Social Icons

கண்ணாமூச்சி ரே ரே - 1







திடீரென இப்படி ஒரு ஆசை எனக்கு.. த்ரில்லர் கதை எழுதவேண்டும் என்று..!! காதலை அதிகம் சொன்னதாலோ என்னவோ.. அது ஒரு எளிமையான விஷயமாக ஆகிப்போனது எனக்கு.. ஐ மீன்.. எழுதுவதற்கு..!! த்ரில்லர் அப்படி அல்ல.. எனக்கு அதிகமாக கைவராத கலைதான்..!! முயற்சிக்கிறேன்.. உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்..!!

த்ரில்லர் என்றவுடன்.. பரபரப்பாக எதையும் எதிர்பார்த்து விடாதீர்கள்..!! மதன மோக ரூப சுந்தரி, பிரேக்கிங் பாயிண்ட் கதை எல்லாம் படித்திருக்கிறீர்கள்தானே..?? அதே போன்றதொரு ஸ்டைலில்.. எனக்கு மிக மிக பிடித்த மாதிரியான.. Slow paced thriller-ஆகவே இந்தக்கதையை எழுத திட்டமிட்டுள்ளேன்..!! ஆங்காங்கே சில பரபரப்பு அம்சங்கள்.. மற்றபடி மொத்தக்கதையும் மிதமான வேகத்திலேயே பயணிக்கும்..!! படித்து பாருங்கள்.. கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்



அத்தியாயம் 1

ஆண்டு: கி.பி 1896
இடம்: மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கிற அகழி என்கிற மலை கிராமம்.

மழைமேகம் திரண்டிருக்க.. மாலை வானம் இருண்டிருந்தது..!! சுற்றிலும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த காட்டுமரங்கள்.. சூரியனின் வெளிச்சத்தை சுத்தமாய் உறிஞ்சியிருந்தன..!! மேல்வானத்தில் பளிச்சென்று ஒரு மின்னல் கீற்றோடு.. மேற்குமூலையில் திடுமென ஒரு இடி முழக்கம்..!! உறைந்திருந்த மேகங்கள் இப்போது கொஞ்சம் உருக ஆரம்பிக்க.. ஊசிக்கற்றைகளாய் தூறல் துளிகள் மரங்களை ஊடுருவின..!!

அந்த காட்டு மரங்களுக்கு உட்புறமாக.. அகலமாய் உயரமாய் இருந்த அந்த கல்மேடையை சுற்றிலும்.. அகழியின் எழுபத்து சொச்ச குடும்பத்தின் பிரதிநிதிகள் குழுமியிருந்தனர்..!! அதில் எழுபது சதவீதம் பேருக்கு மேல்சட்டை இல்லை.. பாதிப்பேர் பவ்மயமாக கைகளை கட்டியிருந்தனர்..!! பக்கவாட்டில் மூலைக்கொரு தூண்களுடனும்.. பாறையை செதுக்கி அமைத்த கூரையுடனும்.. காட்சியளித்தது அந்த கல்மேடை..!! நான்கு தூண்களில் ஒன்றில் சன்னதக்காரர் சாய்ந்திருந்தார்.. சாமியாடி முடித்த களைப்பில் கண்கள் செருகியிருந்தார்..!!

கல்மேடையின் மையத்தில், கைத்தடியை ஊன்றியவாறு புவனகிரி நின்றிருந்தார்.. அவருக்கு பின்புறமாக வேல்க்கம்பு ஏந்திய நான்கு அடியாட்கள்..!! அவருடைய பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்தது.. சிவந்து போயிருந்த அந்த கண்களில் ஒருவித அனல்கக்கும் வன்மம்..!! வெல்வட் துணியாலான இறுக்கமான உடை அணிந்திருந்தார்.. தடிமனாக கழுத்தில் தொங்கிய தங்கச்சங்கிலியில், நீலநிறக்கல் பதிக்கப்பட்ட பதக்கம் தகதகத்தது..!! இரண்டு விரல்களை மட்டும் மூளியாக்கி, எட்டு விரல்களுக்கு முரட்டு மோதிரங்கள்.. வலது கையில் ஒரு தங்க காப்பு.. கால்களுக்கு முனை நிமிர்ந்த தோல்செருப்பு..!!

அப்போதுதான் நீளமாக பேசி முடித்திருந்தார் புவனகிரி..!! நெஞ்சில் எரிந்து கொண்டிருந்த ஆத்திரத்தை ஜீரணிக்க.. சிறிது அவகாசம் தேவையென அமைதியாகிப் போயிருந்தார்..!! அவருடைய முகத்தையே பயமும், பக்தியுமாய் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம்.. அடுத்து அவர் சிந்தப்போகிற வார்த்தைகளுக்காக.. இப்போதே காது தீட்டி கவனமாய் காத்திருந்தது..!!

'டமார்' என்ற சப்தத்துடன் இப்போது மீண்டும் ஒரு இடியோசை..!! அதைத்தொடர்ந்து.. வாள் கொண்டு வானத்தை கிழித்துவிட்டது போல.. 'ச்ச்சோ'வென்று மழை மேலிருந்து கொட்ட ஆரம்பித்தது..!! நனைய ஆரம்பித்த மனிதகூட்டம்.. இம்மியளவும் நகர முனையவில்லை..!!

கி.பி 1896..!! இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்டம் அது..!! ஒட்டுமொத்த பிரிட்டிஷ் இந்தியாவில்.. இருபத்தியொரு நிலப்பரப்புகள் மட்டுமே.. தனித்த அரசு எந்திரமும், நிர்வாக சுதந்திரமும் பெற்றிருந்தன..!! ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்துக்கு உட்படாமல்.. அவர்களுடைய மறைமுக ஆட்சி என்கிற மாயப்போர்வையின் கீழ்.. இற்றுப்போன இறுமாப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன..!! சமஸ்தானங்கள் என்று அழைக்கப்பட்டன அத்தகைய நிலப்பரப்புகள்..!! அந்த இருபத்தியொரு சமஸ்தானங்களில்.. மிகப்பெரியதும், மிகமுக்கியமானதுமான ஒன்றுதான்.. மைசூர் சமஸ்தானம்..!!

நிலவரியை மக்களிடம் நேரடியாக வசூல் செய்த மைசூர் அரசு.. அதில் ஒருபகுதியை ஆங்கிலேய அரசுக்கு கப்பமாக கட்டிவிடும்..!! மைசூர் அரசால் பிற்காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சில தமிழர் வாழ்கிற பாளையங்கள்.. நிலவரி செலுத்தாமல் முரண்டுபிடிக்கவே.. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வரிவசூல் செய்கிற முறை அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது..!! அவ்வாறு வரி வசூல் செய்வதற்கென்றே.. பகுதிவாரியாக பல குழுக்கள் அமைக்கப்பட்டு.. அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற அதிகாரிகள் அதற்கென நியமிக்கப் பட்டிருந்தனர்..!!

1876 முதல் 1878 வரை.. பெரிய அளவில் நிலவிய பஞ்சத்தினாலும்.. பசி பட்டினியாலும்.. பரவிய காலராவினாலும்.. ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உயிர்கள்.. கொத்துக்கொத்தாய் செத்து மடிந்தன..!! மைசூர் சமஸ்தானம் மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவை சந்தித்தது..!! அந்த சீர்குலைவில் இருந்து அரசு கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு கொண்டிருந்த சமயம்.. 1894-ல்.. மைசூர் மஹாராஜா ஐந்தாம் சாமராஜேந்திர உடையாரின் அகால மரணம்..!! அப்போது அவருடைய மகன் கிருஷ்ணராஜ உடையாருக்கு பத்தே வயது..!! மகன் வளர்ந்து வாலிபம் பெறும் வரைக்குமாக.. மஹாராணியே வேறுவழியன்றி அரியணையில் அமர நேர்ந்தது..!!

நாட்டில் நிலவிய பொருளாதார சீர்குலைவு ஒருபுறம்.. ஆட்சிப் பொறுப்பில் ஏற்பட்ட திடீர் குழப்பம் மறுபுறம்..!! வரி வசூல் செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.. அப்பாவி மக்களிடம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருந்தனர்.. சிற்சிறு கிராமங்களை தங்களுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்..!! அகழியும் அதுமாதிரியான ஒரு கிராமம்தான்.. அதனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அதிகாரிதான்.. இந்த புவனகிரி..!!

மக்கள் புவனகிரியின் வார்த்தைகளுக்காக காதுதீட்டி காத்திருக்க.. அவருடைய காதுகளுக்குள்ளோ.. அவரது மகன் தீர்த்தபதி நேற்று ஆவேசமாக பேசிய வார்த்தைகள், இப்போது திரும்பவும் ஒலித்தன..!!

"அவளைத்தான் நான் திருமணம் செய்துக்க போறேன்.. அதை யாராலயும் தடுக்க முடியாது..!!"

அந்த வார்த்தைகள் அவருடைய காதுகளுக்குள் ஒலித்ததுமே.. அவர் தனது தலையை சரக்கென சிலுப்பிக் கொண்டார்..!! அவரது பிடரியில் வழிந்த கேசம்.. அப்படியும் இப்படியுமாய் அலை பாய்ந்தது.. கன்னத்து சதைகளும், காதணிகளும் கிடுகிடுத்தன..!! நனைந்து கொண்டிருந்த மக்களை நிமிர்ந்து பார்த்தார்.. நாடி நரம்பெல்லாம் புடைக்க ரௌத்திரமாக கத்தினார்..!!

"சொல்லுங்க.. அவ இந்த ஊருக்கு தேவையா..??"

"தேவையில்ல.. தேவையில்ல..!!" கூட்டத்தினர் ஒருசேர கத்தினர்.

"சன்னதக்காரர் சொன்னதை கேட்டிங்கள்ல..??"

"கேட்டோம்.. கேட்டோம்..!!"

"உங்க கஷ்டத்துக்கெல்லாம் யார் காரணம்..??"

"அவதான்.. அவதான்..!!"

"என்ன செய்யலாம் அந்த வேசை முண்டையை..??" வெறுப்பை உமிழ்ந்தார் புவனகிரி

"கொல்லனும்.. கொல்லனும்..!!" வெகுவாக ஒத்துழைத்தது ஊர்ஜனம்.

முகத்தில் இப்போது ஒருவித மலர்ச்சி பரவ ஆரம்பிக்க.. புவனகிரி தலையை திருப்பி பின்னால் பார்த்தார்.. வன்மம் மிக்க அவரது கண்களில் ஒருவித குரூர கூர்மை..!! அவருடைய அந்த சைகைக்குத்தான் காத்திருந்த மாதிரி.. அவருக்கு பின்னால் நின்றிருந்த அந்த நால்வரும் இப்போது உடனடியாய் பரபரப்பாயினர்.. கையிலிருந்த வேல்க்கம்பை சுழற்றியவாறு, கல்மேடையில் இருந்து குதித்தனர்..!!

புவனகிரிக்கு தன் மகன் தீர்த்தபதி மீது பெரிய அன்போ அக்கறையோ எப்போதும் இருந்ததில்லை.. சிறுவயதில் இருந்தே அவனுக்கு தன்மீது அவ்வளவாக ஒட்டுதல் இல்லை என்பதையும் அவர் நன்கறிவார்..!! ஆனாலும்.. அவனுடைய திருமணம் தனக்கு பிடித்த வகையிலே அமையவேண்டும் என்பதில் அவர் ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தார்.. அதற்கென பல திட்டங்களும் வைத்திருந்தார்..!! திடீரென மகன் வந்து அவ்வாறு உரைத்ததும் உள்ளம் கொதித்து போனார்.. அதிலும் அவன் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சொன்ன அந்தப்பெண்..!! அவளுடைய பெயரை கேட்டதுமே இவரது ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போயிற்று.. அவளுக்கென அவன் வாக்குவாதம் செய்ததில் இவர் மூர்க்கமாகிப் போனார்..!!

