இதழ்களில் கள்ளருந்த, அவளோ நான் சுவைத்து முடிக்கும்வரை என் மார்பைத் தடவியபடி காத்திருந்தாள். கவ்வியிருந்த உதடுகளை விடுவிக்க மனமில்லாதவனாய், நான் மெல்ல மெல்ல அவ்வுதடுகளிடமிருந்து விலகினேன்.

"இதுக்குத்தான் உள்ள கூப்பிட்டியா..?" அவள் ஹஸ்கியான வாய்சில் கேட்டாள்.


"ம்ம்ம்... ஆமாம்.." சொல்லிக்கொண்டே நான் அவளுடய இடுப்பில் கை போட்டேன்.

"ஐயோ.. விடு.. யாராவது வந்துரப் போறாங்க.." அவள் என் கையை தள்ளிவிட்டாள்.

"அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க.. டோன் வொர்ரி.." இப்போது என் கை மீண்டும் அவள் இடுப்பில்.

"ம்ம்ம்.. எப்படி.. நீ எக்ஸ்பெக்ட் பண்ணின மாதிரி நடந்துக்கிட்டேனா..?"

"கலக்கிட்டடி.. சான்சே இல்லை.. எல்லாருக்கும் உன்னை ரொம்ப புடிச்சுப் போச்சு..!!"

"அதுதான் கவி..!!" அவள் பெருமையுடன் கண் சிமிட்டினாள்.

"ம்ம்ம்.. அடுத்து எல்லாருக்கும் ஒரு நாக்-அவுட் பஞ்ச் கொடுத்து.. டோட்டலா ஃப்ளாட் ஆக்கிடலாமா..?"

"நாக்-அவுட் பஞ்ச்சா..? என்ன அது..?"

"இரு.. சொல்றேன்.."

நான் அவளிடம் இருந்து விலகினேன். கப்போர்ட் திறந்து, சில பொருட்கள் எடுத்து, வெளியே வைத்தேன். கேரட்.. பால்.. நெய்.. சுகர்.. ஏலக்காய்..!! நான் செய்வதை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்த கவி, எதுவும் புரியாமல் அக்குழப்பத்துடனே கேட்டாள்.

"என்ன அசோக் பண்ற..?"

"நான் எதுவும் பண்ண போறதில்லை.. நீதான் பண்ண போற..!!"

"நானா..? நான் என்ன பண்ண போறேன்..?"

"இங்க பாரு கவி.. எங்க வீட்ல எல்லாருக்கும் கேரட் அல்வான்னா உசுரு..!! அந்த நித்யா இருக்கால்ல.. அவ சமையல்ல எக்ஸ்பர்ட்..!! அவளை மாதிரி சமைக்கிறதுக்கு யாரும் இல்லைன்னு.. எங்க ஃபேமிலில ஆளாளுக்கு அவளை புகழ்வாங்க.. இன்னைக்கு நீ அவளை அடிச்சு காலி பண்ற..!! நீ பண்ற கேரட் அல்வா, அவ பண்றதை விட பிரம்மாதமா இருக்கணும்.. சாப்பிட்டு எல்லாரும் அப்டியே உன்கிட்ட சரண்டர் ஆயிடனும்.. ஓகேவா..?" நான் பேசிக்கொண்டே போக, அவள் பேதி மாத்திரை சாப்பிட்டவள் மாதிரி கலவரமாய் பார்த்தாள்.

"அ..அசோக்.."

"ம்ம்.."

"எ..எனக்கு.."

"உனக்கு..?"

"கே..கேரட் அல்வாலாம் பண்ணத் தெரியாது.."

அவ்வளவுதான்..!!!! அத்தனை நேரம் என்னிடம் இருந்த மொத்த உற்சாகமும் ஒரே நொடியில் காணாமல் போனது. முழுவதும் மலர்ச்சியாய் இருந்த என் முகம், பட்டென வாடிப் போனது.

"வெ..வெளையாடாத கவி.."

"வெளையாடலை அசோக்.. சத்தியமா எனக்கு அதெல்லாம் பண்ண தெரியாது.. என் வீட்டுல.. நான் கிச்சன் பக்கமே போனது கெடயாது..!! சுடு தண்ணி கூட வச்சது கெடயாது..!! கேரட் அல்வா பண்ண தெரியும்னு.. உன்கிட்ட சும்மா.."

"பொய் சொன்ன..??" நான் கண்களில் கோபம் கொப்பளிக்க கேட்க,

"ம்ம்ம்.." அவள் மிரட்சியாய் என்னை பார்த்தபடி சொன்னாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஓடி ஆடிக் களைத்துப் போன மாதிரி ஒரு உணர்வு..!! நித்தம் நித்தம்.. எத்தனை பொய்கள்.. எத்தனை பொய்கள்..??? ஒவ்வொரு நாளும் இவளுடன் நான் படும் பாடு..!! ச்சே..!! பைத்தியம் பிடித்துவிடும்போல் தோன்றியது..!! மனதுக்குள் குபுகுபுவென அவள் மீது ஆத்திரம் பொங்க, அதை அடக்கிக்கொண்டு நான் அமைதியாக சொன்னேன்.

"நீ எங்கிட்ட சொன்னதை நம்பி.. நான் என் வீட்ல எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிட்டேண்டி..!! கவி அல்வா பண்ணினா.. டெல்லியே ஜொள்ளு விடும்னு..!! அங்க பாரு.. எல்லாரும் நீ சமைச்சு தரப்போற அல்வாவுக்காக.. நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு உக்காந்துட்டு இருக்குதுங்க.. இப்போ அதுங்ககிட்ட போய்.. நான் என்ன சொல்றது..? 'நான் கட்டிக்கப் போறவ ஒரு பொய் மூட்டை.. அவ வாயை தொறந்தாலே வந்து விழுறதுலாம் பொய்தான்.. அல்வா சூப்பரா பண்ணுவேன்னு அவ சொன்னதும் அந்த மாதிரி வந்து விழுந்ததுதான்'னு போய் சொல்லவா..? ம்ம்..?"

அடக்கி வைத்த கோபம் பொத்துக்கொண்டு என் வார்த்தைகளில் வந்து விழுந்தது. இத்தனை நாளாய் அவள் என்னிடம் சொன்ன சின்ன சின்ன பொய்கள்.. எனக்குள் ஏற்படுத்தியிருந்த சின்ன சின்ன எரிச்சல்கள் எல்லாம்.. மொத்தமாய் சேர்ந்து விஸ்வரூபம் எடுத்து நின்றிருந்தன. இதுவரை அவள் சொன்ன பொய்கள் எனக்குள் கோபத்தை மூட்டியிருந்தாலும், அதையெல்லாம் அடக்கிக் கொள்வேன். இன்று இவள் சொன்ன பொய்யால், அடுத்தவர்களிடம் நான் அவமானப் படப்போவதை எண்ணும்போது, எனது கோபம் எல்லை மீறியது.

"சொல்லுடி.." கத்தினேன்.

"அ..அசோக்.." கவி என் கோபத்தில் சற்றே ஆடிப் போயிருந்தாள்.

"எனக்கு அதெல்லாம் தெரியாது.. இப்போ நீ கேரட் அல்வா பண்ற.. எடு.. கேரட்டை கட் பண்ணு.."

"அ..அசோக்.. ப்ளீஸ்.."

"பண்ணுன்னு சொல்றேன்ல.. பண்ணு..!!" எனது ஆத்திரம் அதிகமாகிக் கொண்டே சென்றது.

"எ..எனக்கு தெரியாது.."

"அப்புறம் என்ன இதுக்கு தெரியும்னு பொய் சொன்ன..?"

பொங்கிவந்த கோபத்தை அடக்க முடியாமல் நான் பெருங்குரலில் கத்திவிட்டேன். கவி மிரண்டு போய் சுவற்றோடு சென்று ஒட்டிக் கொண்டாள். சத்தம் கேட்டு இப்போது மற்ற பெண்கள் எழுந்து, கிச்சனுக்கு ஓடி வந்தார்கள். நாங்கள் நின்றிருந்த நிலையை பார்த்து அம்மாதான் முதலில் பதறிப் போய் கேட்டாள்.

"என்னப்பா.. என்னாச்சு..?" அம்மா கேட்டு முடிக்கும் முன்பே, கவி அவளுடைய முதுகுக்கு பின்னால் சென்று பம்மினாள்.

"ஆன்ட்டி.. நா..நான்.. எ..எனக்கு சமைக்கலாம் தெரியாது.. தெரியும்னு அசோக்கிட்ட சும்மா பொய் சொல்லிருந்தேன்.."

"ஓ.. இவ்ளோதானா..? ஏண்டா.. இதுக்கா போய் கொழந்தையை திட்டுற..? ஏதோ.. சின்னதா ஒரு பொய் சொல்லிட்டா.." அம்மா என் மீது பாய, எனக்கு ஆத்திரம் இரு மடங்கானது. இப்போது அவளிடம் சீறினேன்.

"ஒரு பொய்யா..? அவ உடம்பு பூரா பொய்ம்மா.. உனக்கு ஒன்னும் தெரியாது... நீ சும்மா இரு.." சொன்னவன் அம்மாவின் முதுகுக்கு பின்னால் நின்றிருந்த கவியின் புஜத்தை பற்றி இழுத்தேன்.

"ஏய்.. வாடி.. கேரட் அல்வா பண்றதுல என்னை மிஞ்ச ஆளே இல்லைன்னு வாய் கூசாம பொய் சொன்னேல.. ஒழுங்கா இப்போ எனக்கு பண்ணிக்கொடு.."

"தெ..தெரியாது அசோக்.." அவள் பரிதாபமாக சொல்ல,

"பண்ணுடி..!!" நான் பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினேன். நிலைமை புரியாமல் நித்யா உள்ளே நுழைந்தாள்.

"அத்தான்.. உங்களுக்கு என்ன இப்போ.. கேரட் அல்வா சாப்பிடனும் அவ்ளோதானா..? விடுங்க.. நான் பண்ணித் தர்றேன்.." அவள் சொல்ல, நான் இப்போது டென்ஷன் ஆகி, நித்யாவை அறைய கை ஓங்கினேன்.

"அப்டியே அறைஞ்சிடுவேன் நித்யா.. உன் வேலைய பாத்துட்டு போ.." சொன்னவன் மீண்டும் கவியிடம்,

"ஏய்... இப்போ பண்ண போறியா.. இல்லையா..?" என்றேன் கோபமாய். இப்போது கவி அழ ஆரம்பித்திருந்தாள். அவள் கண்களில் இருந்து நீர் வெளிப்பட்டு, கன்னங்களில் இறங்கி ஓடியது.

"எ..எனக்கு பண்ண தெரியாது அசோக்.." என்றாள் அழும் குரலில்.

"பண்ண தெரியாதுல.. அப்போ வீட்டை விட்டு வெளில போ..!!"

கொடூரமான குரலில் நான் சொன்னதை கேட்டு பெண்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். கவியின் கண்களில் நீர் பொலபொலவென கொட்ட ஆரம்பித்தது. 'அண்ணா.. என்னண்ணா நீ..?' என்று அனிதா என் புஜத்தில் குத்தினாள். அம்மா கோபமாக என்னிடம் சீறினாள்.