உடனடியாய் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.. உள்ளத்தில் பொங்கிய ஆத்திரம், குரூரமாய் ஒரு திட்டம் தீட்ட அவரை தூண்டியது..!! ஊரில் பரவிய தொற்றுநோயும்.. நிலச்சரிவால் நேர்ந்திட்ட சில துர்மரணங்களும் அவருடைய நினைவுக்கு வந்தன.. சாமியருள் வந்து சாபமும் வரமும் தருகிற சன்னதக்காரர் ஞாபகத்துக்கு வந்தார்..!! இரண்டையும் சேர்த்து ஒரு முடிச்சு போட்டார்.. இதோ அவரது திட்டம் எதிர்பார்த்த பலனை தந்துவிட்டது..!! இவரது சுயவெறுப்புக்கு அவளை காவு தர.. ஊர் மக்களை தயார் செய்துவிட்டார்..!!

திட்டம் பலித்ததில் மிகவும் திருப்தியுடனே காணப்பட்டார் புவனகிரி..!! கல்த்தூணில் சாய்ந்திருந்த சன்னதக்காரரை ஒருமுறை திரும்பி பார்த்தார்.. அவரோ ஒருவித குற்ற உணர்வுடன் தலையை கவிழ்த்துக் கொண்டார்..!!

அதே நேரத்தில்.. அகழியின் ஊர் எல்லையை ஒட்டிய சமவெளி பிரதேசத்தில்.. அடுத்த ஊருக்கு இறங்குகிற மலைச்சரிவு ஆரம்பமாகிற இடத்தில்.. மசமசப்பான விளக்கு வெளிச்சத்துடன், மழைநீரில் நனைந்தவாறு காட்சியளித்தது அந்த வீடு..!! குழல் மூங்கில்களால் கட்டப்பட்ட குடில் வீடு.. வேசியென புவனகிரி வெறுப்பை உமிழ்ந்த குறிஞ்சியின் வீடு..!!

கல்மேடையில் இருந்து குதித்த அடியாட்களின் பரபரப்பு.. வீட்டுக்குள் இருந்த குறிஞ்சியிடமும் காணப்பட்டது..!! தரையில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தவள்.. கட்டிலுக்கு அடியில் இருந்த அந்த தகரப்பெட்டியை வெளியே இழுத்தாள்..!! 'க்றீச்ச்ச்' என்ற ஒலியுடன் வெளியே வந்த பெட்டியை திறந்து.. உள்ளிருந்த பொருட்களை பரபரவென தரையில் வாரி இறைத்து எதையோ தேடினாள்..!! அவளுக்கு பின்னால் நின்றிருந்த தீர்த்தபதி.. இப்போது கவலை தோய்ந்த குரலில் சொன்னான்..!!

"எ..என்னை மன்னிச்சுடு குறிஞ்சி..!!"

தீர்த்தபதி அவ்வாறு சொன்னதும் குறிஞ்சி அவனை ஏறிட்டு ஒருகணம் கூர்மையாக பார்த்தாள்.. பிறகு மீண்டும் தலையை குனிந்து.. தகரப்பெட்டிக்குள் தனது தேடுதலை தொடர்ந்தவாறே.. ஆதங்கமான குரலில் கேட்டாள்..!!

"ஏன் இப்படி செஞ்சீங்க.. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம..??"

"எ..எல்லாம்.. உன் மேல இருக்குற ஆசைலதான் குறிஞ்சி..!!"

"ஆசை இருந்தா அதை என்கிட்ட சொல்லிருக்கலாமே.. நான் தீர்த்து வச்சிருப்பேனே..??"

"இல்ல.. நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட..!!"

"நீங்கதான் தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க..!! அவரோட பையனா இருந்தும்.. ஆணவம்ன்றது கொஞ்சம் கூட இல்லாம நீங்க பேசின விதம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. அதனாலதான் நானும் உங்ககூட பேசினேன் பழகினேன்..!! மற்றபடி அந்த மாதிரி எண்ணம் உங்க மேல எனக்கு எப்போவும் வந்தது இல்ல..!!"

"எனக்கு தெரியும்..!!"

"அப்புறம் எப்படி உங்க அப்பாகிட்ட அப்படி நீங்க சொல்லலாம்..??"

"உன்னை எப்படியாவது கல்யாணம் செய்துக்கணும்னு எனக்கு ஆசை குறிஞ்சி..!! அப்பாவை சமாதானம் செய்து சம்மதிக்க வைக்க முடியும்னு நெனைச்சேன்.. கடைசில சண்டை போட வேண்டியாதா போயிடுச்சு..!! அப்பா இந்த மாதிரி செய்வார்னு.."

தீர்த்தபதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குறிஞ்சி சரக்கென முகத்தை திருப்பி அவனை பார்த்தாள்.. அவனுடைய கண்களை தனது கண்களால் கூர்மையாக சந்தித்தவாறே இறுக்கமான குரலில் சொன்னாள்..!!

"வேற என்ன செய்வார்னு எதிர்பார்த்திங்க..?? உங்க அப்பாவை பத்தி உங்களை விட எனக்கு நல்லா தெரியும்..!!" என்றவள் சற்றே நிறுத்தி,

"புரியுதா..??" என்று அழுத்தமாக கேட்டாள்.


வார்த்தைகளில் வெளிப்படாத ஒருவகை அர்த்தம்.. குறிஞ்சியின் அந்த கூர்மையான பார்வையில் வெளிப்பட்டது..!! தீர்த்தபதியாலும் அந்த அர்த்தத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.. அவனையும் அறியாமல் அவனது தலை கவிழ்ந்துகொண்டது.. இப்போது சற்றே கம்மலான குரலில் சொன்னான்..!!

"மன்னிச்சுடு குறிஞ்சி.. இப்படி ஆகும்னு நான் எதிர்பாக்கல..!!"

"ப்ச்.. தப்பு பண்ணிட்டிங்க.. பெரிய தப்பு பண்ணிட்டிங்க..!!"

சலிப்பாக சொன்ன குறிஞ்சி, அந்த தகரப்பெட்டியில் தொடர்ந்து எதையோ தேடினாள்.. பிறகு மரத்தாலான அந்த சிறிய பெட்டியை உள்ளிருந்து வெளியே எடுத்தாள்.. சிறுக சிறுக சேர்த்த சில நகைகள் அடங்கிய பெட்டி..!! பச்சை நிறத்தாலான ஒரு துணியை கட்டிலில் விரித்து, அதன் மையமாக அந்த பெட்டியை வைத்தாள்.. கூரையில் தொங்கிய பானைக்குள் கைவிட்டு பணமுடிப்பை வெளியே எடுத்தாள்.. கொடியில் தொங்கிய சில உடைகளை அள்ளிக்கொண்டாள்..!! அவ்வளவையும் அந்த பச்சைத்துணியால் சுற்றி சிறு மூட்டையாக்கினாள்.. முதுகுக்கு குறுக்காக அந்த மூட்டையை அணிந்துகொண்டாள்..!!

"இந்தா.. இதையும் வச்சுக்கோ..!!"

அணிந்திருந்த பொன் நகைகளை கழற்றியிருந்த தீர்த்தபதி.. அவற்றை உள்ளங்கையில் வைத்து குறிஞ்சியிடம் நீட்டினான்..!! அவனை கூர்மையாக ஏறிட்ட குறிஞ்சி.. தலையை மெலிதாக அசைத்து 'வேண்டாம்' என்று மறுத்தாள்..!! அவன் மீதிருந்த பார்வையை விலக்காமலே.. அலமாரியில் இருந்து அந்த குறுவாளை எடுத்து தன் இடுப்பில் செருகிக் கொண்டாள்..!! 'உன்னால் எனக்கு எத்தனை இடர்பாடுகள் பார்..' என்பது மாதிரி இருந்தது அவள் தீர்த்தபதியை பார்த்த பார்வை..!!

"நேரம் ஆயிட்டு இருக்கு குறிஞ்சி.. எந்த நேரமும் அவங்க இங்க வரலாம்.. நீ சீக்கிரம் புறப்படு..!!"

தீர்த்தபதி சொல்ல, குறிஞ்சி நீளமாக ஒரு பெருமூச்சினை வெளிப்படுத்தினாள்.. சாளரத்தின் வெளியே சடசடத்த மழையை ஒருமுறை திரும்பி பார்த்தாள்.. கட்டிலில் கிடந்த அந்த சிவப்பு நிற அங்கியை கையில் எடுத்தாள்.. தனது உடலை முழுதும் போர்த்தும்படியாக தலையை சுற்றி அணிந்து கொண்டாள்.. கழுத்துப் பகுதியில் இருபுறமும் தொங்கிய நாடாக்களை சரக்கென இழுத்து முடிச்சிட்டாள்.. அவசரமாய் வாசலை நோக்கி நடந்தாள்..!!

தீர்த்தபதி பின்தொடர வீட்டிலிருந்து வெளிப்பட்டாள்..!! கும்மிருட்டு.. ஜிவ்வென்று கொட்டுகிற மழை.. மின்னல் வெளிச்சத்துடன் இடிமுழக்கம்.. ஏதோ ஒரு காட்டு விலங்கின் தூரத்து ஓலம்..!! மழையில் நனைந்து நடந்த குறிஞ்சி.. தலைகுனிந்து தயாராய் நின்றிருந்த அந்த குதிரையை நெருங்கினாள்.. அதன் முதுகில் கைபதித்து லாவகமாக மேலேறினாள்..!!

"பார்த்து கவனமா போ குறிஞ்சி..!!"

கனிவுடன் சொன்ன தீர்த்தபதியை ஒருகணம் சலனமில்லாமல் பார்த்தாள்..!! பிறகு.. குதிரையின் கடிவாளத்தை பிடித்து சரக்கென இழுத்தவள்.. 'ஓவ்' என்று சப்தமெழுப்பியவாறு கால்களை விரித்து குதிரையின் விலாப்பகுதியை உதைக்க.. அது உடனடி வேகமெடுத்து 'விர்ர்ர்ர்ர்' என்று கிளம்பியது..!! மழை நீரின் அடர்த்தியையும் மீறி, எதிர்க்காற்றின் அசுர வேகத்தில்.. அவள் அணிந்திருந்த சிவப்பு அங்கி உயரெழும்பி பறந்தது..!! 'தடக்.. தடக்..' என குளம்படி ஓசையுடன் பறந்து செல்கிற குதிரையை.. பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் தீர்த்தபதி..!!

குறிஞ்சியின் குதிரை அந்த இடத்தை விட்டு கிளம்பிய சில நொடிகளிலேயே.. வேறு திசையில் இருந்து அதே 'தடக்.. தடக்..' ஓசையுடன் நான்கு குதிரைகள் வந்தன.. கடிவாளம் இழுக்கப்பட்டு குறிஞ்சியின் வீட்டின் முன்பாக வந்து நின்றன..!! குறிஞ்சியை இழுத்து செல்ல இத்தனை சீக்கிரம் வருவார்கள் என்று தீர்த்தபதி சற்றும் எதிர்பார்த்திரவில்லை.. குழம்பிப் போனான்..!! கையிலிருந்த நகைகளை உடனே பின்புறமாக மறைத்தவன்..

"அ..அவளை இழுத்து செல்லத்தான் நானும் வந்தேன்.. அதற்குள்ள விஷயம் தெரிஞ்சு அவ தப்பிச்சுட்டா..!!"

என்று தடுமாற்றமாக சொன்னான்..!! தொடர்ந்து.. அவள் சென்ற திசையென தவறான திசையை காட்ட எண்ணி அவன் கையை உயர்த்துகையிலேயே..

"அதோ.. அங்க போறா பாரு..!!"

குதிரையில் வந்தவர்களில் ஒருவன்.. குறிஞ்சி சென்ற திசையை சரியாக கண்டறிந்து கொண்டான்..!! சற்றும் தாமதியாமல்.. நால்வரும் அதே திசையில் தங்கள் குதிரைகளை முடுக்கி விரைந்தனர்..!! 'குறிஞ்சி இந்த ஊரை விட்டு சென்றால் போதும்' என்று எண்ணியிருந்த தீர்த்தபதியின் நெஞ்சில் இப்போது ஒருவித கலக்கம்.. குற்ற உணர்வு ஒன்று அவனுடைய மனதில் மெலிதாக பரவ ஆரம்பித்தது..!!

கடும் மழை பொழிகிற மலைப்பிரதேசம்.. கரி பூசிவிட்ட மாதிரியாக அடர்இருள்.. நெருக்கமாய் வளர்ந்திருக்கிற காட்டுமரங்கள்.. அதற்குள்ளே வளைந்து நெளிந்து செல்கிற குறுகலான சாலை..!! அந்த சாலையில்.. சிவப்பு நிற அங்கி காற்றில் படபடக்க.. வெள்ளை நிற குதிரையில் குறிஞ்சி பறந்து கொண்டிருந்தாள்..!! சிறிது தூர இடைவெளியில்.. இன்னும் நான்கு குதிரைகளில்.. புவனகிரியின் ஆட்கள் அவளை விரட்டிக் கொண்டிருந்தனர்..!!

குறிஞ்சி குதிரையேற்றம் அறிந்தவள் என்றாலும், கைதேர்ந்தவள் என்று சொல்ல முடியாது..!! பின்தொடர்ந்து சென்றவர்களுக்கோ அது அன்றாட பணியும் பயிற்சியுமாக இருந்தது..!! குறிஞ்சிக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்துகொண்டே வந்தது..!!

குதிரையை விரட்டிக்கொண்டே.. குறிஞ்சி தலையை மெல்ல திருப்பி பின்னால் பார்த்தாள்..!! துரத்துபவர்கள் இப்போது தனக்கு இன்னும் நெருக்கமாக வந்திருப்பதை அறிந்ததும்.. அவளுக்குள் ஒரு நடுக்கம் பரவியது..!! மாட்டிக்கொள்வோமோ என்பது மாதிரியான ஒரு பயம்.. அவளுடைய மனதினை வந்து கவ்விக்கொண்டது..!! குதிரையின் வயிற்றை உதைத்து.. அதனை வேகம்கொள்ள தூண்டினாள்..!!

இடைவெளி நிறைய குறைந்து போனதும், நால்வரில் ஒருவன் திடீர் முடிவெடுத்தான்.. கையிலிருந்த வேல்க்கம்பை சுழற்றி, காற்றில் சரக்கென வீசினான்..!! மழைநீரை கூர்மையாக கிழித்து பறந்த அந்த வேல்க்கம்பு.. சரியாக சென்று குறிஞ்சியின் தோள்ப்பட்டையில் சதக்கென்று பாய்ந்தது..!!
"ஆஆஆஆஆஆ...!!!!"

குருதி பீய்ச்சியடிக்க அலறிக்கொண்டே குறிஞ்சி ஒருபக்கமாக சரிந்தாள்.. சமநிலை கிடைக்காத குதிரையும் அவளுடன் சேர்ந்து சரிந்தது..!! குதிரை சென்ற வேகத்துக்கு.. குறிஞ்சி தரையில் தூக்கி விசிறப்பட்டாள்..!! கல்லிலும் முள்ளிலும் காட்டுச்செடியிலும் கடகடவென உருண்டவள்.. கரும்பாறை ஒன்றில் சென்று நச்சென்று மோதவும்.. கண்கள் செருக சுய நினைவை இழந்தாள்..!! விரட்டி வந்தவர்கள் குதிரையின் வேகத்தை குறைத்து தரையில் குதித்தனர்..!!

அதே நேரத்தில்.. தீர்த்தபதி தனது நண்பன் முத்தழகனின் வீட்டில் இருந்தான்..!! குறிஞ்சியை விரட்டிக்கொண்டு அந்த நால்வரும் சென்றபிறகு.. தனது குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பியவன்.. நேராக நண்பன் வீட்டில்தான் வந்து நின்றான்..!!

வீட்டுக்குள்ளே.. கடும்குளிருக்கு கம்பளி போர்த்தியவாறும்.. காய்ந்துபோன தொண்டையுடன் 'லொக் லொக்' என்று இருமியவாறும்.. கட்டிலில் படுத்திருந்தாள் அந்த பெண்மணி.. முத்தழகனின் தாய்..!! தன்னை பெற்றெடுத்த தாயை சிறுவயதிலேயே இழந்திருந்த தீர்த்தபதி.. தனக்கு கடவுள் அளித்த இன்னொரு தாயாக கருதுபவள்..!!

"அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு..??" தீர்த்தபதி கேட்க,

"அப்படியேதான் இருக்கு..!!" கவலையாக பதில் சொன்னான் முத்தழகன்.

தீர்த்தபதி இப்போது நடந்து சென்று அந்த அம்மாவை நெருங்கினான்.. கட்டிலுக்கு குனிந்து அவளுடைய கையை வாஞ்சையாக பற்றிக்கொண்டான்..!! இமைகளை மெல்ல பிரித்து அவள் இவனை பார்க்க.. இவன் அவளை பாசமிகு பார்வை ஒன்று பார்த்தான்..!!

முத்தழகனின் தந்தை ஒரு சுகபோகி.. குறிஞ்சியின் அழகில் அவருக்கு ஒரு மயக்கம்..!! குடித்தது சூதாடியது போக தனது வருமானத்தின் ஒரு பெருமானத்தை.. குறிஞ்சியின் அழகை சுகிப்பதற்கென்று செலவழிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார்.. குறிஞ்சியின் குடிலிலேயே பெரும்பொழுதை கழித்தார்.. கட்டிய மனைவியை உதாசீனப்படுத்தியே வந்தார்..!!

நண்பனின் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளை மட்டுமே தீர்த்தபதியால் செய்ய முடிந்தது.. கணவனின் போக்கை கண்டு நண்பனின் அம்மாவுக்கு ஏற்பட்ட மனநோயை தீர்க்க, தீர்த்தபதிக்கு வழியேதும் தெரியவில்லை..!! 'இது மனதில் உண்டான காயம்.. மருந்துக்கு குணப்படாது..' என்று மருத்துவர் சொன்னது இன்னமும் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது..!! அம்மாவின் மனநோய் நீங்கவேண்டும் எனில்.. குறிஞ்சி இந்த ஊரில் இருக்கக்கூடாது என்பதை சிலநாட்கள் முன்புதான் நன்கு புரிந்து கொண்டிருந்தான்..!!

இப்போது.. அந்த அம்மாவின் கையை இதமாக தடவிக் கொடுத்தவாறே.. உலர்ந்து போன குரலில் சொன்னான்..!!

"உங்ககிட்ட சொன்னதை செய்து முடிச்சுட்டேன் அம்மா..!! இனிமே அவ இந்த ஊர்ல இருக்க மாட்டா.. அவளால உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.. உங்க கணவர் உங்களை விட்டு எங்கயும் போக மாட்டார்..!! உங்களுக்கு சீக்கிரமே சரி ஆகிடும் அம்மா.. கவலைப்படாதீங்க..!!"

தீர்த்தபதி அவ்வாறு சொன்னதை கேட்டதும், அந்த பெண்மணியின் கண்களில் ஒரு மின்னல் கீற்று.. உதடுகள் பிரித்து பலவீனமாக ஒரு நன்றிப்புன்னகையை உதிர்த்தாள்..!! உள்ளுக்குள் அரித்த குற்ற உணர்வை மறைத்துக்கொண்டு.. தீர்த்தபதியும் பதிலுக்கு புன்னகைத்தான்..!!

அடுத்தநாள் காலை..

காதுகளுக்கு உகாத ஓசையுடன் கதவு திறக்கப்பட.. கதிரவனின் வெளிச்சம் குறிஞ்சியின் முகத்தில் படர்ந்தது..!! இரவு முழுதும் தூங்காத அவளது விழிகள்.. அதிகாலையில்தான் சற்று அயர்ந்திருந்தன..!! அவளது நெற்றியிலிருந்தும் தோள்ப்பட்டையிலிருந்தும் வழிந்து உறைந்து போயிருந்த ரத்தத்தில் ஈக்களின் ரீங்காரம்..!! இமைகளை வெளிச்சத்துக்கு சுருக்கியவள், பிறகு கண்களை மெல்ல திறந்து பார்த்தாள்.. இரண்டு ஜோடி கால்கள் அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது..!! உடனே விருட்டென்று எழுந்து அமர்ந்தாள்.. கைகள் இரண்டையும் தன் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டாள்..!!


அவளுடைய கால்களில் ஒன்று இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்தது.. மேலாடையற்ற முதுகுப்புறத்தில் ஆங்காங்கே ரத்த விளாறுகள்.. கீழாடை கூட கிழிந்து கந்தலாகி போயிருந்தது..!! கன்னத்தில் காய்ந்துபோன கண்ணீர் தடம்.. சிவந்த உதடுகளின் ஒரு ஓரம், காயத்தில் கருத்து தடித்து போயிருந்தது..!! இரவு முழுவதும் நான்கைந்து மனித மிருகங்களால், பாலியல் ரீதியான சித்திரவதைகளை அனுபவித்து இருந்ததில்.. அவளுடைய உடலும் மனதும் சோர்ந்து போயிருந்தன..!!

"எழுந்திருடி வேசை..!!" வந்தவர்களில் ஒருவன் குறிஞ்சியின் தலைமுடியை கொத்தாகப் பற்றி மேலே தூக்க,

"ஆஆஆஆஆஆஆஆ..!!" வேதனையில் துடித்தவாறே அவள் மேலெழுந்தாள்.

அகழியில் மிக உயரமான இடம்.. உச்சிமலை எனப்படுகிற இடம்..!! வானை முட்டுவது போல நிற்கும் உச்சிமலையின் முகடு.. கடந்து செல்கிற மேகத்திரள்கள் சிறிது நேரம் தங்கியிருந்து.. தழுவி முத்தமிட்டிருந்து.. பிறகு பிரிய மனமில்லாமலேயே அந்த மலைமுகட்டை பிரிந்து செல்வன..!! உச்சிமலையின் ஒருபுறம்.. பச்சை பசேலென மரங்களுடன் கூடிய அடர்காடு..!! மறுபுறம்.. கரடுமுரடான கரும்பாறைகளுடன் கூடிய பள்ளத்தாக்கு.. உளி கொண்டு செதுக்கியது மாதிரி செங்குத்தான பள்ளத்தாக்கு.. ஆயிரத்து ஐநூறு அடிக்கும் அதிகமான அதல பாதாள வீழ்ச்சி..!! அந்தமலையின் அடிவாரத்தில் இருக்கிற சமவெளி நிலத்தில்.. அழகு வாய்ந்த குழலாறு ஓடும்..!! சமவெளியில் சலனமில்லாமல் ஓடுகிற குழலாறு.. சற்று தூரம் சென்றதும் சரேலென அருவியாய் வீழும்.. காடு மலை கடந்து போய் கபினியாற்றில் கலக்கும்..!!

ஊருக்குள்ளிருந்து உச்சிமலைக்கு செல்கிற சாலையும் சற்று கரடு முரடானததுதான்.. வீதியின் ஒருபுறம் ஆங்காங்கே குடிசைகள்.. மறுபுறம் நிலைக்குத்தான மலைச்சரிவு..!! காற்று இப்போது பலமாக வீசிக்கொண்டிருக்க.. காய்ந்த சருகுகள் வீதியில் பறந்துகொண்டிருந்தன..!! அந்த வீதியில்தான் குறிஞ்சி இழுத்து செல்லப்பட்டாள்..!! மேலாடையற்ற திறந்த மார்புகள்.. இடுப்புக்கு கீழே பெயருக்கு ஒட்டிக் கொண்டிருக்கிற கீழாடை..!! இரவு முழுதும் காலை பிணைத்திருந்த இரும்பு சங்கிலி.. இப்போது அவளது கைகளை பின்புறமாக இணைத்து பிணைத்திருந்தது..!! தளர்ந்துபோன கால்களுடன் தள்ளாடி தடுமாறி நடந்தாள்..!! வீசியடித்த காற்றுக்கு அவளுடைய கருங்கூந்தலும் கீழாடையும் தடதடத்துக் கொண்டிருந்தன..!!