"அசோக்.. என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா..? அவ எதோ வெளையாட்டுத்தனமா பொய் சொன்னதுக்கு.. இப்டி அவளை அவமானப் படுத்துற..?"

"ப்ச்.. உனக்கு சொன்னா புரியாதுமா.. டெயிலி இவ சொல்ற பொய்யை கேட்டு கேட்டு.. நான் நொந்து போயிட்டேன்..!! எவ்வளவு பொய் சொல்லிருக்கா தெரியுமா..? வாயைத் தெறந்தாலே பொய் பொய் பொய்..!! ஒருநாள்.. என்னை லவ் பண்றதே ஒரு பெரிய பொய்னு சொன்னாலும் சொல்வா இவ..!!"

நான் பெரிய குரலில் கத்த, அனைவரும் வாயடைத்துப் போனார்கள். கவி கண்களில் நீர் வழிய, சிலை மாதிரி நின்றிருந்தாள். அடிபட்ட மான் மாதிரி மருட்சியாக என்னை பார்த்தாள். நான் கோபம் கொஞ்சமும் குறையாதவனாய் சொன்னேன்.

"இவகூடலாம் என்னால வாழ முடியாதும்மா.. இவ உண்மை சொல்றாளா.. பொய் சொல்றாளான்னு தெரியாம.. தலையை பிச்சுக்கிட்டு பைத்தியம் ஆயிடுவேன் நான்.."

"அசோக்.. என்னடா நீ.. இப்டி பேசுற.." அம்மா என்னிடம் கெஞ்சும் குரலில் சொல்ல, நான் அவளை மதியாமல் அருகில் நின்ற கவியின் புஜத்தை பற்றினேன்.

"ஏய்.. வெளில போன்னு சொல்றேன்ல.. வெளில போ..!!"

புஜத்தை பற்றி அவளை தரதரவென வாசலுக்கு இழுத்து சென்றேன். 'ப்ளீஸ் அசோக்.. இனிமே நான் பொய்யே சொல்ல மாட்டேன்.. ப்ளீஸ்..' அவள் கெஞ்சிக்கொண்டே வந்தாள். என் மனதில் அவள் மீது கொஞ்சம் கூட இரக்கமே வரவில்லை. வாசல் கதவை திறந்து, அவளை வெளியே தள்ளினேன்.

"இன்னைல இருந்து உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. போ..!! என் மூஞ்சிலையே முழிக்காத..!!"

அவளை சமாதானப் படுத்த, வெளியே செல்ல முயன்ற என் வீட்டுப் பெண்களை நான் தடுத்தேன். 'இது என் லைஃப் சம்பந்தப்பட்ட விஷயம்.. தயவு செஞ்சு யாரும் தலையிடாதீங்க..' என்று நான் கத்த, எல்லோரும் அப்படியே உறைந்து போனார்கள். கவி கலங்கிய விழிகளுடன் கொஞ்ச நேரம் என்னையே பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் புறங்கையால் கண்களை துடைத்துவிட்டு, திரும்பி மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.

அப்புறம் ஒரு.. ஒரு வாரம்.. கவி அடிக்கடி என் செல்போனுக்கு கால் செய்தாள். நான் பிக் செய்யவே இல்லை. நிமிஷத்துக்கு ஒரு SMS அனுப்பினாள். படிக்கும் முன்பே அதை டெலீட் செய்தேன் நான். அவள் மேல் அவ்வளவு கோபத்தில் இருந்தேன். கவி மீது நான் கொண்டிருந்த காதல், தென்றலாய் அவ்வப்போது என் மனதை வருடி, அவளுடன் என்னை பேச சொல்லி தூண்டினாலும், அவள் என்னிடம் சொன்ன பொய்கள் ஏற்படுத்திய எரிச்சல், மிக அதிகமாயிருந்தது. அவளைக் கட்டிக்கொண்டு தினம் தினம் மண்டை காய்வதை விட, இப்போது கொஞ்சநாள் வலி தாங்கலாம் என்று தோன்றியது. 'அவள் உனக்கு வேண்டாம்..!!' என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொண்டேன்.

அப்போதுதான் ஒருநாள் காலை.. நான் என் ஆபீசில், என்னுடைய ப்ரைவேட் ரூமில் இருந்தேன். வரவிருக்கும் ஒரு கான்ட்ராக்ட்டுக்காக எஸ்டிமேட் ப்ரிப்பேர் செய்து கொண்டிருந்தேன். ஆபீஸ் ரிஷப்ஷனிஸ்ட் சுதா இன்டர்காமில் அழைத்தாள். எடுத்து பேசினேன்.

"ஸார்.. கடக்கரை மேஸ்திரி வந்திருக்காரு.. உங்களை பாக்கணுமாம்.."

"என்னவாம்..? அதான் பேமன்ட்லாம் கொடுத்தாச்சுல..?"

"இல்ல ஸார்.. அவரு பொண்ணுக்கு கல்யாணமாம்.. இன்விடேஷன் கொடுக்க வந்திருக்காரு.."

"ஓஹோ.? சரி.. வர சொல்லு.."

சொல்லிவிட்டு நான் ரிசீவரை வைத்தேன். மீண்டும் அந்த எஸ்டிமேஷன் சார்ட் மீது பார்வையை வீசினேன். தனித்தனியாய் இருந்த அமவுண்டுகளை, கால்குலேட்டரில் போட்டு கூட்டினேன். ரூம் கதவு தள்ளப்பட்டதும் நிமிர்ந்தேன். கடற்கரை உள்ளே நுழைந்தார். கூடவே கவியும்..!! உள்ளே நுழைந்ததும் இருவரும் என்னைப் பார்த்து 'ஈஈஈஈஈ..' என இளித்தார்கள். நான் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல், ஓரிரு வினாடிகள் அவர்களை பார்த்தேன். அப்புறம் இன்டர்காம் எடுத்து சுதாவை அழைத்தேன்.


"சொல்லுங்க ஸார்.."

"உன்னை நான் கடக்கரையை மட்டுந்தான உள்ள அனுப்ப சொன்னேன்..?"

"அவரோட பொண்ணு கையாலயே இன்விடேஷன் கொடுக்கணும்னு ஆசைப்பட்டாரு.. அதான் அந்தப் பொண்ணையும் அனுப்பினேன்.."

நான் இப்போது நிமிர்ந்து என் எதிரில் நின்றவர்களை ஒருமுறை பார்த்தேன். தாரில் குளித்துவிட்டு வந்த மாதிரி கருகருவென் கடற்கரையும், தங்கத்தில் முலாம் பூசிக்கொண்டவள் மாதிரி தகதகவென கவியும், பக்கத்தில் நிற்கும்போதே படு கான்ட்ராஸ்ட்டில் காட்சியளித்தார்கள். நான் மீண்டும் இன்டர்காமில் சுதாவிடம் கேட்டேன்.

"எவ்ளோ சம்பளம் வாங்குற நீ..?"

"ஏழாயிரம்..!! ஏன் ஸார்..?" அடுத்த மாதத்தில் இருந்து ஆறாயிரந்தான் என்று நான் மனதுக்குள் சொன்னவாறு,

"ஒண்ணுல்ல.. இந்தப் பொண்ணைப் பாத்தா.. கடக்கரையோட பொண்ணு மாதிரியா தெரியுது..?" என கேட்டேன்.

"எனக்கும் அந்த டவுட்டு வந்தது ஸார்.. அந்த பொண்ணுட்ட கேட்டேன்.. அவ அவங்க அம்மா ஜாடைன்னு சொன்னா.."

"ஓ..!! வேற என்ன சொன்னா..?"

"அவங்கம்மா எட்டயபுரம் ஜமீன் பரம்பரைல பொறந்தவங்களாம் ஸார்.. ஐஸ்வர்யா ராய் மாதிரி அவ்வளவு அழகா இருப்பாங்களாம்.. அவங்களை கட்டிக்க சுத்துப்பட்டு எல்லா ஜமீனும்.. நீ நான்னு போட்டி போட்டாங்களாம்..!! ஒருதடவை நம்ம கடக்கரை மேஸ்திரி.. வேலை விஷயமா.. அவங்க அரண்மனைக்கு போயிருக்குறப்போ.."

அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நான் ரிசீவரை அறைந்து சாத்தினேன். மீண்டும் கடற்கரையையும் கவியையும் நிமிர்ந்து பார்த்தேன். இப்போது கடற்கரை வாயெல்லாம் பல்லாக, என்னை சமாதானப் படுத்தும் குரலில் சொன்னார்.

"இன்னா ஸார் நீ.. பாப்பாவாண்ட பைட்டு வுட்டுக்கினியாமே..? போன் பண்ணா எட்க கூட மாட்டின்றியாம்.. பாவம் ஸார் பாப்பா.. ஓ'ன்னு அழுவுது.. இந்த ஒருதபா மன்னிச்சு வுட்று ஸார்.."

"இங்க பாரு கடக்கரை.. நான் கன்னாபின்னான்னு திட்றதுக்கு முன்னாடி.. இங்க இருந்து போயிடு.."

"நான் போறேன் ஸார்.. நீ பாப்பா கூட கொஞ்சம் மன்சு வுட்டு பேசு.. போ பாப்பா.. போ... பேசு போ.."

கவியை முன்னால் தள்ளி விட்டுவிட்டு, கடற்கரை கதவு திறந்து வெளியேறினார். அவள் பால் குடிக்க தெரியாத பூனை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, பவ்யமாக எனக்கு முன்னால் வந்து அமர்ந்தாள். நான் எதுவும் சொல்லாமல், சற்றே எகத்தாளமாய் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள்.

"ஸா..ஸாரி அசோக்.."

"ம்ம்.. அப்புறம்..?"

"நான் இனிமே பொய்யே சொல்ல மாட்டேன்.."

"சரி.. அப்புறம்..?"

"இன்னும் என்மேல கோவம் போலையா..?"

"கோவமா..? உன்மேல கோவப்பட நான் யாரு..?" நான் கேட்டதும் கவியின் கண்ணில் முணுக்கென்று ஒரு துளி கண்ணீர் வந்து எட்டிப் பார்த்தது.

"ப்ளீஸ் அசோக்.. இப்டிலாம் பேசாதடா.. நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா..?"

"எவ்வளவு..? இதுவரை நீ எங்கிட்ட சொன்ன பொய்ல.. ஒரு பத்து பர்சன்ட் இருக்குமா..?"

"ஏண்டா இப்டி பேசுற..? என் லவ்வையே சந்தேகப்படுறல..?"

"எப்டி நம்ப சொல்ற..? இன்னைக்கு ஒரு விஷயத்தை அப்டியே உண்மை மாதிரி சொல்ற.. அதையே நாளைக்கு பொய்னு இளிச்சுக்கிட்டு வந்து சொல்ற..? உன்னலாம் எப்டி நம்புறது..?"

"நான்தான் இனிமே பொய்யே சொல்ல மாட்டேன்னு சொல்றேன்ல..?"

"ஹ்ஹஹ்ஹா.. நீ இதுவரை என்கிட்டே சொன்னதிலேயே பெரிய பொய் இதுதான்..!! 'இனிமே பொய் சொல்ல மாட்டேன்.. இனிமே பொய் சொல்ல மாட்டேன்'..!! இதோ.. இப்போக்கூட என்னை பாக்குறதுக்கு.. வெளில சுதாகிட்ட பொய் சொல்லிட்டு வந்திருக்குற..? உன்னைப்போய் நம்ப சொல்றியா..? நீயே நெனச்சாலும் உன்னால பொய் சொல்லாம இருக்க முடியாது..!!"