வீதியின் ஒருபுறம் நின்று வேடிக்கை பார்க்கிற ஊர்மக்களை.. மூக்கு நுனியில் ஊசலாடுகிற ரத்ததுளியுடன் பார்த்தாள் குறிஞ்சி..!! இந்த ஊருக்குள் முதல்முதலாய் அடியெடுத்து வைத்த அந்த நிகழ்வு.. அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது..!! மாலைக்கழுத்தும், மஞ்சள் தாலியுமாய்.. தகரப்பெட்டியும், சுருட்டிய பாயுமாய்.. கணவனின் தோள் உரசி, கனவுகள் சுமந்த கண்களுமாய் நடந்து வந்த ஞாபகம்..!! அப்போதும் இப்படித்தான் வேடிக்கை பார்த்தனர் இந்த ஊர்மக்கள்..!!

'எத்தனை கனவுகளுடன் வந்தேன் இந்த ஊருக்கு..?? எத்தனை எதிர்பார்ப்புகள் என்னெஞ்சில் அப்போது..?? இனி நான் வாழப்போகிற ஊர் என்று ஆசையாசையாய் பார்த்தேனே..?? இனி நான் பேசப்போகிற மக்கள் என்று பெருமையாய் உங்களை நினைத்தேனே..?? இதற்குத்தானா.. இந்தநிலையை எனக்கு தரத்தானா இத்தனை நாளாய் காத்திருந்தீர்கள்..??' - குறிஞ்சியின் மனதில் அடக்கமுடியாத ஒரு ஆதங்கம்..!!

அந்த ஊரில் யாருக்கும் ஆரம்பத்தில் இருந்தே அவளிடம் ஒட்டுதல் இல்லை.. அவளுடைய அழகுதான் அதற்கு முழுமுதற்காரணம்.. கொள்ளை கொள்ளும் அவளது அழகு மற்றவர்களிடம் இருந்து அவளை தனியாக பிரித்தே வைத்திருந்தது..!! பெண்களுக்கோ அவளிடம் ஒருவித பொறாமை உணர்வு.. அவளை நெருங்கவே தயங்கினார்கள்..!! ஆண்களுக்கோ அவளைக்கண்டால் வேறு மாதிரியான உணர்வு.. அவர்களது வக்கிர பேச்சுக்களை வெளிப்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பாக அவள் அமைந்து போனாள்..!!

குறிஞ்சியின் கணவனுக்கு பிறந்த நாட்டின் மீதிருந்த பற்று கட்டிய மனைவியிடம் இல்லை..!! திருமணமான இரண்டாம் வருடமே, ஆங்கிலேயர்களை அடித்து விரட்டப் போகிறேன் என்று.. தீவிரவாத குழுவை சேர்ந்த இருவருடன் கிளம்பி சென்றவன்தான்..!! ஆறு வருடங்கள் ஆயிற்று.. அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பதற்கே இன்னும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை..!!

அவன் விட்டுச்சென்ற செல்வம் எட்டு நாள் செலவுக்கு கூட போதவில்லை..!! பணம் சம்பாதிக்க பசுமாடு வங்கி பால் கறந்து விற்றுப் பார்த்தாள்.. பலனேதும் இல்லை..!! ஊரை பீடித்த நோய் மாட்டையும் பீடித்து மரணிக்க செய்தது..!! தனிமை.. வறுமை.. பசி.. அச்சுறுத்தல்.. உயிர்ப்பயம்..!! உயிருக்கு பயந்துதான் முதலில் தன் கற்பை தொலைத்தாள்.. பிறகு மெல்ல மெல்ல தனது உடலழகை காசாக்க கற்றுக்கொண்டாள்..!!

"என்னோட தயவு இல்லாம.. இந்த ஊர்ல மட்டும் இல்ல.. எந்த ஊர்லயும் நீ வாழ முடியாது..!!"

பயந்து நடுங்கிய குறிஞ்சியை படுக்கையில் வீழ்த்தி கசக்கியெறிந்து.. முதன்முதலாய் அவளது கற்பை சூறையாடியது இதே புவனகிரிதான்..!! உடலை விற்று அவள் பிழைப்பு நடத்தக்கூடிய சூழ்நிலைக்கு முதலில் வித்திட்டவர் அவர்தான்..!!

பயந்து பயந்து அவரிடம் படுத்து படுத்து.. உடல் மரத்துப் போனது அவளுக்கு.. வெட்கம் இற்றுப் போனது..!! பயத்தின் காரணமாக இழந்த உடலை.. பசியை தாளாமல் மற்றவர்களுக்கு விற்கவும் துணிந்தாள்..!! ஆரம்பித்து வைத்தது புவனகிரி என்றால்.. அவளை முழுவதுமாக இந்த வாழ்க்கைக்கு தள்ளியது.. இதோ.. வேடிக்கை பார்க்கிற இதே ஊர்தான்..!!

வேடிக்கை பார்த்த கூட்டம்.. குறிஞ்சி முன்னால் நகர நகர.. அவளுக்கு பின்னால் சேர்ந்து கொண்டது.. ஊர்வலம் செல்வது மாதிரி..!! செல்கிற வழியில்.. அவளை கல்லால் அடித்தனர் சிலர்.. காறி உமிழ்ந்தனர் சிலர்..!! ஒருசில மூடர்கள் அவளை சூழ்ந்துகொண்டு தாக்கினர்.. பெண்களும் அந்த மூடர் கூட்டத்தில் அடக்கம்..!!

"செத்து ஒழிடி முண்டை.. செத்து ஒழி..!!" - விளக்குமாற்றால் அடித்தாள் ஒரு பெண்.

"சீவி சிங்காரிச்சு இந்த ஊரை மயக்குனது போதுமடி..!!" - குறிஞ்சியின் கூந்தலை அறுத்தான் ஒரு ஆண்.

"இந்த ஊரை பிடிச்சிருந்த பீடை இன்னைக்கோட போகட்டும்..!!" - சாணத்தை கரைத்து குறிஞ்சியின் தலையில் ஊற்றினாள் ஒரு அறிவிழந்தவள்.

"உடம்பை வித்து பொழப்பு நடத்துற வேசை..!!" - சாட்டையை அவளுடைய மார்புகளில் சுழற்றினான் ஒரு இரக்கமில்லாதவன்.

வலி தாளாமல் கத்துவதற்கு கூட குறிஞ்சியின் தொண்டையில் திராணி இல்லை.. வேதனையை பிரித்துக் காட்டுகிற திறனை கூட அவளுடைய உடல் இழந்து போயிருக்க.. உணர்வுகள் செத்திருந்தன..!! அடியும், உதையும், அருவருப்பான சொற்களும், அவமான வழி நடத்தலுமாய்.. உச்சிமலைக்கு இழுத்து வரப்பட்டாள் குறிஞ்சி..!!

உச்சிமலையில் ஊரின் மீதி ஜனம் குழுமியிருந்தது.. நடுநாயகமாக நின்றிருந்தார் புவனகிரி..!! சன்னதக்காரர் தனது நடிப்பை இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார்.. 'அவளை காவு குடுங்கடா.. அவளை எனக்கு காவு குடுங்க..' என்று நாக்கை துருத்தி கத்திக் கொண்டிருந்தார்..!! மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெரிய எண்ணெய்க்கலம் மையமாக வைக்கப்பட்டிருந்தது.. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி.. தங்களது ஈவான மூன்று ஆழாக்கு எண்ணெயை.. வரிசையாக வந்து அந்த எண்ணெய்க்கலத்தில் ஊற்றிக் கொண்டிருந்தனர்..!!

ஊருக்குள் இருந்ததை விட உச்சிமலையில் காற்றின் வேகம் இன்னுமே அதிகமாக இருந்தது.. சடசடவென காற்றின் சப்தமே பெரிதாக கேட்டது..!! நடக்கவிருக்கிற கொடுஞ்செயலை புரிந்துகொண்டாற்போல.. காட்டு மரங்கள் வெட்கி தலைகுனிந்து கொண்டன.. காகங்களும் குருவிகளும் சிறகடித்து வேறூருக்கு பறந்தன.. மலையடிவாரத்து குழலாறு ஓடமனமில்லாமல் உறைந்து போயிருந்தது..!!

இழுத்து வந்து நிறுத்தப்பட்ட குறிஞ்சி தன் தலையை மெல்ல உயர்த்தினாள்.. களைப்பு மிகுந்த கண்களை சுழற்றி, சுற்றியிருந்த கூட்டத்தை ஒருமுறை பார்த்தாள்..!! இதில் எத்தனை பேர் தன்னுடன் படுக்கையில் புரண்டிருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பது போல இருந்தது அவளது பார்வை..!! 'வேசி வேசியென்று என்னை தூற்றுகிறார்களே.. அந்த வேசித்தொழில் செய்ய என்னை தூண்டியவர்கள் இதில் எத்தனை பேர்..??' என்பது மாதிரி இருந்தது அந்த பார்வை..!! கண்களால் நடத்திய கணக்கெடுப்பின் பலனாக கணிசமான ஒரு தொகை கிடைத்தது.. சாமியருள் வந்துவிட்டதாய் பாசாங்கு புரிகிற சன்னதக்காரரும் அதில் அடக்கம்..!!

விழிகளில் வன்மமும், இதழ்களில் எள்ளலுமாய்.. குறிஞ்சியின் முன்பாக வந்து நின்றார் புவனகிரி..!!

"பேராசைக்கு என்ன கூலின்னு இப்போவாவது உனக்கு புரிஞ்சதா..??" அவர் சொல்லி முடிக்கும் முன்பே,

"த்த்தூதூ..!!!" அவருடைய முகத்தில் காறி உமிழ்ந்தாள் குறிஞ்சி.

அவ்வாறு காறி உமிழ்ந்த அடுத்த நொடியே.. அவளுடைய பின்னந்தலையில் சத்தென்று உருட்டுக்கட்டையால் ஒரு அடி விழுந்தது.. தரையில் பொத்தென்று சுருண்டு விழுந்தாள் குறிஞ்சி..!! விழுந்தவளின் உச்சிமயிரைப் பற்றி, கரடுமுரடான பாறையில் தரதரவென இழுத்து சென்றான் ஒரு அடியாள்..!! முகத்தில் வழிந்த உமிழ்நீரை துடைத்த புவனகிரியின் கண்களில்.. அவமான உணர்வென்பது துளியும் இல்லை.. அத்தனை திருப்தியான ஒரு பார்வை பார்த்தார்..!!

இழுத்து செல்லப்பட்ட குறிஞ்சியை இரண்டு பேர் உயர்த்தி நிறுத்தினர்.. ஒற்றையாய் நின்றிருந்த கல்த்தூணில் கயிறு கொண்டு அவளை கட்டினர்..!! புவனகிரி கண்ஜாடை காட்டியதும்.. மரக்கலத்தை எடுத்து அதிலிருந்த எண்ணெய்யை குறிஞ்சியின் தலையில் கொட்டி கவிழ்த்தனர்..!! அவர் கை நீட்டியதும்.. நெருப்புப்பந்தம் ஒன்று அந்தக்கையில் திணிக்கப்பட்டது..!! ஊர் மக்கள் எல்லாவற்றையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்..!!

"இந்தப்பாவம் உங்களை எல்லாம் சும்மா விடாது..!!" - ஆவேசமாக கர்ஜித்தாள் குறிஞ்சி.

அடுத்தநொடியே.. கையிலிருந்த பந்தத்தை புவனகிரி தூக்கியெறிய.. குறிஞ்சியின் உடலில் குப்பென்று தீப்பற்றிக் கொண்டது..!! உயிருடன் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தாள் குறிஞ்சி.. உடனடியாய் சதைகள் பொசுங்கிப்போக, உள்ளடங்கிய ரத்தநாளங்கள் வெடித்து சிதறின..!!

"ஆஆஆஆஆஆஆஆஆ..!!" ஆவிகொதிக்க அலறி துடித்தாள் குறிஞ்சி.

மலையுச்சியில் சூறைக்காற்று இப்போது திடீரென சுழற்றி அடித்தது.. நிலையாக நிற்கக்கூட முடியாமல் அனைவரும் தடுமாறினார்.. கையை முகத்துக்கு முன்னர் கொண்டு வந்து காற்றை மறைத்தனர்..!!

"ஆஆஆஆஆஆஆஆஆ..!!"

அலறிக்கொண்டே குறிஞ்சி உடலை முறுக்கி திமிறினாள்.. கட்டி வைத்திருந்த கயிறு இப்போது இற்றுப்போய் அற்றுக்கொண்டது..!! அக்னிஜுவாலை பற்றி எரிய.. அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினாள் குறிஞ்சி..!! ஊர்மக்கள் மிரண்டு போய் அந்த கோரக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே.. திகுதிகுவென தீப்பற்றிய தேகத்துடன் மலையுச்சியில் இருந்து கீழே பாய்ந்தாள்..!!

அடித்த சுழல்காற்றுக்கு.. அவள் நேற்று அணிந்திருந்த சிவப்பு நிற அங்கி.. எங்கிருந்தோ இப்போது பறந்து வந்தது..!! பள்ளத்தாக்கில் அவள் பாய்ந்த திசையிலேயே.. அந்த அங்கியும் வீழ்ந்து அவளுடன் பயணித்தது..!!

ஆயிரத்து ஐநூறு அடி உயரமான சரிவில்.. அங்கமெங்கும் எரிகிற நெருப்புடன்.. ஆங்காங்கே பாறைகளில் முட்டி மோதியவாறு.. குறிஞ்சி கீழே சென்று கொண்டேயிருந்தாள்..!! இறுதியாக சமதளத்தை அடைந்து.. குழலாற்றின் தெளிந்த நீரை கிழித்துக்கொண்டு தொப்பென்று விழுந்தாள்.. அந்த ஆறும் அதற்காகத்தான் காத்திருந்தமாதிரி அவளை தனக்குள் வாங்கி புதைத்துக்கொண்டது..!! பறந்து சென்ற சிவப்பு அங்கியும்.. அவள் விழுந்த இடத்திலேயே சென்று விழ.. ஆற்றுச்சுழல் அதனை உள்ளிழுத்துக் கொண்டது..!!

அத்தியாயம் 2

ஆண்டு: கி.பி 2013 (ரொம்ப யோசிக்காதிங்க.. இந்த வருஷம்தான்..!!)
இடம்: கங்கோத்ரி லேயவுட், மைசூர் மாநகரம்

"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே.. உத்திஷ்ட நரஸார் தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்..!!"

காலைத்தென்றலுடன் கலந்து வந்த சுப்ரபாதம் காதுகளை வருட.. கண்ணிமைகள் மெல்ல அசைவுற்றன ஆதிராவுக்கு..!! அதிகாலை தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைய ஆரம்பிக்க.. விழிகளை மெதுவாக திறந்து பார்த்தாள்..!! சுற்றி ஒரு பார்வை பார்த்து சூழ்நிலை உணர முயன்றாள்..!! அவளது படுக்கையறை.. அருகில் படுத்திருக்கிற அவளது கணவன் சிபி, இப்போது பார்வைக்கு வந்தான்..!! வாயை 'ஓ'வென்று திறந்து வைத்துக்கொண்டு.. களைத்துப்போன குழந்தை மாதிரி தூங்கிக் கொண்டிருந்தான்..!! அகத்திலிருப்பவனை அந்தக்கோலத்தில் கண்டதும்.. ஆதிராவின் அதரங்களில் ஒரு மெலிதான புன்னகை..!!

கருவிழிகளை சற்று தாழ்த்தி பார்த்தபோதுதான்.. நிர்வாணமாக படுத்திருக்கிறோம் என்ற நினைப்பே அவளுக்கு வந்தது..!! அதிகாலை நான்கு மணி வாக்கில் மூன்றாவது முறையாக ஆடைகளைய நேர்ந்ததும்.. ஆட்டக்களைப்பில் திரும்ப அணிந்துகொள்ளாமல் அப்படியே உறங்கிவிட்டதும் ஞாபகம் வந்தது.. உடனடியாய் அவளுடைய முகத்தில் ஒரு வெட்கச்சிவப்பு..!! கீழுதட்டை மடித்து பற்களால் கடித்தவாறே.. அவளுடைய மார்புகள் இரண்டையும் அழுத்தியவாறு படர்ந்திருந்த சிபியின் கையை.. அவனுடைய உறக்கம் கலைந்துவிடாமல் மென்மையாக தன்னிடமிருந்து விலக்கினாள்.. மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள்..!!

உடல் மிகவும் களைத்துப் போயிருந்ததை உடனடியாய் அவளால் உணர முடிந்தது..!! அவளுடைய அந்தரங்க பாகங்களில் எல்லாம் ஒரு புதுவித உணர்வு.. வலிக்கவும் செய்தது.. சுகமாகவும் இருந்தது..!! ஆண்மகன் தருகிற இன்பமது எப்படி இருக்கும் என்பதை, நேற்றிரவுதான் முதன்முறையாக அறிந்திருந்தாள்.. அந்த இன்பம் விழைவிக்கிற அதிகாலை விளைவு எப்படி இருக்கும் என்பதை, இப்போது உணருகிறாள்..!!

நேற்றிரவு தலையில் சூடிய மல்லிகைச் சரத்தில்.. இப்போது கணிசமான அளவு மெத்தையில் உதிர்ந்து கசங்கி போயிருக்க.. நார் மட்டுமே கூந்தலோடு பிரதானமாக பிண்ணியிருந்தது..!! ஆதிரா அதை தனியாக பிரித்தெடுத்தாள்.. கையில் வைத்து பந்தாக சுருட்டி, சற்று தூரத்தில் இருந்த குப்பைக் கூடையில், இங்கிருந்தே குறி பார்த்து எறிந்தாள்..!! காலுக்கடியில் கிடந்த பெட்டிக்கோட்டை இழுத்து இடுப்பை சுற்றி முடிச்சிட்டாள்.. கட்டிலின் ஓரமாக கிடந்த ப்ராவை எட்டி கையில் எடுத்தாள்..!! கணவன் தூங்குகிற அழகை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தவாறே.. தனது கலசங்களை மூடி அந்த ப்ராவை அணிந்துகொண்டாள்..!!

சிபி இப்போது புரண்டு படுத்தான்.. கழுத்துவரை அவன் போர்த்தியிருந்த போர்வை மெல்ல விலகிக்கொண்டது..!! கணவனின் முழு உருவத்தையும் இப்போது காண நேர்ந்த ஆதிராவுக்கு.. உடனே மனதில் ஒரு திடீர் குறுகுறுப்பு..!!

'இவன் எப்போது உடை அணிந்து கொண்டான்..?? எனக்கு நினைவிருக்கிறவரை எதுவும் அணியாமல்தானே இருந்தான்..?? இடையில் எழுந்திருப்பானோ..?? ஐயையோ..!! அப்படியானால்.. அவன் எழுந்தபோது நான் இதே கோலத்திலா கிடந்தேன்..?? வெளிச்சத்தில் பார்க்க நேற்றிரவு அவன் ஆசையுற்றபோது முடியாது என்று மறுத்தேனே..?? நான் உறங்குகையில் எழுந்து தன் ஆசையை தீர்த்துக்கொண்டிருப்பானோ..?? ஒட்டுத் துணியில்லாமல் நான்.. ஆஆஹ்ஹ்ஹ்க்.. என்ன நினைத்திருப்பான்..?? ச்ச.. ஷேம் ஷேம்..!!" சிலநொடிகள் அவ்வாறு ஒருவித அவஸ்தை உணர்வுக்கு ஆளான ஆதிரா, பிறகு..

'என்னாயிற்று இப்போது..?? ஏன் இப்படி பதறுகிறாய்..?? பார்த்தால் பார்த்துவிட்டு போகிறான்..?? உன் காதல் கணவன்தானே..?? உன் அழகு மொத்தத்தையும் ஆளுகிற உரிமையுள்ளவன்தானே..?? பார்த்தால் பார்த்துவிட்டு போகிறான்..!!' என்றொரு சிந்தனை தோன்றவும், சற்று சமாதானமானாள். அதற்குள்ளாகவே,

'வெட்கமில்லாதவள் என்று ஒருவேளை நினைத்திருப்பானோ..??' என்று ஒருமனது கிடந்து பரபரத்தது. உடனே,

'நேற்றிரவு உன்னுடன் கூடும்போதே அது அவனுக்கு புரிந்திருக்கும்..!!'

என்று இன்னொரு மனது கேலியாக பதில் சொல்லவும், 'களுக்' என்று உடனடியாய் எழுந்த ஒரு சிரிப்பை ஆதிராவால் அடக்க முடியவில்லை.. வாயை பொத்திக்கொண்டு சப்தமில்லாமல் சிரித்தாள்..!!

பிறகு.. ப்ளவுசை மட்டும் தேடிப்பிடித்து அணிந்துகொண்டவள்.. அப்படியே எழுந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தாள்..!! குளித்து முடித்து வெளியே வந்து வேறு உடை அணிந்து கொண்டாள்.. டவல் சுற்றிய கூந்தலுடன் கதவை திறந்து ஹாலுக்குள் பிரவேசித்தாள்..!!

"ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்.. ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே..!!"

சுப்ரபாதம் முடிந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் இப்போது வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.. குமிழ் ஒன்றை திருகி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரல்பருமனை சற்று குறைத்தாள்..!! பூஜையறைக்குள் நுழைந்து.. கைகள் கூப்பி.. கண்கள் மூடி.. கால்கள் மடக்கி அமர்ந்துகொண்டாள்..!!

'பெருமாளே..!! இப்போ.. இந்த நிமிஷத்துல.. என் மனசுல இருக்குற நிம்மதியும் சந்தோஷமும்.. எப்போவும் எனக்கு வேணும்னு ஏக்கமா இருக்கு.. அதுக்கு நீதாம்ப்பா அருள் புரியணும்..!! மனசுல இருக்குற குழப்பங்களை தீர்த்து வை.. மஞ்சளும் குங்குமமும் எனக்கு நிலைக்க வை..!!' - என்கிற ரீதியில் மனமுருக வேண்டிக் கொண்டாள்.

ஐந்து நிமிடங்கள் கழித்து பூஜையறையை விட்டு உற்சாகமாக வெளியே வந்தாள்..!! சுவற்றில் மாட்டியிருந்த அந்த பெரிய சைஸ் புகைப்படம் கண்ணில் படவும்.. கால்கள் தயங்கியவளாய் சற்று நின்றாள்.. முகத்தில் சலனமில்லாமல் அந்த புகைப்படத்தையே சில வினாடிகள் பார்த்தாள்..!!

ஆதிராவும் அவளுடைய தங்கை தாமிராவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்..!! இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு.. கள்ளம் கபடம் இல்லாத ஒரு வெள்ளைப் புன்னகையை.. காமிராவை பார்த்து சிந்திக் கொண்டிருந்தனர்..!! அழகு கொஞ்சும் தங்கையின் முகத்தையே அன்பொழுக பார்த்த ஆதிரா.. கண்களை படக்கென மூடி கடவுளை மீண்டும் நினைத்துக் கொண்டாள்.. உதடுகள் முனுமுனுக்க கடவுளிடம் ஏதோ பிரார்த்தனை செய்து கொண்டாள்..!!

கண்திறந்தவள் நீளமாய் ஒரு பெருமூச்சை உதிர்த்தாள்.. ஹாலின் இன்னொரு மூலையில் இருக்கிற சமையலறைக்கு நடந்தாள்..!! சமையலறைக்குள் நுழைய.. ஆதிராவின் அம்மா பூவள்ளி பார்வைக்கு கிடைத்தாள்.. பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்..!! அம்மா ஏறிட்டு பார்க்கவும், ஆதிரா அழகாக ஒரு புன்னகையை சிந்தினாள்..!!