"ஐயோ.. இங்க பாரு அசோக்.. நான் வெளையாட்டா நெறைய பொய் சொல்லிருக்கேன்.. இல்லேன்னு சொல்லலை..!! ஆனா.. என் லவ் உண்மை.. உன்மேல உயிரையே வச்சிருக்கேன் தெரியுமா..?"

"எனக்கு நம்பிக்கை இல்லை.. ஆளை விடு.."

"அப்போ.. என் லவ் மேல உனக்கு நம்பிக்கை இல்லை..?"

"எத்தனை தடவை சொல்றது..?"

நான் பட்டென சொல்ல கவி அமைதியானாள். கொஞ்ச நேரம் என் முகத்தையே உர்ரென பார்த்துக் கொண்டிருந்தவள், பிறகு மெல்லிய குரலில் சொன்னாள்.

"சரி.. உனக்கு நம்பிக்கை வர்றதுக்கு.. ஏதாவது பண்ணனுன்னா பண்ணிக்கோ.."

"ஏதாவது பண்ணிக்கவா..? அப்டினா..?"

"ம்ம்ம்..!! உ..உனக்கு என் உடம்பு வேணுன்னா.. எடுத்துக்கோ..!! அப்டியாவது உனக்கு என்மேல நம்பிக்கை வருதான்னு பாக்கலாம்..!!" அவள் சொல்லி முடிக்கும் முன்பே,

"எந்திரிச்சு வெளில போடீ..!!" நான் கத்தினேன்.

"எதுக்கு கத்துற இப்போ..?"

"பின்ன..? உன் உடம்பை தர்றேன்னு சொன்னதும்.. உன் பின்னாடி நாக்கை தொங்கப் போட்டுட்டு வருவேன்னு நெனச்சியா..?"

"வேற என்னதான் பண்ண சொல்ற என்னை..?"

"நீ ஒன்னும் பண்ண வேணாம்.. மொதல்ல இங்க இருந்து கெளம்பு.. எனக்கு நெறைய வேலை இருக்கு..!!"

"ப்ளீஸ் அசோக்.."

"இப்போ நீ வெளில போறியா..? இல்ல.. நான் எந்திரிச்சு வெளில போகவா..?"

நான் அழுத்தமாக சொல்ல, கவி கொஞ்ச நேரம் பரிதாபமாக என்னை பார்த்தாள். அப்புறம் எழுந்தாள். திரும்பி நடந்தாள். கதவு திறந்து வெளியேறினாள்.

கவி என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அதற்கடுத்த இரண்டு, மூன்று நாட்கள் அவளிடம் இருந்து எந்த கைபேசி அழைப்பும் வரவில்லை. இன்பாக்ஸில் அவள் மெசேஜையும் காணோம்..!! சுடுசொல் கூறி அவளை ரொம்ப நோகடித்துவிட்டேனோ என்று தோன்றியது. என்னை மறந்து விடுவாளோ என்று ஒரு பக்கம் பயமாக கூட இருந்தது. அப்படி மறப்பதும் நல்லதுதான் என்று இன்னொரு மனம் உள்ளிருந்து கூவியது. மூன்றாம் நாள் இரவு நான் என் ரூமில் இருந்தபோது, அம்மா உள்ளே நுழைந்தாள்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசனுண்டா அசோக்..!!"

"என்னம்மா..?"

"அந்தப்பொண்ணு இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தாடா.."

"எந்தப்பொண்ணு..?"

"அவதாண்டா.. கவி..!!" அம்மா சொன்னதைக்கேட்டு என் உள்மனம் சந்தோஷப்பட்டது ஏனென்று, எனக்கு புரியவில்லை. ஆனால் அதை வெளிய காட்டிக் கொள்ளாமல்,

"என்னவாம்..?" என்றேன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு.

"பாவண்டா அந்தப் பொண்ணு.. அவளை ஏன் இப்படி நோகடிக்கிற நீ..?"

"ஓ.. அவளுக்கு நீ சப்போர்ட்டா..?"

"ஆமாம்.. சப்போர்ட் பண்ணினா என்ன..? அவளை எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு.. அவதான் என் மருமகன்னு நான் முடிவே பண்ணிட்டேன்.."

"உனக்கு நான் மட்டுந்தான பையன்..? இல்ல.. வேற யாராவது இருக்காங்களா..?"

"அடச்சீய்.. உனக்கு எல்லாம் வெளையாட்டாத்தான் இருக்குது..!! ஆனா.. அந்தப்பொண்ணு.. இன்னைக்கு வந்து எப்டி அழுது பொலம்பிட்டு போனா தெரியுமா..?"

"அவ என்னென்ன சொன்னான்னு அப்டியே சொல்லு.. அதுல கொறைஞ்சது ஒரு அம்பது பொய் நான் கண்டு பிடிச்சு தர்றேன்.."

"ஐயோ.. திருந்தவே மாட்டியா நீ..? ரொம்பத்தாண்டா கோவம் வருது உனக்கு..?ஆந்த்ரால படிக்கிறதுக்கு அனுப்பாதீங்கன்னு.. அப்போவே அவர்கிட்ட அடிச்சுக்கிட்டேன்..!! சரியான சிடு மூஞ்சி..!! உன்னல்லாம் போய் அப்டி வுழுந்து வுழுந்து லவ் பண்ணுறா பாரு.. அவளை சொல்லணும்.."

"ஹாஹா.. அப்டி என்ன பெருசா வுழுந்துட்டா..?"

"பின்ன..? அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி வச்சு.. நீ அவ்வளவு அவமானப் படுத்தியும்.. இன்னும் நாய்க்குட்டி மாதிரி.. உன் காலை சுத்தி சுத்தி வர்றாளே.. இதை விட வேற என்ன வேணும்..? வேற ஒருத்தியா இருந்தா.. நீயுமாச்சு உன் லவ்வுமாச்சுன்னு பிச்சுக்கிட்டு போயிருப்பா.. அவளை விட நல்ல பொண்ணு.. சத்தியமா உனக்கு கெடைக்க மாட்டா அசோக்..!! நான் சொல்றதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்..!!"

அம்மா படபடவென பொரிந்து தள்ளிவிட்டு செல்ல, நான் சிலை மாதிரி உறைந்து போய் அமர்ந்திருந்தேன். அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்த நியாயம் என் மனதை சுட்டது. உண்மைதானே..? என் மீது அன்பில்லாமலா அத்தனை அவமானத்திற்குப் பிறகும் என்னையே சுற்றி சுற்றி வருகிறாள்..? தன் உடலை கூட எடுத்துக் கொள்ள சொன்னாளே..? என் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும் அவளுக்கு..? நான்தான் அவளை மிகவும் காயப் படுத்திவிட்டேன். பாவம் அவள்..!! என் மனதுக்குள் கவி மீதான காதல் ஊற்று மறுபடியும் பொங்க ஆரம்பித்தது. வெள்ளமாகி மனதை நிறைத்தது.

அடுத்த நாள் மதியம்... இந்தக்கதை ஆரம்பித்த அதே கதீட்ரல் ரோடு கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்றிருந்தேன். சைட்டுக்குள் வந்து பீடி புகைக்க கூடாது என்று கடக்கரையை எச்சரித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கவியிடம் இருந்து கால் வந்தது. செல்போனை எடுத்து பார்த்ததுமே என் முகமெல்லாம் பூரிப்பு. உள்ளமெல்லாம் உற்சாகம். ஆனால் அதை குரலில் காட்டிக் கொள்ளாமல்,

"ஹலோ..!!" என்றேன் இறுக்கமாக.

"தேங்க்ஸ் அசோக்.. காலை பிக்கப் பண்ணினதுக்கு.."

"ம்.. ம்.. சும்மா சும்மா எதுக்கு கால் பண்ணி தொந்தரவு பண்றேன்னு கேக்குறதுக்குத்தான் பிக்கப் பண்ணினேன்.." சனியன் பிடித்த என் ஈகோ.

"இன்னும் என் மேல கோவம் போகலையா அசோக்..?" கவியின் குரல் பரிதாபமாக ஒலித்தது.

"எப்படி போகும்னு நெனைக்கிற..?"

"அத்தை உன்கிட்ட பேசுனாங்களா..?"

"அத்தையா..??? ஓ.. அம்மாவா..? பேசுனாங்க.. பேசுனாங்க.."

"அப்புறமும் உனக்கு கோவம் போகலையா..?"

"ம்ஹூம்..!!"

"எப்போதாண்டா போகும்..? சொல்லு...!!!! எப்போதான் என்னை நீ புரிஞ்சுக்க போற..?"

கவி இப்போது கத்தினாள். கூடவே விசும்பல் ஒலியும் கேட்டது. அழுகிறாள் போலிருகிறது. நான் இப்போது பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். எனக்காக என் காதலி அழுகிறாளே என்று பெருமையாக இருந்தது. என் மீது அவ்வளவு காதலா என சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நேரம் விசும்பிய கவி, பிறகு தொடர்ந்து பேசினாள்.

"இங்க பாரு அசோக்.. நீ இல்லாம எனக்கு லைஃபே இல்லை.. நீ இந்தமாதிரி என்கூட பேசாம இருக்குறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குது தெரியுமா..? அப்டியே பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்குதுடா..!! நானும் என்னென்னவோ பண்ணிப் பாத்துட்டேன்.. உனக்கு என்மேல இருக்குற கோவம் கொறையுற மாதிரி தெரியலை.. இதுக்கும் மேல என்ன பண்றதுன்னும்.. எனக்கும் எதுவும் புரியலை.."

"என்னவேனா பண்ணிக்கோ.. ஏன் என்கிட்டே வந்து கேக்குற..?"

"பண்ணிக்கவா..? ம்ம்ம்..? என்னவேனா பண்ணிக்கவா..? ஓகே.. பண்ணிக்கிறேன்.. நீ உன் லைஃப்ல மறக்கவே முடியாத மாதிரி பண்ணிக்கிறேன்.."

"அப்டி என்ன பண்ணிக்க போற..?"

"என் உசுரை விட போறேன்..!!" கவியின் குரலில் ஒரு அசாத்திய சீரியஸ்னஸ் தென்பட்டது. இருந்தும் நான்,

"ஹாஹா.. இத்தனை நாளா பொய் பொய்யா சொல்லி என் உசுரை வாங்குன.. இப்போ உன் உசுரை விட போறேன்னு பொய் சொல்றியா..? வெரி குட்..!!" என்று கிண்டலடித்தேன்.

"உனக்கு வெளையாட்டா இருக்குல..? பரவால்ல..!! இன்னும் ஒரு பதினஞ்சு நிமிஷம் நீ வர்றியான்னு பார்ப்பேன்.. இல்லன்னா.. வாங்கி வச்சிருக்குற பாய்சனை குடிச்சுட்டு.. என் வாழ்க்கையை முடிச்சுக்குறேன்.. நான் செத்ததுக்கு அப்புறமாவது.. நான் உண்மையும் சொல்வேன்னு நம்பு..!!"