"என்னம்மா பண்ணிட்டு இருக்குற..??"

"பாத்தா தெரியல.. பாத்திரம் கழுவிட்டு இருக்குறேன்..!! காபி போடலாம்னு நெனச்சேன்..!!"

"சரி.. எங்கிட்ட விடு.. நான் பாத்துக்குறேன்..!!"

"இல்ல ஆதிரா.. பரவா.."

"ப்ச்.. சொல்றேன்ல.. நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு.. போய் ரெஸ்ட் எடு.. நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்..!!"

சொன்ன ஆதிரா அம்மாவின் கையில் இருந்த பால் பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டாள்.. குழாய் நீரை கொஞ்சமாய் திறந்து விட்டுக் கொண்டாள்.. ப்ரஷ் கொண்டு பாத்திரத்தை தேய்த்து சோப்பு நுரையை பொங்க வைத்தாள்..!! பூவள்ளி அதன்பிறகும் நகர மனமில்லாமல் அங்கேயே நின்றிருந்தாள்.. அப்புறம் காய்கறி தட்டில் கிடந்த தேங்காயை அவள் கையில் எடுக்க.. ஆதிரா அதட்டினாள்..!!

"அதை எதுக்கு எடுக்குற..??"

"இல்லடி.. நீ காபி போடுற நேரத்துல.. சட்னி ரெடி பண்ணலாம்னு..!!"

"ப்ச்.. சொன்னா உனக்கு புரியாதா.. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ போய் ஹால்ல உக்காரு போ..!!"

ஆதிராவின் குரலில் ஒருவித எரிச்சல் தொனித்தாலும்.. அதையும் தாண்டி அவள் முகத்தில் வெளிப்பட்ட ஒரு உற்சாகம்தான் பூவள்ளியின் கவனத்தை கவர்ந்தது..!! தேங்காயை தட்டில் வைத்துவிட்டு.. மகளின் முகத்தையே சிறிது நேரம் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

'எத்தனை நாளாயிற்று.. இவளிடம் இந்த உற்சாகத்தை பார்த்து..?? தாமிரா போனதில் இருந்தே.. இந்த குடும்பத்தில் நிம்மதி என்பது இல்லாமல் இருந்தது.. இவளுடைய முகத்திலும் சந்தோஷம் என்பது செத்துப் போயிருந்தது..!! மோசமான அந்த சூழ்நிலையில் இருந்து.. கொஞ்சம் கொஞ்சமாய் இந்த குடும்பம் சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிற வேளையில்.. இவளுடைய இந்த புது உற்சாகத்தை பார்ப்பதற்குத்தான் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது..??' பூவள்ளி அவ்வாறு அகத்துக்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே,

"என்னம்மா.. என்னமோ என்னை புதுசா பாக்குற மாதிரி.. அப்படி பாக்குற..??" ஆதிரா புன்னகையுடன் கேட்டாள்.

"ம்ம்.. புதுசாத்தான்மா பாக்குறேன்..!!"

"எ..என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!"

குழப்பமாக கேட்ட ஆதிராவுக்கு அவளுடைய அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை..!! மகளை நெருங்கி.. அவளுடைய மதிமுகத்தை இரு கைகளாலும் தாங்கி தடவி.. பிறகு அந்த கைகளை தனது உதட்டில் ஒற்றி முத்தமிட்டாள்..!!

"இன்னைக்கு மாதிரியே என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்டி என் தங்கம்..!!"

அம்மா அன்பை பொழிந்ததில் ஆதிரா சற்று நெகிழ்ந்துதான் போனாள்.. நாணத்துடன் கூடிய ஒரு புன்னகையை உதடுகளில் கசியவிட்டாள்..!!

"இ..இருப்பேன்மா.. இப்படியே சந்தோஷமா இருப்பேன்.. போதுமா..??"

"அது போதும்டி..!!"

"ம்ம்ம்ம்ம்.. நீ ஹாலுக்கு போ.. நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்..!!"

பூவள்ளி சமையலறையை விட்டு அகலவும்.. ஆதிராவை ஒரு சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டது..!! படபடவென பாத்திரம் கழுவி முடித்தவள்.. பத்தே நிமிடங்களில் காபியும் தயார் செய்துவிட்டாள்..!! ஹாலுக்கு சென்று.. தட்டில் இருந்த மூன்று தம்ளர்களில் ஒன்றை அம்மாவிடம் நீட்டியவாறே..

"அப்பா எங்கம்மா போயிட்டாரு..??" என்று கேட்டாள்.

"ம்க்கும்.. எங்க போயிருப்பாரு..?? வீட்டுக்கு பின்னால இருக்குற தோட்டத்துல நிப்பாரு..!! காலங்காத்தாலேயே தோட்டத்துல இருக்குற செடியையெல்லாம் கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்கலைன்னா.. உங்க அப்பாவுக்கு காலைச்சாப்பாடே எறங்காது..!!" பூவள்ளி அவ்வாறு கேலியாக சொல்லவும், ஆதிரா சிரித்துவிட்டாள்.

"ஹஹா.. சரி சரி.. அவருக்கு காபி வச்சுட்டு போறேன்.. வந்ததும் குடிக்க சொல்லு..!!"

இரண்டாவது தம்ளரை டீப்பாயில் வைத்துவிட்டு.. ஆதிரா உள்ளறைக்கு திரும்பினாள்..!! நடந்து சென்று தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.. கதவை சாத்திவிட்டு.. காபியை டேபிளில் வைத்துவிட்டு.. கட்டிலில் மெல்ல அமர்ந்து.. கணவனை துயில் எழுப்பலானாள்..!!


"அத்தான்.. எழுந்திரிங்க.. டைமாச்சு..!!"

அவ்வளவுதான்..!! எல்லா படங்களில், எல்லா கதைகளிலும் வருகிற எல்லா ஹீரோக்களையும் போலவே.. விருட்டென்று எழுந்த சிபி, ஆதிராவை இழுத்து தன் மார்போடு போட்டு, இறுக்கி அணைத்துக்கொண்டான்..!!

"ஐயோ.. என்னத்தான் இது.. விடுங்க..!!" எல்லா ஹீரோயின்களையும் போலவே, ஆதிராவும் சிபியின் சில்மிஷம் பிடிக்காத மாதிரி சிணுங்கினாள் .

"அதுக்குள்ள குளிச்சாச்சா..?? நல்லா வாசமா இருக்குற..??" அவளுடைய சிணுங்கலை மதியாமல், ஆதிராவின் கூந்தல் நுகர்ந்தான் சிபி.

"ஆமாம்..!! ம்ம்ம்ம்ம்ம்... விடுங்கத்தான்.. நான் போகணும்..!!"

"எங்க போற..??"

"டிபன் ரெடி பண்ணனும்..!!"

"அதுலாம் அத்தை பாத்துப்பாங்க.. விடு..!! நீ கொஞ்ச நேரம் இருந்துட்டு போ..!!"

"ஹையோ.. வேலை பாக்குறேன்னு சொன்னவங்களையும் நான்தான் வேணாம்னு வெரட்டிட்டு வந்திருக்கேன்.. வேறவழியில்ல.. நான்தான் போய் இப்போ ரெடி பண்ணனும்..!!"

ஆதிரா அவ்வாறு சொன்னதும், இப்போது சிபி அவளை பிடித்திருந்த பிடியை சற்றே நெகிழ்த்தினான்.. மனைவியின் முகத்தை ஏறிட்டு பார்த்தான்.. சற்றே கிண்டலான குரலில் கேட்டான்..!!

"ம்ம்.. அறிவுகெட்ட ஆதிரா அப்படி ஏன் பண்ணினாளாம்..??"

"ஹ்ம்ம்..?? வெக்கங்கெட்ட நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு எனக்கு எப்படி தெரியுமாம்..??"

"ஹாஹாஹா..!! ம்ம்.. அப்போ.. நான் இப்படி பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா.. எல்லா வேலையும் அத்தை தலைல கட்டிட்டு வந்திருப்பியா..??" மனைவியின் குறும்புக்கு சிரித்த சிபி, விடாமல் கேலியாக கேட்டான்.

"ஹ்ஹ.. அப்படிலாம் நான் சொல்லவே இல்லையே..??" ஆதிராவோ நாக்கு துருத்தி அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

"ஹாஹாஹாஹா..!!"

முன்பை விட பலமாக சிரித்த சிபி, இப்போது ஆதிராவின் இடுப்பை விடுவித்தான்.. ஒரு கையால் காபி எடுத்து உறிஞ்சியவாறே, இன்னொரு கையை ஆதிராவின் தோள் மீது போட்டு.. அவளை தன்னோடு இதமாக அணைத்துக் கொண்டான்..!! ஆதிராவோ அந்த அணைப்புக்கு நெளிந்தவளாய்,

"சீக்கிரம் குளிச்சுட்டு வாங்கத்தான்.. நான் போய் டிபன் ரெடி பண்றேன்..!!" என்றவாறு எழ எத்தனித்தாள்

"ஹேய்ய்ய்.. இருடா.. என்ன அவசரம்..??" சிபி அவளுடைய கையை பற்றி கட்டிலில் அமரவைத்தான்.

"எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல.. உங்களுக்குத்தான் டைம் ஆச்சு..??"

"எனக்கு என்ன டைம் ஆச்சு..??"

"ப்ச்.. பத்து மணிக்கு ஃப்ளைட்.. கெளம்ப வேணாமா..??"

ஆதிரா அவ்வாறு கேட்கவும் சிபி இப்போது பட்டென அமைதியானான்.. நீளமாக ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவன், தலையை மெல்ல தொங்கப் போட்டுக் கொண்டான்..!!

சிபி ஒரு ப்ரஃபஷனல் ஃபோட்டோக்ராஃபர்.. பெங்களூரில் தலைமையகத்துடன் இயங்கும் உதயவாணி என்கிற கன்னட நாளிதழின் மைசூர் கிளையில் பணி புரிகிறான்..!! அலுவல் நிமித்தமாக இன்று அவன் டெல்லி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.. அந்த பயணத்திற்கான ஃப்ளைட் பற்றிதான் ஆதிரா இப்போது சொன்னது..!!

சிபி இப்போது தலையை கொஞ்சமாய் நிமிர்த்தி.. மனைவியின் முகத்தை ஏறிட்டு.. ஏக்கமான குரலில் கேட்டான்..!!

"கெளம்பனுமா ஆதிரா..??"

"என்ன கேள்வி இது..?? ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணியாச்சு.. டெல்லில நீங்க தங்குறதுக்கு ஹோட்டல் ரிசர்வ் பண்ணியாச்சு.. ஒரு வாரத்துக்கு தேவையான ட்ரெஸ்லாம் அயர்ன் பண்ணி வச்சாச்சு..!! இப்போ வந்து இப்படி கேட்டா என்ன அர்த்தம்..??"

"ம்ம்..?? எனக்கு போகப் பிடிக்கலன்னு அர்த்தம்..!!"

"ஏன் போக பிடிக்கல..??"

"ஏன்னு உனக்கு தெரியாதா..??"

சிபி குறும்பாக கேட்டுவிட்டு, மனைவியின் கண்களையே குறுகுறுவென பார்த்தான்.. அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டதும், பட்டென ஒரு வெட்கச் சிவப்புக்கு உள்ளானது ஆதிராவின் முகம்..!! நாணத்தால் அவளையும் அறியாமல் தலைதாழ்த்திக் கொண்டவள்.. அந்த அர்த்தம் புரியாத பாசாங்குடனே சொன்னாள்..!!

"இ..இல்ல.. எனக்கு தெரியல.. நீங்க சொல்லுங்க..!!"

"ஹ்ம்ம்ம்ம்..!! இதே நேத்து கெளம்புற மாதிரி இருந்திருந்தா.. எந்த தயக்கமும் இல்லாம கெளம்பிருப்பேன் ஆதிரா..!!"

"ஏன்.. இன்னைக்கு என்னாச்சு..??"

"ருசி தெரிஞ்சு போச்சே.. என் பொண்டாட்டி எப்படி இருப்பான்ற ருசி..!! ஒருநாள் பாலை குடிச்சு பழகின பூனை.. அடுப்பங்கரையையே சுத்தி சுத்தி வருமே.. அந்த மாதிரி ஒரு மைண்ட்செட்லதான் நான் இப்போ இருக்கேன்..!!" சிபி சொல்ல சொல்ல, ஆதிரா மேலும் மேலும் வெட்கமுற்றாள்.

"ஓஹோ..??"

"யெஸ்..!! கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆகியும்.. இத்தனை நாளா இதை விட்டு வச்சுட்டோமேன்னு இப்போ ஃபீல் பண்றேன்..!!"

"ஹாஹா.. உங்களை யாரு விட்டு வைக்க சொன்னதாம்..??"

"என்ன பண்றது.. எனக்கு அப்போ அப்படி தோணுச்சு..!!"

"எப்படி..??"

"கல்யாணம் முடிஞ்சதுமே இதெல்லாம் பண்ணனுமா.. கொஞ்சநாள் போகட்டுமேன்னு..!! எல்லாம் ஒரு கூச்சந்தான்..!!"

"ம்ம்.. நேத்து எங்க போச்சாம்.. அந்த கூ..ச்சம்..??"

"ஹாஹா.. அது உன்னாலதான்..!!"

"என்னாலயா..?? நான் என்ன பண்ணுனேன்..??"

"நீதான நேத்து.. தலைல மல்லிகைப்பூ.. ஃபுல் மேக்கப்பு.. ட்ரான்ஸ்பரன்ட் ஸாரிலாம் கட்டிக்கிட்டு.. அப்டியே செக்ஸியா.. செக்ஸுக்கு இன்வைட் பண்ற மாதிரி உள்ள வந்த..?? எல்லாம் உன்னாலதான்..!!"

"ஆஹா.. நல்லாருக்கே கதை..!!! பண்றதெல்லாம் நீங்க பண்ணிட்டு.. பழியை என் மேல போடுறீங்களா..??"

"பழியெல்லாம் போடல.. அதுதான் உண்மை..!!"

"ஓஹோ.. அப்படியா சேதி..?? சரி.. இருக்கட்டும் இருக்கட்டும்..!! போறப்போ உங்களுக்கு ஏதாவது தரலாம்னு நெனச்சேன்.. இப்போ ஒன்னும் கெடையாது..!! கெளம்புங்க கெளம்புங்க.. ஃப்ளைட்டுக்கு டைமாச்சு.. அண்ணா ஹசாரே உங்களுக்காக டெல்லில வெயிட்டிங்..!!"

"ஐயோ.. அதை சொல்லாதேயேன்.. ப்ளீஸ்...!!"

"சொல்லுவேன் சொல்லுவேன்..!! இன்னும் ரெண்டு மணி நேரத்துல உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் போறாரு..!! நீங்க போயி.. ஃபோட்டோலாம் புடிச்சி.. அங்கேயே தங்கி இருந்து.. உங்க கவர் ஸ்டோரி ரெடி பண்ணிட்டு வாங்க.. போங்க போங்க..!!"

"ம்க்கும்.. கவர் ஸ்டோரியா அது..?? என் கண்ணீர் ஸ்டோரி..!! எனக்கு போறதுக்கே பிடிக்கல ஆதிரா..!! ஆபீஸ்ல ஏதாவது சாக்குபோக்கு சொல்லிட்டு இங்கயே இருந்திடுறேனே..?? நேத்து மாதிரியே கட்டிப் புடிச்சு படுத்துக்கலாம்.. என்ன சொல்ற.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..??"

"ஐயோ.. என்ன இது சின்னப்புள்ள மாதிரி..?? அதுலாம் முடியாது.. கெளம்புங்க சீக்கிரம்.. அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை முடிக்கிற வரை.. நீங்களும் கொஞ்சம் பட்டினி கெடங்க..!!"

"ப்ச்.. அவர் ரொம்ப புடிவாதம் புடிச்ச ஆளாச்சே..?? சீக்கிரம் விரதத்தை முடிக்க மாட்டாரே..??"

"ஹாஹா.. அதுக்கு நான் என்ன பண்றது..??"

"ஒருவாரமாவது ஆகிடும் ஆதிரா.. ரொம்ப ஏங்கிப் போயிடுவேன்..!!" சிபி பாவமாக கெஞ்ச, அவனுக்கு பதில் சொல்கிற ஜோரில்

"என்னை ஒருமாசமா ஏங்க வச்சிங்கள்ல.. நீங்க ஒருவாரம் ஏங்கினா ஒன்னும் தப்பு இல்ல..!!"

என்று மனதில் இருந்த ஏக்கத்தை ஆதிரா உளறிக் கொட்டிவிட்டாள்.. உளறியது புரிந்ததும் உடனே நாக்கை கடித்துக் கொண்டாள்..!! ஆனால்.. சிபி அந்த வார்த்தைகளை கற்பூரம் மாதிரி கப்பென்று பற்றிக்கொண்டான்.. முகத்தில் ஒரு புதுவித பிரகாசம் பிறந்தவனாய்..

"ஹேய்ய்ய்... என்ன சொன்ன இப்போ.. என்ன சொன்ன.. கொஞ்சம் திரும்ப சொல்லு..!!"

"எ..என்ன சொன்னேன்.. ஒ..ஒன்னும் சொல்லலையே..??" முழுக்க நனைந்தபிறகு முக்காடு தேடினாள் ஆதிரா.

"இல்ல.. ஒருமாசமா ஏங்கிட்டு இருந்தேன்னு சொன்ன..!!"

"சேச்சே.. அப்டிலாம் ஒன்னும் சொல்லல.. உங்களுக்கு காது ஸ்லிப் ஆகி இருக்கும்..!!"

"ஹாஹா.. எனக்கு காது ஸ்லிப் ஆயிடுச்சா.. இல்ல.. உன் மனசு வெளில ஜம்ப் ஆயிடுச்சா..??" சிபி அவ்வாறு கேட்க, ஆதிராவுக்கு இப்போது குப்பென்று முகம் சிவந்து போனது.

"ஹையோ.. போங்கத்தான்.. நான் அப்டிலாம் ஒன்னும் சொல்லவே இல்ல.. நான் கெளம்புறேன் போங்க..!!" என்று எழுந்து ஓடினாள்.

"ஹேய்ய்ய்.. இரு இரு..!!"

"விடுங்க..!!"

சிபி ஆதிராவின் கையை எட்டி பிடிக்க.. அவள் வெடுக்கென்று உதறிவிட்டு வெட்கத்துடன் கதவை நோக்கி ஓடினாள்..!!

"ஹேய் ஆதிரா.. ஒரு நிமிஷம்..!!"

சிபி அந்த மாதிரி கத்தவும்.. வாசல் வரை சென்றிருந்த ஆதிரா பட்டென்று நின்றாள்.. வெட்கம் சற்றும் குறையாதவளாய், கணவனிடம் திரும்பி கேட்டாள்..!!

"எ..என்ன..??"

"உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்..!!"

"என்னது..??"

"அந்த மச்சம் சூப்பரா இருந்தது..!!" சிபியிடம் ஒரு குறும்பு.

"எந்த மச்சம்..??" ஆதிராவிடம் ஒரு குழப்பம்.

"அதான்.. உன் இடுப்புக்கு கீழ.. அதுக்கு பக்கத்துல.. இவ்வளவு பெருசா..!!" சொல்லிவிட்டு சிபி கண்சிமிட்ட,

"ஹையோஓஓஓஓ..!!!!"

உச்சபட்ச நாணத்துக்கு உள்ளான ஆதிரா.. படக்கென முகத்தை இருகைகளாலும் மூடிக்கொண்டாள்..!! தான் சந்தேகித்த மாதிரியே, கணவன் தன் உடலை வெளிச்சத்தில் ரசித்திருக்கிறான் என்று தெரிந்து போனதில்.. வெட்கம் அப்படியே அவளை பிடுங்கித் தின்றது..!! சிபியின் முகத்தைப் பார்க்கவே கூசிப் போனவளாய் சில வினாடிகள் நின்றிருந்தவள்.. அப்புறம் இரண்டு விரல்களை விரித்து, ஒற்றைக் கண்ணால் கணவனை பார்த்து.. சிணுங்கல் சிந்துகிற குரலில் கேட்டாள்..!!

"பாத்துட்டிங்களா..??"

"முத்தம் கூட குடுத்தேன்.. ஈரமா..!!" சிபி அவளை மேலும் சீண்டினான்.

"ச்ச்ச்ச்சீய்ய்ய்ய்..!!!!!!!"

கத்திய ஆதிரா அதன்பிறகு ஒற்றை வினாடி கூட அந்த அறையில் இருக்கவில்லை.. கதவு திறந்தவள், புள்ளிமானாய் துள்ளிக் குதித்து ஓடிப்போனாள்..!!

அப்புறம்.. சிபி குளித்து முடித்து வெளியே வர அரைமணி நேரம் ஆனது.. ஆதிரா உணவு தயார் செய்து முடிக்க அதன்மேலும் அரைமணி நேரம் ஆனது..!! ஆவி பறக்கிற நீர் தோசையும்.. மணம் கமழுகிற தேங்காய் சட்னியும்..!! ஆதிராவின் அப்பா தணிகை நம்பியும் தோட்டத்தில் இருந்து திரும்பியிருக்க.. நால்வரும் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை உணவு அருந்தினர்..!!

சிபி தணிகை நம்பியின் தங்கை மகன்தான்.. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவன்.. ஏழு வயதில் இருந்தே அவனை எடுத்து வளர்த்தது தணிகை நம்பிதான்..!! விஷுவல் கம்யுனிகேஷனில் பட்டம் பெற்ற சிபி, இந்த மைசூர் பத்திரிகை அலுவலகத்தில் வேலையும் வாங்கிவிட்டான்..!! கடந்த ஒருவருடமாக.. மாமாவின் குடும்பத்தை தன்னுடன் வைத்திருக்கிறான்..!! வாழ்வு தந்த மாமாவின் மீது அவனுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு..!! பிறந்தது இரண்டும் பெண்களாகி போய்விட.. தணிகை நம்பியும் தங்கையின் மகனை தன்மகனாகவே நினைப்பார்.. மருமகன் ஆனபிறகும் அந்த நினைப்பு அவருக்கு மாறிப்போகவில்லை..!! அந்த உரிமையில்தான் இப்போதும்,

"எப்போ கெளம்புற சிபி..??" என்று ஒருமையிலும், பெயர் சொல்லியும் அவனை விளித்தார்.

"சாப்பிட்டு கெளம்ப வேண்டியதுதான் மாமா..!!"

"எத்தனை மணிக்கு ஃப்ளைட்..??"

"பத்து மணிக்கு..!!"

"ம்ம்.. டாக்ஸி வர சொல்லிருக்கிறியா..??"

"இ..இல்ல..!!"

"அப்புறம்..??"

"ஆ..ஆதிரா என்னை.. ஏ..ஏர்போர்ட்ல ட்ராப் பண்றேன்னு சொல்லிருக்கா..!!"

சிபி சற்று தடுமாற்றத்துடனே சொல்ல, தணிகை நம்பியின் முகத்தில் ஒருவித மலர்ச்சி.. அவருடைய உதடுகளில் கசிந்த அந்த புன்னகையில், ஒருவித நிம்மதியும் பெருமிதமும் ஒருசேர கலந்திருந்தது..!!

அதன்பிறகு ஒருமணி நேரம் கழித்து.. சிபி வீட்டில் இருந்து கிளம்பினான்..!! காரின் பின்புறம் ட்ராவல் பேகை திணித்தவன்.. கதவை அறைந்து சாத்தினான்..!! அவன் கையிலிருந்த கார்ச்சாவியை ஆதிரா பிடுங்கிக் கொண்டாள்..!!