அவ்வளவுதான்..!! படபடவென சொல்லிவிட்டு காலை கட் செய்தாள். நான் பதறிப் போனேன்..!! ஐயையோ.. என்ன குழப்பம் இது..? நிஜமாகத்தான் சொல்கிறாளா..? என் இதயம் முழுதும் அவளே இடம்பெற்றிருப்பது தெரியாமல், உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறாளா..? நானும்தான் அளவுக்கதிகமாய் அவளை அலைக்கழித்து விட்டேனோ..? கடவுளே..!!

கைவிரல்கள் நடுநடுங்க திரும்ப அவளுக்கு கால் செய்தேன். கிடைக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்தபோது ஸ்விட்ச்ட் ஆஃப் என்று வந்தது. நம்ப முடியாமல் மறுபடியும் டயல் செய்தேன். ஸ்விட்ச்ட் ஆஃப்..!!!!!

"FUCKKKKKK.......!!!!!!!!!!!!"

என்று சத்தம் போட்டு கத்தினேன். பரபரப்பு தொற்றிக் கொண்டவனாய் படிக்கட்டை நோக்கி ஓடினேன். 'இன்னாச்சு ஸார்..?' என்று எதிரே வந்த கடற்கரையை மதியாமல், படிக்கட்டை அடைந்து படபடவென கீழிறங்கினேன். கீழ்த்தளத்தை அடைந்து, காருக்குள் ஏறி, 'விருட்' என அதை ஸ்டார்ட் செய்து கிளப்பினேன். ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்து, அசுரவேகத்தில் பறந்தேன்.

செல்போன் எடுத்து மீண்டும் ஒருமுறை கவிக்கு கால் செய்து பார்த்தேன். ஸ்விட்ச்ட் ஆஃப்..!!!!! காரை ஓட்டிக்கொண்டே, காண்டாக்ட்ஸ் லிஸ்ட் எடுத்து, பூஜாவின் நம்பர் டயல் செய்தேன். பூஜா கவியின் ரூம் மேட்..!! இருவரும்தான் தனியாக ஒரு ரூம் வாடகைக்கு பிடித்து தங்கியிருக்கிறார்கள்.

"ஹலோ..!!"

"சொல்லுங்க அசோக்..!!"

"பூ..பூஜா.. கவி.. கவி உன்கூட இருக்காளா..?"

"இல்லையே.. அவ இன்னைக்கு காலேஜ் வரலை.."

"ஓ.. கா..காலைல எப்படி இருந்தா அவ..?"

"என்னனு தெரியலை.. காலைல இருந்தே ஒருமாதிரி டல்லா இருந்தா.. அப்புறம் தலை வலிக்குது காலேஜ் வரலைன்னு சொன்னா.. சரி ரெஸ்ட் எடுன்னு சொல்லிட்டு நான் வந்துட்டேன்..!! என்ன அசோக்.. ஏதாவது முக்கியமான மேட்டரா..?"

"ஒ..ஒண்ணுல்ல பூஜா.. நான் அப்புறம் பேசுறேன்.. பை.."

செல்போனை வைத்துவிட்டு நான் காரின் வேகத்தை மேலும் கூட்டினேன். சாலையின் வலது பக்கமே ஓட்டி, எல்லா வாகனங்களையும் ஓவர்டேக் செய்து பறந்தேன். எதிரே வந்த வாகனங்களில் மோதாமல் இருக்க, மிகவும் லாவகமாக ஓட்டினேன். சிக்னலில் எறிந்த சிவப்பு விளக்கை மதியாமல், சீறிக்கொண்டு சென்றேன். கவி தங்கியிருந்த வீட்டுக்கு முன் காரை சரக்கென ப்ரேக் அடித்து நிறுத்தினேன். பக்கவாட்டில் இருந்த படிக்கட்டை அடைந்து, தபதபவென மேலே ஏறி ஓடினேன். திறந்திருந்த ரூம் கதவை தள்ளி, உள்ளே பார்வையை வீசினேன்.

அந்த ரூமுக்கு நான் ஏற்கனவே வந்திருக்கிறேன். சின்ன ரூம்தான். அதன் இரண்டு சைடிலும், இரண்டு கட்டில்கள், மெத்தைகள்..!! கட்டிலை ஒட்டி சுவற்றோடு பொருந்திய அலமாரிகள்.. அலமாரியில் புத்தகங்கள், உடைகள், சூட்கேஸ்கள்..!! இரண்டு கட்டிலுக்கும் நடுவே ஒரு டேபிள், இரண்டு சேர்கள். அப்புறம் அறையின் ஒரு மூலையில் அட்டாச் செய்யப்பட்ட பாத்ரூம்..!! மொத்தமே அவ்வளவுதான்..!!

கவி ஒரு கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன்பு இருந்த டேபிளில் அந்த பாய்சன் பாட்டில்..!! நான் உள்ளே நுழைந்து மூச்சிரைத்துக் கொண்டிருக்க, கவி ஓரிரு வினாடிகள் என் முகத்தை அமைதியாக வெறித்தாள். பிறகு மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தாள். பின்பு தலையை நிமிர்த்தி என்னை பார்த்தவள், ஒருமாதிரி சோர்வான குரலில் சொன்னாள்.

"பரவால்ல.. அரை நிமிஷம் முன்னாடியே வந்துட்ட.."

அவ்வளவுதான்..!! என்னால் கோபத்தை கண்ட்ரோல் செய்யவே முடியவில்லை. கொஞ்ச நேரம் எப்படி கலவரப் படுத்திவிட்டாள் என்னை..? பட்டென அவளை நெருங்கியவன், 'பளார்ர்ர்ர்...' என அவளுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன். 'ஆஆஆவ்..' என்று சத்தம் போட்டபடி கவி மெத்தையில் விழுந்தாள். அடிவிழுந்த கன்னத்தை தடவியபடி நிமிர்ந்த அவளிடம், ஆத்திரமாய் கத்தினேன்.

"லூசாடி நீ..?????? கொஞ்ச நேரத்துல.. எனக்கு ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி ஆயிடுச்சு..!!" இப்போது கவியும் பதிலுக்கு கத்தினாள்.

"இப்போ எதுக்கு அறைஞ்ச என்னை..? உன்கிட்ட அறை வாங்குறதுக்குத்தான்.. போன் பண்ணி உன்னை வர சொன்னேனா..? போ.. நான் பாய்சன் குடிச்சுட்டு சாகப் போறேன் போ..!!"

சொன்னவள் வேகமாக எழுந்து, டேபிளில் இருந்த பாய்சனை எடுக்க ஓடினாள். அதற்குள் நான் குறுக்கே புகுந்து, ஒருகையால் அவளுடைய இடுப்பை வளைத்து பிடித்தேன். அப்படியே மெத்தையில் அவளை வீசினேன். மீண்டும் பலமாக ஒரு அறை விட்டேன். இந்த முறை அறை விழுந்தது அவளுடைய லிப்ஸில்..!! அறைந்தது என்னுடைய லிப்ஸ்..!!

எஸ்ஸ்ஸ்ஸ்..!!!!!!!! கோழிக்குஞ்சு மாதிரி கவி என் பிடிக்குள் அடங்கியிருக்க, முரட்டுத்தனமாய் நான் அவள் மீது படர்ந்து, முத்தமிட்டுக் கொண்டிருந்தேன். அவளுடைய கைகள் ரெண்டையும் எனது கைகளால் விரித்து பிடித்திருந்தேன். அவளை அசையவிடாமல் செய்து, அவளது உதடுகளை கவ்வி உறிஞ்சிக் கொண்டிருந்தேன். கவி ஆரம்பத்தில் 'விழுக்.. விழுக்..' என திமிறினாள். அப்புறம் மெல்ல மெல்ல.. என் முத்த சுகத்துக்கு கட்டுப்பட்டு அடங்கினாள். அவளும் பதிலுக்கு என் உதடுகளை உறிஞ்சினாள்.

பூக்கள் அடைத்த போக்கே மாதிரி, மென்மையாக இருந்த கவியின் மேனியை, எனது முரட்டு ஆணுடல் அழுத்தி நசுக்கியது. அவளுடைய நெஞ்சில் இருந்த பஞ்சு உருண்டைகள் ரெண்டும், என் மார்பு படர்ந்ததில், நசுங்கி பிதுங்கின. அவளது வெண்ணை பூசினாற் போன்ற வெளுத்த தொடைகளில், எனது தொடைகள் பரவி உரசின. எங்களுடைய இருபது விரல்களும், ஒன்றோடொன்று இறுக்கமாய் பிண்ணிக்கொள்ள, எங்கள் இதழ்கள் நான்கும் எசகுபிசகாய் சிக்கிக்கொண்டு, சண்டையிட்டன.


பெர்ஃப்யூம் வாசனையையும் மீறி, என் கவிக்கே உரித்தான பிரத்தியேக வாசனை என் நாசிக்குள் புகுந்து என்னை வெறியேற்றியது. தேனை விடவும் தித்திப்பான, என் கவியின் இதழ்ச்சுவை என் ரத்தத்தை இனிப்பாக்கிக் கொண்டிருந்தது. மென்மையான அவளது உதடுகளை நான் இரக்கம் காட்டாமல், 'சர்ர்ர்..' என உறிஞ்சிக் கொண்டிருந்தேன். எனது நாக்கை மெல்ல அவளது வாய்க்குள் நுழைத்து, அவளது நாக்கை தேடினேன். அவளது நாக்கோ தேடி வந்து என் நாக்குடன் ஒட்டிக் கொண்டது. தடவியது..!!!

கவியை காதலித்த இத்தனை காலத்தில், நான் நிறைய தடவை அவளை முத்தமிட்டிருக்கிறேன். அந்த முத்தத்தில் பெரும்பாலும் காதலே பொங்கி வழியும். இன்று காதலை பின்னுக்குத் தள்ளி, காமம் முந்தியது. நீண்ட நாள் சண்டையிட்டு, மீண்டும் சேர்ந்தபோது வந்த வேகம்தான் அதற்கு காரணம் என்று தோன்றியது. இத்தனை நாளாய் அடக்கி வைத்திருந்த ஆசை வெள்ளம், கட்டறுந்து கொட்டியது. காதலை மூழ்கடித்த காம வெள்ளம் அது..!! இருவரும் நீண்ட நேரம் வெறித்தனமாய் முத்தமிட்டு விட்டு, இதழ்கள் பிரித்தோம். முத்த சுகத்தை இன்னும் அனுபவித்தவாறு, கிறங்கிய கண்களுடன் கவி குறும்பாக கேட்டாள்.

"ம்ம்.. நான் பாய்சன் சாப்பிட போறேன்னு சொன்னதுந்தான்.. கோவம் போச்சாக்கும்..?"

"கோவம்லாம் எப்போவோ போயிடுச்சு.. கோவம் போகாத மாதிரி சும்மா நடிச்சுட்டு இருந்தேன்.."

"அடப்பாவி..!!! நடிச்சியா..? நான் பாட்டுக்கு பாய்சன் சாப்பிட்டிருந்தா என்ன ஆயிருக்கும்..?"

"போய் சேர்ந்திருப்ப.. நான் நிம்மதியா இருந்திருப்பேன்.."

"ஏய்... கொழுப்பா..? உதை விழும்.."

"ஹாஹா.. பின்ன என்ன..? உன்னை யாரு பாய்சன்லாம் குடிக்க சொன்னது..?"

"நீதான என்ன வேணா பண்ணிக்கோன்னு சொன்ன..?"

"அதுக்காக..? பாய்சன் பாட்டிலை பக்கத்துல வச்சுக்கிட்டு.. நீ அப்டி கேட்பன்னு எனக்கு தெரியுமா..? படபடன்னு சொல்லிட்டு பட்டுன்னு கட் பண்ணிட்டா.. திரும்ப கால் பண்ணினா.. ஸ்விட்ச்ட் ஆஃப்..!! கையும் ஓடலை காலும் ஓடலை.. அடிச்சுப் புடிச்சு ஓடி வந்தேன் தெரியுமா..? மவளே.. அப்டியே சாவுடின்னு விட்ருக்கணும்..!!"

"ஹாஹா.. ம்ம்.. அப்டிலாம் நீ விட மாட்டேன்னு எனக்கு தெரியும்..!!"

அவள் சொல்லிவிட்டு அழகாக புன்னகைத்தாள். கண்களை ஒருமாதிரி குறும்பாக சிமிட்டினாள். நான் அவளுடைய அழகு முகத்தை ஆசையாக, காதலாக பார்த்தேன். அவளது கூந்தலை மென்மையாக தடவிக் கொடுத்தேன். அவளுடைய வலது கையை எடுத்து, உள்ளங்கையில் என் உதடுகளை பதித்தவாறு, குரலில் உண்மையான அன்புடன் சொன்னேன்.

"கொஞ்ச நேரம் ரொம்ப பயந்துட்டேண்டி.. என்ன ஆகுமோ ஏது ஆகுமோன்னு.."

"குடிச்சிருந்தா என்ன பண்ணிருப்ப..?" அவள் குறும்பாக கேட்க,

"கூடவே வந்திருப்பேன்.."

நான் சற்றும் யோசியாமல், பட்டென சொன்னேன். இப்போது கவி அமைதியானாள். அவளுடைய உள்ளங்கைகளுக்குள் என் முகத்தை தாங்கிப் பிடித்து, ஆசையாக அந்த முகத்தை பார்த்தாள். அவளுடைய கருத்த விழிகளால், என் விழிகளை காதலாக பார்த்தாள். ஒரு கையால் என் தலை மயிரை கோதி விட்டாள். இன்னொரு கை கட்டை விரலால், என் உதடுகளை தடவினாள். ஒரு ஐந்தாறு வினாடிகள்..!!

அப்புறம் என்ன நினைத்தாளோ..?? சரக்கென என் மீது படுவேகமாய் பாய்ந்தாள். அப்படியே என்னை புரட்டி, மெத்தையில் வீழ்த்தி, என் மீது ஆவேசமாய் படர்ந்தாள். படர்ந்த வேகத்தில் என் உதடுகளை கவ்வினாள். அழுத்தமாக உறிஞ்சினாள். அவளுடைய வேகத்தில் நானே சற்று திணறிப் போனேன். திமிற முயன்றேன். ஆனால் அவளோ என்னை திமிற விடாமல், வலுவாக பிடித்திருந்தாள். என்னை அடக்கி.. என் உதடுகளை அவளுடைய உதடுகளால் ஆக்கிரமித்திருந்தாள். புலி மீது மான் பாய்ந்தால் என்னாகும் என்பதை, அப்போதுதான் நான் உணர்ந்தேன்.



எனக்கு அந்த மாதிரி அவளிடம் அடங்கியிருப்பது ஆனந்தமாக இருந்தது. எனது இதழ்களை அவள் வசம் இழந்தது இதமாக தோன்றியது. அவளது உமிழ்நீர் எனக்குள் தேனாய் இறங்கியது. அவளது நாக்கு எனது நாக்கை தடவி, தேகமெங்கும் காம அனல் மூட்டியது. அவளது பட்டு மார்புகள் முட்டியதில், என் திண்ணென்ற மார்பு நொறுங்கும்போல் ஆனது. எல்லாமும் ஒன்று சேர.. என்னை கேட்காமல் எனது ஆண்மை தானாக விழித்துக் கொண்டது..!!

எனது உதடுகள் ரெண்டும் கவியின் வாய்க்குள் சிக்கியிருக்க, நான் இப்போது என் கைகள் ரெண்டையும் நகர்த்தினேன். அவளுடைய இடுப்பின் இரண்டு புறமும் பற்றினேன். பிசைந்தேன். கவியிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. வேகம் சற்றும் குறையாமல் என் உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். இப்போது என் கைகள் இன்னும் கீழே இறங்கின. அவளது பின்புற மேட்டை அடைந்தன. அந்த மென்மையான சதைகளை நான் இதமாக தடவினேன். பின்பு கைகளை அகலவிரித்து, அவளது புட்ட சதைகளை கொத்தாக பற்றி, அழுத்தி ஒரு பிடி பிடித்தேன்...!!

"ஆஆஆஆஆவ்வ்வ்...!!!!"

அலறியபடி என் உதடுகளை விடுவித்தாள் கவி. விழிகளை விரித்து, வாயை 'ஓ'வென திறந்து, நம்ப முடியாதவளாய் என்னை ஒரு பார்வை பார்த்தாள். ஆனால் என் மேல் இருந்து எழாமல் அப்படியே படுத்துக் கிடந்தாள். என்னுடைய கைகளும் இன்னும் அவளது பின்புற வீக்கத்தில்தான் இருந்தன. அவள் அலறலை கேட்டு நான் சிரித்தேன்.

"ஹஹஹாஹஹஹா..."

"சிரிக்கிறியா... பொறுக்கி..!!"

"பொறுக்கியா..? ஏண்டி திட்டுற..?"

"ஆமாம்.. திட்டாம..? அதைப்போய் புடிச்சுப் பாக்குற..?"

"ஏன்.. புடிச்சு பாக்க கூடாதா..? நான் புடிப்பேன்..!!" சொல்லிக்கொண்டே நான் மறுபடியும் அவளுடைய புட்டங்களை ஒரு அமுக்கு அமுக்கினேன். அவள் கத்தினாள்.

"அவுச்ச்ச்ச்.. ச்சீய்.. கையை எடுடா.."

"ம்ஹூம்.. நல்லாருக்குது.. அமுக்குறதுக்கு.."

"இப்போ எடுக்க போறியா இல்லையா..?"

"எடுக்கலைனா..?"

"கை கட் ஆயிடும்.."

"அடிப்பாவி..!! அப்போ அன்னைக்கு சொன்னதெல்லாம் பொய்யா..?"

"என்னைக்கு சொன்னது..?"

"அன்னைக்கு ஆபீஸ்ல வந்து கெஞ்சுனியே..? 'என் உடம்பைவேணா எடுத்துக்கோ அசோக்.. என்கூட பேசாம மட்டும் இருக்காத..' அப்டின்னு.." நான் கவி மாதிரியே பேசிக் காட்டினேன்.

"ஹஹாஹஹாஹஹாஹஹா.."

அவள் எளிறுகள் தெரிய அழகாக சிரித்தாள். அப்புறம் என் முகத்தையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தாள். சற்று முன் பார்த்தாளே.. அதே கனிவான காதல் பார்வை..!! பின்பு பட்டென குனிந்து என் உதடுகளை கவ்வி முத்தமிட்டாள். இந்தமுறை சற்றே மென்மையான, இதமான முத்தம். பின்பு என் நெற்றி முடியை பின்னுக்கு தள்ளிவிட்டு, அங்கேயும் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள். என் மீதிருந்து எழுந்தவள், பட்டென தன் டாப்ஸை உருவி எறிந்தாள். ப்ராவுக்குள் குலுங்கிய அவளது கனிகளைக் கண்டு நான் திகைத்துக் கொண்டிருக்கும்போதே, அவள் கைகள் ரெண்டையும் என்னை நோக்கி நீட்டி,

"ம்ம்ம்.. வா.. எடுத்துக்கோ..!!" என்றாள்.

"க..கவி.. எ..என்ன இ...?" அவள் அழகை கண்ட என் வாய் குழறியது.

"நீதான கேட்ட..? நான் சொன்னது பொய்யான்னு..? பொய் இல்லை.. உண்மைதான்..!! வா..!!"

"இ..இல்ல.. நான்.. அ..அது.. சும்மா கேட்டேன்.." பேசும்போதே எனது பார்வை என் கட்டுப்பாடு இல்லாமல், அவள் மார்புப் புடைப்பை மேய்ந்தது.

"பரவால்ல.. நான் அப்பப்போ உண்மையும் பேசுவேன்னு நீ நம்பனும்ல..? கமான்.. எடுத்துக்கோ..!!"

அவள் சொல்லிக்கொண்டே, அவளது கைகளால் என் கழுத்தை வளைத்துக் கொள்ள, இப்போது அந்த பந்துகள் ரெண்டும் என் கண்ணுக்கேதிரே குபுக்கென விம்மின. எனது ஆண்மையை இன்ஸ்டண்டாய் உச்சபட்ச விரைப்புக்கு உள்ளாக்கின.

"க..கவி.. நெ..நெஜமாத்தான் சொல்றியா..?" நான் அவளுடைய இடுப்பில் கைபோட்டு வளைத்துக் கொண்டே கேட்டேன்.

"ம்ம்ம்.. நெஜமாத்தான்..!! இது.. நீ திரும்ப வந்ததுக்கு.. என்னோட ட்ரீட்..!!! ஜஸ்ட் என்ஜாய்..!!!!"

சொன்னவள் அப்படியே என் மீது கவிழ்ந்தாள். நான் மல்லாந்து வீழ, அவளது மார்பு மூட்டைகள் என் முகத்தை மெத்தென்று அழுத்தின. கவி என் இடுப்பு பிரதேசத்தில் இரண்டு புறமும் கால்களை போட்டு அமர்ந்திருந்தாள். கைவிரல்களை எனது தலைமுடிக்குள் நுழைத்து கலைத்தாள். என் உச்சந்தலையிலும், நெற்றியிலும் அவ்வப்போது முத்தம் பதித்தாள். நான் அவளது மார்புப் பிளவுக்குள் முகம் புதைத்திருந்தேன். மூச்சுத் திணறுவது போல இருந்ததாலும், அவளது முலை ஒத்தடம் இதமாகவே இருந்தது. இரண்டு உருண்டைகளும் இணையும் பிரதேசத்தில் நான் இதழ்களை ஒற்றி எடுத்தேன். அவள் மேனியில் இருந்து வந்த நறுமணத்தை ஆழமாக சுவாசித்தேன்.

ப்ராவை மீறி திமிறிய கவியின் கலசங்களுக்கு என் உதடுகள், மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தன. அதே நேரம் எனது கைகள் அவளது பின்புறத்தில், அங்கங்கே இதமாக ஊர்ந்து கொண்டிருந்தன. ஸ்கர்ட்டுக்குள் புடைத்திருந்த அவளது புட்ட சதைகளை பிசைந்து பார்த்தன. பின்பு இடுப்புக்கு நகர்ந்து இரண்டு புறமும் அழுத்தி பற்றின. இன்னும் மேலேறி, அவளது தண்டுவடத்தில் கோடு கிழித்தன. அப்புறம் அவளுடைய ப்ரா பட்டையை தடவி எதையோ தேடின. நெடுநேரமாய்..!!

"ஹூக் எப்படி ரிமூவ் பண்ணனுன்னு கூட தெரியாதா உனக்கு..?" கவி குறும்பாக கண்சிமிட்டினாள்.

"முன்னப்பின்ன பண்ணிருந்தாதான தெரியும்..?" நானும் விடாமல் சொன்னேன்.

"தெரியலைன்னா சொல்ல வேண்டியதுதான..? இந்த தடவு தடவுற..?"

"சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப..?"

"சொன்ன வாய்க்கு.. இந்நேரம் வேலை கொடுத்திருப்பேன்.."

"ஹ்ஹாஹஹாஹஹா..!!"

"ரிமூவ் பண்ணவா..? பாக்குறியா..?"

"ம்ம்.."

கவி எழுந்து என் மடி மீதே அமர்ந்து கொண்டாள். நானும் இப்போது மெத்தையில் இருந்து எழுந்து நிமிர்ந்து அமர்ந்து கொண்டேன். அவள் என் முகத்தை பார்த்து புன்னகைத்துக் கொண்டே, கைகள் ரெண்டையும் முதுகுப் பக்கம் விட்டாள். நான் அவ்வளவு நேரம் முயன்றும் முடியாததை, அரை நொடியிலேயே செய்தாள். ஹூக்கை கழட்டி, ப்ராவை உருவி, தூக்கி எறிந்தாள். கைகள் ரெண்டையும் அகலமாய் விரித்து, தன் கனிகளின் அழகை முழுமையாக காட்டினாள்.

அழகான, அம்சமான, குத்திட்ட, கூர்மையான கலசங்கள் கவிக்கு..!! உருண்டு திரண்டு தொய்யாமல் நின்ற பால் சொம்புகள்..!! அவளுடைய உடல்வாகுக்கு சற்றே அதிகப்படியான அளவில் வீங்கியிருந்தன..!! ஐஸ்க்ரீம் குவியலில் செர்ரி வைத்தது போல, மொழுமொழு முலைக்கு சிவப்பாய் சின்னதாய் காம்பு..!! மொத்தத்தில் என் தேவதையின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்த, பெண்மை அங்கங்கள்..!!

"நல்லாருக்கா..?" கவி என் தலை முடியை கோதியவாறு கேட்டாள்.

"சூப்பரா இருக்கு.." நான் உதட்டில் புன்னகையுடன் சொன்னேன்.

"ம்ம்ம்.. நீயும் ஷர்ட் ரிமூவ் பண்ணு அசோக்.."

நானும் என் சட்டை, பனியனை அகற்றினேன். கவி தன் கண்களை அகலமாய் விரித்து, என் மார்பழகை ரசித்தாள். அவளுடைய வலது கையால் என் மார்பை மென்மையாக தடவினாள். நடுவிரலை என் மார்பு ரோமங்களுக்குள் நுழைத்து இழுத்தாள். எனது இடதுபக்க மார்புக்காம்பை, அழுத்தி தேய்த்தாள். குனிந்து என் மார்பெங்கும் தன் இதழ்களால், 'இச்.. இச்.. இச்..' என்று ஈர ஒத்தடம் கொடுத்தாள். அந்த முத்தங்களில் நான் காமமாய் சிலிர்த்துக் கொண்டிருக்கும்போதே, என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அவளுடைய பட்டு முலைகள் ரெண்டும் என் மார்பில் அழுந்தி பிதுங்கின. அவளது சிவந்த காம்புகள், சரியாய் என் கருத்த காம்புகளை தேடி வந்து உரசின. அவள் விட்ட அனல் மூச்சு என் நெற்றியை சுட்டது. எனது மூச்சுக்காற்று அவளது மார்புப் பிளவுக்குள் பாய்ந்தது. எனது கைகள் அவளுடைய முதுகை இதமாய் தடவ, அவளது விரல் நகங்கள் என் முதுகை பிறாண்டின.

இப்போது நான் கவியை அப்படியே புரட்டி மெத்தையில் தள்ளினேன். அவள் மீது கவிழ்ந்தேன். கவிழ்ந்த வேகத்தில் அவளுடைய கனிகளில் ஒன்றை வாயால் கவ்விக் கொண்டேன். சுவைத்தேன். மீதமிருந்த கனியை ஒரு கையால் பற்றினேன். அழுத்தி பிசைந்தேன். ஒரு முலை என் வாயில் சிக்கி வதங்க, இன்னொரு முலை என் கையில் அகப்பட்டு கசங்க, கவி உணர்சிக் கொந்தளப்பில் துடித்தாள்.

"ஹ்ஹ்ஹாஹாஹாஹா... அசோக்க்க்க்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...."

கவியின் நெஞ்சுப்பழங்களில் ஒன்றில் நான் சாறு அருந்திக் கொண்டிருந்தேன். இன்னொரு பழத்தை ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தேன். அவளது செர்ரிப்பழ முலைக்காம்பை அவ்வப்போது நாவால் தடவினேன். அந்தக்காம்பை சுற்றி உதடுகள் பதித்து, சர்ர்ர்ர்ரென உறிஞ்ச, 'ஷ்ஷ்ஷ்ஷஷ்ஷ்ஷ்..' என்று சத்தம் எழுப்பிக்கொண்டு, கவி தன் முலைகளால் என் முகத்தை முட்டினாள். உணர்ச்சியை கட்டுப்படுத்த தெரியாமல், என் தலை மயிரை பிடித்து இழுத்தாள். அப்படியே என் தலையை தனது பஞ்சு மூட்டைகளுக்குள் வைத்து திணித்தாள்.


கவியின் முலையை பிசைந்து கொண்டிருந்த எனது கை, இப்போது அவளுடைய மேனியை தடவ ஆரம்பித்தது. அவளது இரண்டு மாங்கனிகளையும் மாறி மாறி சுவைத்துக்கொண்டே, நான் அவளுடைய இடுப்பை பற்றி பிசைதேன். இடுப்பின் மையத்தில் இருந்த, தொப்புளை கொத்தாகப் பற்றி கசக்கினேன். அந்த குட்டித்துளைக்குள் விரல் நுழைத்து துழாவினேன். கவி சுகத்தில துடித்தாள். உடலை கடலலை போல நெளித்தாள்.

நான் அவளை மேலும் துடிக்க வைக்க நினைத்தேன். அவளது மார்பை சுவைத்துக்கொண்டே, என் கையை இன்னும் கீழே இறக்கினேன். அவளது ஸ்கர்ட்டுக்குள் விட்டு, அவளுடைய தொடைகளை பற்றி பிசைந்தேன். வெண்ணை பூசி விட்டது மாதிரி வழவழவென்று இருந்த தொடைகள், என் முரட்டுக்கரம் அழுத்திப் பிடித்ததில், கன்னிச் சிவந்தன. இப்போது என் கை இன்னும் சற்று மேலே ஏறியது. பேண்டீசுக்குள் புஸ்சென்று இருந்த புடைப்பை தடவியது. நான் கொஞ்ச நேரம் அந்த மாதிரி அவளது முலைகளை நாவால் தடவி, தொடையிடுக்கை கையால் தேய்த்துக் கொடுத்தேன். அப்புறம் எழுந்தேன்.

"கவி.."

"ம்ம்ம்..."

"இதையும் ரிமூவ் பண்ணிடவா..?" நான் அவள் பேண்டீயில் கை வைத்தபடி கேட்க,

"எதுக்கு..?" அவள் கேலியான குரலில் கேட்டாள்.

"எதுக்கா..???? எனக்கு அதை பாக்கணும் போல இருக்கு.."

"எதை..?"

"ப்ச்.. எதைன்னு தெரியாதா உனக்கு..? உள்ள இருக்குறதை..!!"

"ஹாஹ்ஹாஹ்ஹா.. உள்ள என்ன இருக்குது..?"

"அடச்சீய்.. போடீ.."

"சொல்லு அசோக்.. ப்ளீஸ்..." அவள் சிணுங்கினாள்.

"ம்ம்ம்ம்.. உன் புஸ்ஸி.."

"தமிழ்ல..?"

"தமிழ்லயா..????" நான் அதிர்ந்தேன்.

"எஸ்.."

"போடீ.. அசிங்கம் புடிச்சவளே.."

"ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.."

"ம்ஹூம்.."

"ப்ளீஸ்..!!!!!!!!!!!"

"சொல்லமுடியாது போடீ.. எனக்கு வேற வேலை இருக்கு..!!"

"ச்சே.. சுத்தமா தமிழ்ப்பற்றே இல்லைடா உனக்கு.."

அவள் சலிப்பாக சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நான் அவளுடைய இடுப்புக்கு கீழே குனிந்திருந்தேன். அவளது ஸ்கர்ட்டை இடுப்புக்கு மேலே உயர்த்தினேன். பிங்க் நிற பேண்டீயும், அந்த பெண்டீயின் மையத்தில் அவளது பெண்மைக்குவியலும், பளிச்சென தெரிந்தன. நான் அந்த குவியலை மென்மையாக தடவ, கவி ஒருமாதிரி தொடைகளை முறுக்கி, சிலிர்த்தாள். பின்பு நான் இரண்டுபுறமும் விரல் வைத்து, அந்த பெண்டீயை கீழே இழுத்தேன். உருவி எடுத்தேன்.

தனது ரகசிய உறுப்பு திறக்கப் பட்டதும், அதை நான் ஆசையாக பார்க்கவும், கவி வெட்கம் தாளாமல் அதை கைகளால் மூடிக் கொண்டாள். நான் எனது கைகளால் அவளது கைகளை அழுத்திப் பிடித்து விலக்கி, என் காதல் ராணியின் காம வாசலை பார்க்க வேண்டி இருந்தது. சமீபத்தில்தான் முடி நீக்கியிருக்க வேண்டும். சுத்தமாக பளிச்சென்று இருந்தது. குட்டி உறுப்புதான். ஆனால் புஷ்டியாக புடைத்திருந்தது. ப்ரவுன் நிறத்தில்.. கட் செய்து வைத்த சமோசா மாதிரி..!!

"என்னடா.. அதையே அப்படி பாக்குற..?" சிணுங்கலாக கேட்டாள் கவி.

"அழகா இருக்கு கவி.."

"பிடிச்சிருக்கா..?"

"பிடிச்சிருக்காவா..? கடிச்சு தின்னுடலாம் போல இருக்கு..!!"

"ச்சீய்.. பொறுக்கி..!!!"

கவி அழகாக வெட்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, அவளது வெட்டுப்பட்ட இடத்தில், நான் குனிந்து முத்தம் ஒன்று வைத்தேன். 'இச்ச்ச்..!!!!' என.. ஈரமாக..!! அவ்வளவுதான்..!! கவி சரேலென தன் இடுப்பை தூக்கி துடித்தாள். 'ஷ்ஷ்ஷ்ஷ்... அசோக்..' என கத்தினாள். தொடைகளை இறுக்கமாய் நான் அவளுடைய இடுப்பை அழுத்தி பிடித்தேன். இன்னொரு முறை ஈரமாக என் இதழ்களை பதித்தேன்.. அந்த இன்பச்சுரங்கத்தில்..!!

அப்புறம் கொஞ்ச நேரம் நான் அந்த வேலைதான் பார்த்தேன். அவளுடைய பெண்மைப் புடைப்பெங்கும் என் உதடுகளை ஒற்றி ஒற்றி எடுத்தேன். 'அசோக்.. வே..வேணாம் அசோக்.. ப்ளீஸ்..' என வலுவற்ற குரலில், கவி முனகினாள். ஆனால் அவளுடைய மனம் அந்த காம முத்தத்தை மிகவும் விரும்பியது. உணர்ச்சியில் அவளுடைய உடல் நெளிந்ததும், தொடைகளை வசதியாக அவள் விரித்துக் காட்டியதுமே அதற்கு சாட்சி..!! காதலனின் காம முத்தத்தை, கால்கள் திறந்து தன் கன்னியுறுப்பில் வாங்கிக் கொண்டாள்.

எனது உதடுகள் கவியின் இளமை வெடிப்பில் ஊர்வலம் நடத்தின. எனது மூக்கு அந்த வெடிப்பில் இருந்து கிளம்பிய வினோத வாசனையை ஆர்வமாய் நுகர்ந்தது. எனது ஒரு கை அவளது அடி வயிற்றை இதமாய் தடவியது. இன்னொரு கை மேலே சென்று, அவளது முலைப்பந்துகளை பிடித்து அமுக்கியது. முலைக்காம்பை திருகியது. 'ஹ்ஹா.. ஹ்ஹா.. ஹ்ஹா..' என முனகியவாறு, எனது செய்கைகள் தந்த சுகத்தை அனுபவித்த கவி, பின்னர் நான் அவளது பெண்மை வெடிப்பில் வாய் வைத்து 'சர்ர்ர்ர்ர்...' என உறிஞ்சியபோது,

"ஆஆஆஆஆஆஆ...!!!!!!!!!!!" என் அலறினாள்.

"என்னாச்சு கவி..?"

"போதும் அசோக்.. மேல வா..." என் தலைமுடியை பற்றி அவள் இழுக்க, நான் மேலே சென்றேன்.

"ஏண்டா.. புடிக்கலையா..?" நான் குழைவான குரலில் கேட்டேன்.

"ரொம்ப ரொம்ப புடிச்சிருந்தது.." சொல்லியவாறே அவள் என் உதடுகளில் இதமாக முத்தமிட்டாள்.

"அப்புறம் என்ன.. இன்னும் கொஞ்ச நேரம் பண்றேன்.."

"ச்சீய்.. வெட்கமே இல்லடா உனக்கு.. போதும்..!!"

"வேற என்ன பண்றது..?"

"உன் பேன்ட்டை கழட்டு.. எனக்கு அதை பாக்கணும்.."

"நீதான் ரொம்ப தமிழ்ப்பற்று உள்ள ஆளாச்சே.. எதைப் பாக்கனும்னு தமிழ்ல கொஞ்சம் சொல்லேன்.."

"ச்சீய்.. பொறுக்கி..!! கழட்டுடா..!!"

நான் புன்னகைத்தவாறே எனது பெல்ட்டை கழட்டினேன். கவியின் பார்வை முழுக்க என் இடுப்புக்கு கீழேயே பதிந்திருந்தது. ஒருவித ஆர்வமும், ஆசையும் அந்த பார்வையில் கலந்திருந்தன. நான் பேன்ட் பட்டனை கழட்டியதுமே, பரபரத்த கவியின் கைகள் ஜிப்பை அவசர அவசரமாய் கீழே தள்ளியது. பின்பு என் ஆண்மையை மூடியிருந்த ஜட்டியையும்..!! இத்தனை நேரம் உள்ளே முட்டிக்கொண்டு இருந்த எனது ஆயுதம், இப்போது சுதந்திரமாய் தலை நிமிர்ந்து நின்றது.

"வாவ்...!!!!!!"

கவி ஒற்றை வார்த்தையில் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள். நான் அவளுடைய கூந்தலை கோதியவாறு, அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளோ என் ஆணுறுப்பை ஆசையாக பார்த்தாள். அதை இதமாக தடவிக் கொடுத்தாள். கரடு முரடான எனது ஆயுதத்தில், புடைத்திருந்த நரம்புகளில், கவியின் பட்டுக்கை தடவியது, சுகமாக கிளர்ச்சியாக இருந்தது. சுகத்தில் எனது ஆண்மை விருட்டென சீறியது. அவ்வாறு சீறியதும் அவள் சின்னதாய் பயந்தாள்.

"அவுச்ச்ச்ச்...!!!!"

"ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா.."

"ஏண்டா இப்டி திடீர்னு துள்ளுது..?"

"அது அப்படித்தான்.. நீ ரொம்ப அழகா இருக்குறேல.. அதான் அப்படி துள்ளுது.."

"ம்ம்ம்.. ரொம்பதான் வாலு போல.. ஆனா ரொம்ப அழகா இருக்குது.."

"நெஜமா..?"

"எஸ்..!!!"

சொன்ன கவி, திடீரென குனிந்து எனது சிவந்த மொட்டில் தன் உதடுகளை 'இச்ச்ச்...!!' என்று பதித்தாள். உடனே என் உடலெங்கும் 'ஜிலீர்ர்ர்ர்....' என ஒரு இன்ப சிலிர்ப்பு எழ, நான் துடித்துப் போனேன். அவள் அப்படி செய்வாள் என, நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'ச்சீய்...' என்று கத்தியவாறு அவளை பிடித்து தள்ளிவிட்டேன்.

"என்னாச்சு அசோக்..?"

"அறிவு கெட்டவளே.. அதுல போய் கிஸ் பண்ற..?"

"ஏன்.. பண்ணுனா என்ன..? நீ மட்டும் பண்ணின..? நான் பண்ணுவேன்.." அவள் சொல்லிக்கொண்டே என் ஆண்மையை பிடிக்க,

"நோ.. அதெல்லாம் வேணாம்.. நான் வேற ஒன்னு பண்ணப் போறேன்.."

"என்ன..?"

"ம்ம்ம்ம்.. நீ கிஸ் பண்ணினதை.. நான் கிஸ் பண்ணினதுக்குள்ள விட போறேன்.."

"ச்சீய்ய்ய்..!!!"

கவி வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, நான் அவள் மீது சுகமாக கவிழ்ந்தேன். எனது மார்பு அவளது முலைகளை நசுக்க, எனது ஆண்மை அவளது பெண்மையை அழுத்தியது. அந்த முரட்டு ஆயுதம் அவளது வெடிப்பில் லேசாக உரசியதற்கே, அவள் 'ஹ்ஹ்ஹா...' என்று போதையாக முனகினாள். நான் அவளை மேலும் துடிக்க வைக்க நினைத்தேன். எனது ஆணுறுப்பால் அவளது மென்மையான புடைப்பை, அனல் பறக்க அழுத்தி தேய்த்தேன்.

"ஹ்ஹ்ஹா அசோக்க்க்க்க்....!!!!!!!"

என்றவாறு கவி என் கழுத்தை கட்டிக் கொண்டாள். கால்கள் இரண்டாலும் என் இடுப்பை வளைத்து கிடுக்கிப் பிடி போட்டாள். நான் மேலும் சிலமுறை அந்த மாதிரி அழுத்தமாக உரசி, கவியின் முகத்தில் கொப்பளித்த காமக் கிளர்சிகளை ரசித்தேன். அவளுடைய கண்கள் போதையாக செருகியிருந்தன. அடிக்கடி உதடுகளை பற்களால் கடித்து, உணர்சிகளை கட்டுப் படுத்த முயன்றாள். என் முதுகை அழுத்தி பிசைந்தாள்.

"உள்ள விடவா கவி..?" நான் கிறக்கமாக கேட்க,

"ம்ம்ம்..." அவள் உணர்ச்சியில் நெளிந்தவாறு சொன்னாள்.

நான் குனிந்து கவியின் செவ்விதழ்களை கவ்விக் கொண்டேன். மென்மையாக அந்த உதடுகளை உறிஞ்சிக் கொண்டே, என் ஒரு கையை கீழே விட்டேன். உச்சபட்ச விறைப்பில் துடித்துக் கொண்டிருந்த என் ஆண்மையை பிடித்து, அவளது பெண்மை வெடிப்பை தேய்த்தேன். அந்த வெடிப்பின் அடியில் இருந்த சொர்க்க வாயிலில் வைத்தேன். அழுத்தினேன்..!!!

"ஆஆஆஆஆஆஆஆஆ...!!!"

கவி என் உதடுகளில் இருந்து தன் உதடுகளை பறித்துக் கொண்டு அலறினாள். பறித்த அடுத்த நொடியிலேயே நான் மீண்டும் அந்த உதடுகளை கவ்விக் கொண்டேன். இந்த முறை சற்றே ஆவேசமாக கவ்வினேன். சுவைத்துக் கொண்டே மீண்டும் என் இடுப்பை அசைத்தேன். இந்தமுறை சற்றே முரட்டுத்தனமாக..!!! தடைகளை முட்டித் திறந்து கொண்டு என் உறுப்பு அவளது உறுப்புக்குள் வெற்றிகரமாக இறங்கியது. மிக ஆழமாக..!!!!!!!!!!!!!!

எனது தடியுறுப்பை தனக்குள் திணித்தது நிச்சயமாய் கவிக்கு வலித்திருக்க வேண்டும். ஆனால்... எனது உதடுகள் அவளது உதடுகளை கவ்வி உறிஞ்சிய சுகத்தில், அந்த வலியை சுலபமாக தாங்கிக் கொண்டாள். 'ம்ம்க்கும்ம்ம்ம்.. ம்ம்க்கும்ம்ம்ம்.. ம்ம்க்கும்ம்ம்ம்..' என்ற லேசான சுக முனகலை தவிர வேறொன்றும் அவளிடம் காணோம். நான் மேலும் சில வினாடிகள் அவளை முத்தமிட்டு அவளது வேதனையை குறைத்தேன். பின்பு மெல்ல இயங்க ஆரம்பித்தேன்.

"ம்ம்ம்ம்ம்ம்ம்.... அசோக்.... ஹ்ஹஹ்ஹா..."

"க...கவி..!!!!!!!!!!"

"ந..நல்லாருக்குடா... ஆஆஆஆஆஹ்ஹ்...!!"

"ம்ம்ம்ம்ம்ம்... எனக்குந்தான் கவி...!!!!!!!!!!"

இருவருமே சுகத்தில் மிதந்தோம். எனது இடுப்பு மெல்ல மேலெழுந்து, பின்பு சரக்கென கீழிறங்கியது. அவளது உறைக்குள் இருந்து மெல்ல உருவிக்கொண்ட எனது ஆயுதம், பின்பு மீண்டும் அந்த இறுக்கமான உறைக்குள்ளேயே ஆவேசமாய் பாய்ந்தது. நான் வெளியே எடுக்கும்போது, 'ஹ்ஹ்ஹா...' என சுகமாக முனகும் கவி, உள்ளே செலுத்தும்போது 'ஆஆஆஆவ்வ்வ்..!!!' என்று முக்குவாள். அவள் அந்த மாதிரி எழுப்பிய காமக் கூச்சல்கள் என் உடலில் ஏறியிருந்த சுகத்தை இருமடங்காக்கின.

"ஆஆஆஆஆஹ்ஹ்...!! வலிக்குதுடா.. கொஞ்சம் மெதுவா..!!"

"வலிக்குதா..? எனக்கு வலிக்கலை.."

"உனக்கு எப்படி வலிக்கும்..? அவ்ளோ பெருசா வச்சிருக்கியே.. எனக்குத்தான் வலிக்கும்.. ஆஹ்ஹ்... மொரட்டுக்கழுதை...!! வலிக்குதுடா.."

"நான் நம்ப மாட்டேன்பா..!!"

"என்ன நம்ப மாட்ட..?"

"உனக்கு வலிக்குதுன்னு நீ சொல்றதை.. நீதான் பொய் சொல்றதுல பெரிய தில்லாங்கடியாச்சே..? இதுவும் பொய்தான..?"

"ச்சீய்.. பொய் இல்லை.. நெஜமாவே.."

"இல்ல இல்ல.. பொய்..!!" சொல்லிக்கொண்டே நான் வேகத்தை கூட்ட, அவள் துடித்தாள்.

"ஆஆஆஆஆஹ்ஹ்...!! உண்மை அசோக்..!!"

"நம்ப மாட்டேன்.. பொய்..!!"

"உண்மைடா..!!"

"பொய்.. பொய்.. பொய்.."

"ஆஆஆஆஆ...!!!"

அவள் உண்மையிலேயே பொய்தான் சொன்னாள். எனக்கு நன்றாக தெரியும். எனது வேகம் அவளுக்கு நிச்சயம் பிடித்திருந்தது. கொஞ்சம் வலித்திருக்கலாம். ஆனால் அந்த வலியை விட, எனது வேகம் தந்த சுகம் வெகுவாக இருந்திருக்கும். அப்புறம் எதற்காக என் வேகம் குறையாமல் இருக்க, கால்கள் அகலமாய் திறந்தாள்..? கண்களை மேலும் போதையை செருகினாள்..? வாயை 'ஓ' வென திறந்து சுகம் ரசித்தாள்..? தாக்க வரும் என் வாளை தன் கேடயத்தால் திரும்ப தாக்கினாள்..?

ஆமாம்..!! நானும் கவியும் கட்டிலில் காமப்போர் புரிந்தோம்..!! நான் அவளது பெண்மை மத்தளத்தில் தாளம் தட்டிக்கொண்டே இருந்தேன்..!! தட்ட தட்ட.. மேலே அவளது கோபுர கலசங்கள் ரெண்டும் அதிர்ந்து குலுங்கின..!! அவளது கைகள் என் முதுகை பிசைந்து பிசைந்து பார்த்தன..!! எனது நெஞ்சு அவளது மார்புக் கோளங்களை அழுத்தி நசுக்கிற்று ..!! எங்கள் உதடுகள் அவ்வப்போது ஆவேசமாய் ஒட்டிக் கொண்டு, பிரிய மறுத்தன..!! எங்கெங்கும் சுகம் எக்குத்தப்பாய் எகிற, எங்கள் உடல்கள் ரெண்டும் துடித்துக் கொண்டே கிடந்தன..!! நெடுநேரம்.. நெடுநேரம்..!!!

உச்சமடைந்து ஆட்டம் நின்றபோது, எங்கள் உடல்கள் ரெண்டும் அயர்ந்து போயின. உடலெங்கும் எக்கச்சக்கமாய் சுகமும், வியர்வையும்..!! நான் களைத்துப் போய் மெத்தையில் வீழ்ந்திருந்தேன். கவி என் மார்பைக் கட்டிக்கொண்டு கிடந்தாள். என் மார்புக்காம்பில் அவ்வப்போது முத்தமிட்டாள். இதமாக என் மார்பை தடவிக் கொடுத்து, ஆசுவாசப் படுத்தினாள். எனக்கு சுகமாக இருந்தது. கண்ணயர்ந்தேன்.

கொஞ்ச நேரந்தான் அந்தமாதிரி கிடந்திருப்பேன் என்று நினைக்கிறன். பின்பு 'கடக்.. கடக்.. கடக்..' என்று எதோ சத்தம் டிஸ்டர்ப் செய்ய, இமைகளை மெல்ல பிரித்தேன். என் மார்பில் கிடந்த கவி, இப்போது எழுந்து அமர்ந்திருந்தாள். தலையை திருப்பி விழிகளை சுழற்றினேன். அங்கே காணக் கிடைத்த காட்சியில் பக்கென்று அதிர்ந்து போனேன். கவி அந்த பாய்சன் பாட்டிலை தன் தொண்டைக்குள் சரித்துக் கொண்டிருந்தாள்..!!!! பதை பதைத்து போனவனாய்,

"ஏய்.. கவி.. என்ன பண்ற..."

என்றவாறு அவசரமாய் அவளை தடுக்க எழுந்தேன். இப்போது கவியும் படக்கென என் பக்கமாக திரும்பினாள். அவ்வளவுதான்..!! அவளுடைய முகத்தை பார்த்ததுமே, தடுக்க நீண்ட என் கைகள் அப்படியே நின்றன. சோர்ந்து போய் கீழே விழுந்தன. கவி குடித்ததை விழுங்காமல், அப்படியே வாய்க்குள் வைத்தவாறு, என்னைப் பார்த்து திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தாள். எனக்கு ஒரு நொடியில் எல்லாம் விளங்கிப் போனது..!! 'உஷ்ஷ்ஷ்... ப்பா... முடியலை...' என்று வடிவேலு சொல்வது மாதிரி சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் அடக்கிக்கொண்டு, சாந்தமான குரலில் அவளிடம் சொன்னேன்.

"மொதல்ல.. அதை முழுங்கு.."

நான் சொன்னதும் அவள் வாயிலிருந்ததை, பட்டென விழுங்கினாள். விழுங்கிவிட்டு மீண்டும் என்னையே பார்த்தாள். அதே திருட்டு முழி..!! அமைதியாக அவள் அப்படியே திருதிருவென விழித்துக் கொண்டிருக்க, நான்தான் பற்களை கடித்தவாறு கேட்டேன்.

"ரொம்ப தாகமோ..???"

"ம்ம்ம்.. பண்ணினதுல ரொம்ப டயர்டாயிப் போச்சு அசோக்.." அவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

"ஓ..!! என்னது அது..?"

"எது..?"

"பாட்டில்ல இருக்குறது..?"

"பெப்ஸி..!!!" அவள் வாய்க்குள்ளேயே முனகினாள்.

"ம்ம்ம்ம்...????" நான் சற்று குரலை உயர்த்தி கேட்டேன்.

"டயட் பெப்ஸி...!!"

"ஓஹோ..? உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் பாய்சனா..? டெல்லில எல்லாரும் இதைக் குடிச்சுத்தான் சூசயிட் பண்ணிக்கிறாங்களா ..?" நான் கடுப்புடன் கேட்க,

"ம்ஹூம்..!!" அவள் இஞ்சி தின்ற குரங்கு மாதிரி சொன்னாள்.

"ஸோ.. சூசயிட் பண்ணிக்க போறேன்னு சொன்னதும்.. பொய்..!!"

"இல்லை அசோக்.. சூசயிட் பண்ணிக்கிற மாதிரிதான் ப்ளான்.. பாய்சன் வாங்கத்தான் காலைல போனேன்.."

"பொய் சொல்லாதடி.. அறைஞ்சுடுவேன்.."

"இல்லை.. நெஜமாத்தான்.."

"அப்புறம் ஏன் பாய்சன் வாங்கலை..?"

"பாய்சன் கடை எங்கேயுமே இல்லை.. பெப்ஸி கடைதான் நெறைய இருந்தது.."

"ஓஹோ..? உடனே பெப்ஸியை வாங்கி இதுல ஃபில் பண்ணிட்டியாக்கும்..?"

"ம்ம்ம்ம்.."

"இங்க கொஞ்சம் பக்கத்துல வாயேன்.."

"ஏன்.. அடிக்க போறியா..? வேணாம் அசோக்.. ஏற்கனவே நீ இவ்ளோ நேரம் அடிச்சதுல.. உடம்புலாம் வலிக்குது.. கொஞ்சம் கேப் விடேன்.."

"அடிக்கலாம் இல்ல.. பக்கத்துல வா.. உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..?"

"என்ன கேக்கப் போற..? இதுவரை நான் உன்கிட்ட எத்தனை பொய் சொல்லிருக்கேன்னா..?"

"சேச்சே.. இனிமே அந்த மாதிரிலாம் ஒரு தப்பான கேள்வியை உன்கிட்ட நான் கேட்பானா..?"

"அப்புறம்..?"

"உன்கிட்டலாம்... எத்தனை உண்மை சொல்லிருக்கேன்னுதாண்டி கேட்கனும்..!! அதுக்கு ஆன்ஸர் ஈஸியா இருக்கும்..!!"

நான் சிரித்தபடி சொல்லிக்கொண்டே, அவளை என்னோடு இழுத்து அணைத்துக் கொண்டேன். 'ஆஆஆவ்வ்வ்...' என்று கத்தியபடி அவளும் என்னோடு வந்து ஒட்டிக் கொண்டாள். அவளுடைய பட்டு மார்புகள், மெத்தென்று என் மார்பில் ஒத்தடம் கொடுத்தன. அவள் குறும்பாக என்னை பார்த்தபடி, என் மார்புக்காம்பை தேய்த்துக் கொடுத்தாள். நான் அவளுடைய வெற்று முதுகை இதமாக தடவினேன். பின்பு அவளுடைய நெற்றியில் காதலாக முத்தமிட்டுவிட்டு, தொண்டையை செருமியவாறு கேட்டேன்.

"ஸ்டார்ட் பண்ணலாமா..?"

"ம்ம்.. ஓகே.."

"நான் ஆரம்பத்துல இருந்து வர்றேன்.."

"கேளு.."

"உன் பேர் கவி.."

"ஃபால்ஸ்.."

"ஃபால்ஸா..?" நான் நிஜமாகவே பதறிப் போனேன்.



"ம்ம்.. என் பேர் கவி இல்லை.. கவிதா..!!"

"ஐயே...!! மூஞ்சைப் பாரு..!! ம்ம்ம்ம்.. ஊர் டெல்லி.."

"ட்ரூ.."

"அப்பாவும், அம்மாவும் ஆர்மில இருக்குறாங்க.."

"ட்ரூ.."

"உன் அண்ணனும் ஆர்மில சேரணும்னு அடம் புடிச்சுக்கிட்டு இருக்குறான்.."

"ஃபால்ஸ்.. அண்ணன் சரியான தொடை நடுங்கி.. அப்பாதான் அவனை ஆர்மில சேர சொல்லி.. டார்ச்சர் பண்ணிட்டு இருக்குறாரு.."

"ஓஹோ..? ம்ம்ம்... MCA செகண்ட் இயர் படிக்கிறது..?"

"உண்மை..!!'

"அதுல ரெண்டு அரியர் வச்சிருக்குறது..?"

"பொய்.. நாலு..!!"

"ம்ம்ம்.. என்னை லவ் பண்றது..?"

"உண்மை..!!"

"என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறது..?"

"உண்மை.. உண்மை..!!"

"என்மேல உயிரையே வச்சிருக்குறது..?"

"உண்மை.. உண்மை.. உண்மை..!!"


(முற்றும்)

5 comments:

  1. எல்லா ஸ்டோரிஸ்-லயும் அசோக்-தானா ? அப்புறம் ஒரே மாதிரி வார்த்தைகள் (மார்பு பந்துகள், ‘பிடிச்சிருந்துச்சா’ etc.)

    ReplyDelete
  2. ஒரு அழகான காமம் கலந்த கவிதை போன்ற கதை. நன்றாக இருந்தது. இன்னும் எழுதுங்கள்.

    அன்புடன்

    காமரூபன்

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...