"நான் ட்ரைவ் பண்றேன் அத்தான்.. ப்ளீஸ்..!!"

ஆசையாய் கேட்ட மனைவியை புன்னகையுடன் அனுமதித்தான் சிபி..!! இருவரும் காரில் ஏறி அமர்ந்தார்கள்..!! அவ்வாறு அமர்ந்ததுமே..

"கண்ணை மூடுங்கத்தான்..!!" சற்றே உத்தரவிடுவது மாதிரி சொன்னாள் ஆதிரா.

"எதுக்கு..??" சிபி புரியாமல் கேட்டான்.

"மூடுங்கன்னு சொல்றேன்ல.. மூடுங்க..!!" ஆதிரா அதட்டவும், எதுவும் புரியாமலே சிபி கண்களை மூடிக்கொண்டான்.

"ம்ம்.. கையை நீட்டுங்க..!!" மீண்டும் அதிகார தோரணையுடன் ஆதிரா.

"எதுக்குன்னு சொல்லு..!!"

"ப்ச்.. நீங்க நீட்டுங்க.. சொல்றேன்..!!"

சிபி இப்போது கையை நீட்ட.. ஆதிரா அத்தனை நேரம் ஒளித்து வைத்திருந்த அந்த பெட்டியை இப்போது கையில் எடுத்தாள்..!! அந்த பெட்டிக்குள் இருந்து.. அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு கைக்காடிகாரத்தை வெளியே எடுத்தாள்..!! அதை சிபியின் கையில் கட்டிவிட ஆரம்பித்தாள்..!! அவள் என்ன செய்கிறாள் என்று ஓரளவுக்கு புரிந்தும்.. எதுவும் புரியாதவனாக நடித்தவாறே..

"ஹேய்.. என்ன பண்ற.. கேக்குறேன்ல.. சொல்லு..!!" என்று மூடிய விழிகளுடன் கேட்டுக்கொண்டே இருந்தான் சிபி.

"ஹ்ம்ம்.. இப்போ கண்ணை திறந்து பாருங்க..!!" ஆதிரா கட்டிமுடித்துவிட்டு சொன்னாள். உடனே கண் திறந்து பார்த்த சிபி,

"வாவ்வ்வ்வ்..!!!" என்று கடிகாரத்தை பார்த்து ஆச்சரியமடைந்தான்.

"பிடிச்சிருக்கா..??" ஆதிரா பெருமிதமாக கேட்டாள்.

"ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..!!"

"ம்ம்..!! வாட்ச் கட்ட மாட்டேன்.. வாட்ச் கட்டுறதே எனக்கு பிடிக்காதுன்னு சொல்லிட்டு திரிவிங்கள்ல..?? இனிமே பாக்கலாம்.. கட்டுறிங்களா.. இல்ல கழட்டி போடுறிங்களான்னு..??" ஆதிரா குறும்பாக சொல்லவும்,

"ஹாஹா..!! கழட்டவே மாட்டேன்.. கைலையே போட்டுக்குறேன் போதுமா..??" சிபி சிரிப்புடன் சொன்னான். உடனே,

"அதுசரி.. என்ன இது.. திடீர்னு வாட்ச்லாம்..??" என்று நெற்றியை சுருக்கியவாறு கேட்டான்.

"இது என்னோட கிஃப்ட்..!!"

"கிஃப்ட்டா..?? எதுக்கு..??"

"ம்ம்.. இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா..??"

"என்ன நாள்..??" சிபி குழப்பமாக தலையை சொறிந்தான்.

"ரொம்ப யோசிக்காதிங்க.. இன்னைக்கு பிப்ரவரி 14th.. வேலன்டைன்ஸ் டே..!! லவ் பண்றவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது கிஃப்ட் வாங்கி குடுத்து.. நம்மளோட லவ்வை அவங்களுக்கு எக்ஸ்ப்ரஸ் பண்ற நாள்.." என்று படபடவென சொல்லிக்கொண்டே வந்த ஆதிரா பட்டென நிறுத்தி,

"ஐ லவ் யூ அத்தான்..!!" என்று கண்களிலும் குரலிலும் காதல் பொங்க சொல்லி முடித்தாள்.

சிபி அப்படியே உருகிப் போனான்.. அவனும் கண்களில் வழிகிற காதலுடன் மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தான்..!! சில வினாடிகள்..!! அப்புறம் என்ன நினைத்தானோ.. படக்கென தனது விரலில் போட்டிருந்த அந்த மோதிரத்தை கழற்றி எடுத்தான்..!!

"நீ கண்ணலாம் மூட வேணாம்.. கையை மட்டும் நீட்டு..!!" என்றவாறு,

"ஹையோ.. அ..அத்தான்.. என்ன இது..??" என்று ஆதிரா அதிர்ந்து கொண்டிருக்கையிலேயே, அவளுடைய விரல் பிடித்து அந்த மோதிரத்தை மாட்டி விட்டான்..!!

"இன்னைக்கு வேலன்டைன்ஸ் டே-னு எனக்கு சத்தியமா ஞாபகம் இல்ல ஆதிரா.. அப்படியே ஞாபகம் இருந்திருந்தாலும் உனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கி வச்சிருப்பேனான்றதும் சந்தேகந்தான்.. அதுலாம் எனக்கு தோணாம கூட போயிருக்கலாம்.. பட்.." ஆதிரா மாதிரியே படபடவென பேசிய சிபி பட்டென நிறுத்தி,

"ஐ லவ் யூ ஆதிரா..!!" என்று அதே காதல் பொங்குகிற குரலில் சொல்லி முடித்தான்.

கணவனின் செய்கையில் இப்போது ஆதிரா அப்படியே உருகிப் போனாள்.. அந்த மோதிரத்தையே பெருமிதமாக பார்த்தவள், அப்புறம் சிபியை ஏறிட்டு காதலும் கண்ணீரும் தளும்புகிற விழிகளுடன் பார்த்தாள்..!!

"எ..என்னத்தான் இது..?? நான் கிஃப்ட் தந்தேன்றதுக்காக.. நீங்களும் ஏதாவது தரணும்னுலாம் அவசியம் இல்ல..!!"

"அப்படி இல்லடா.. உனக்கு எதாவது தரணும்னு எனக்கே தோணுச்சு.. அதான்..!!"

"அதுக்காக..?? கைல போட்ருந்ததை கழட்டி தரணுமா..??"

"ஹாஹா.. என்ன பண்றது.. கிஃப்ட் ஷாப் போறதுக்கு இப்போ எனக்கு டைம் இல்லையே..?? பட் ஒன்திங்.."

"என்ன..??"

"இந்த ரிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்..!! இப்போ இது உன்கிட்ட இருக்குறதுல.. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்..!!"


புன்னகையுடன் சொல்லிவிட்டு, சிபி ஆதிராவையே ஆசையாக பார்த்தான்.. அவளும் கணவனையே வைத்த கண் வாங்காமல் காதலாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் சிபிக்கு திடீரென அந்த ஆசை வந்தது.. படக்கென ஆதிராவை அருகே இழுத்து அவளுடைய உதடுகளுடன் தனது உதடுகளை பொருத்திக் கொண்டான்.. அழுத்தமாக ஒரு ஈரமுத்தம் பதித்தான்..!! அவளை அணைக்க நகர்ந்தபோது.. காரின் கூரையினின்று தொங்கிக்கொண்டிருந்த அந்த காதல் கிளிகளின் பொம்மையை.. அவனது கை தட்டிவிட.. அந்தக்கிளிகளும் இப்போது அருகே நகர்ந்து மூக்குரசி முத்தமிட்டுக் கொண்டன..!!

"ம்ம்.. கெளம்பலாம் ஆதிரா.. டைமாச்சு..!!" முத்த ஈரத்தை சுவைத்துக்கொண்டே சிபி சொன்னான்.

"ம்ம்.. சரித்தான்..!!"

ஆதிராவும் நாணம் விலகாமலே சொல்லிவிட்டு.. காரை ஸ்டார்ட் செய்தாள்.. கியர் மாற்றி ஆக்சிலரேட்டரை மிதிக்க, கார் வேகமெடுத்து சாலையில் ஓட ஆரம்பித்தது..!! மிதமான வேகத்திலேயே வண்டியை செலுத்தினாள் ஆதிரா..!! ஹன்சூர் ரோட்டை தாண்டி மைசூர் பேலஸை அடைந்ததும்.. வலது புறம் செல்கிற அந்த அகலமான சாலையில் வண்டியை திருப்பினாள்..!! உடனே ஆக்சிலரேட்டரை அழுத்தி வேகத்தை கூட்டினாள்..!!

அதே நேரத்தில்.. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்.. அதே சாலையின் குறுக்காக அமைந்திருந்த அந்த மேம்பாலத்தில்..

சர்ரென்று விரைந்து சென்ற அந்த பேருந்தில் இருந்து.. ஒரு உணவுப் பொட்டலம் வெளியே தூக்கி எறியப் பட்டது..!! எங்கிருந்து வந்தன என்று தெரியாமலே ஒரு பெரிய காகக்கூட்டம் பறந்து வந்து.. உடனடியாய் அந்த உணவுப் பொட்டலத்தை சூழ்ந்து கொண்டன..!! 'கா.. கா.. கா..' என்று கரைந்து சப்தமிட்டுக்கொண்டே.. அந்த பொட்டலத்தை கொத்தி கொத்தி குதற ஆரம்பித்தன..!! ஒரே ஒரு காகம் மட்டும்.. அந்த கூட்டத்துடன் சேராமல்.. தனித்து.. அந்த உணவைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாத மாதிரி.. மேம்பாலத்தின் கைப்பிடி சுவரில் அமர்ந்தவாறு.. சாலையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.. சட்டென இப்போது பறக்க ஆரம்பித்தது..!!

"பிடிச்சிருந்ததா..??" சிபி குறும்பாக கேட்டான்.

"எது..??"

"முத்தம்..!!"

"ம்ம்.. பிடிச்சிருந்தது..!!" ஆதிரா நாணத்துடன் சொன்னாள்.

"அப்போ.. இன்னொன்னு..??" கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் தோளில் கைபோட,

"ஐயோ விடுங்கத்தான்..!!"

சிணுங்கிய ஆதிரா ஒருகணம் சாலையில் இருந்து பார்வையை விலக்கி, மீண்டும் சாலையை பார்த்தாள்..!! அதே கணத்தில்.. காரை நோக்கி பறந்து வந்த காகம்.. தனது இறக்கைகள் இரண்டையும் அகலமாக விரித்தவாறு 'படீர்ர்ர்ர்' என கார்க்கண்ணாடியில் வந்து மோதி.. தனது கூரிய அலகால் அந்த கண்ணாடியை 'ச்சிலீர்ர்ர்ர்' என்று ஒரு கொத்து கொத்தியது..!!

அவ்வளவுதான்..!! ஆதிரா பக்கென அதிர்ந்து போனாள்.. 'ஆஆஆவ்வ்' என்று கத்தினாள்.. குபீர் என்று ஒரு பய சிலிர்ப்பு அவளுக்குள்.. குழம்பிப்போனவள் ஸ்டியரிங்கை சரக்கென வளைத்தாள்.. ப்ரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்தாள்..!! கார் சர்ரென உச்சபட்ச வேகத்துடன் சீறியது.. அதேவேகத்தில் சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறவும், ஜிவ்வென மேலே பறந்தது.. பத்து மீட்டர் தூரம் பாய்ந்து சென்று, ஒருபக்கமாக சாய்ந்தவாக்கில் தரையில் போய் விழுந்தது.. அப்படியே தரதரவென தார்ச்சாலையில் சறுக்கிக்கொண்டு போய்.. சாலையோரமாக நின்ற மரத்தின் மீது 'டமார்ர்ர்ர்' என்று மோதி நின்றது..!!

சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் ஒருகணம் ஸ்தம்பித்து போனார்கள்.. என்ன நடந்தது என்று விளங்கவே அவர்களுக்கு சிறிது நேரம் பிடித்தது..!! 'அச்சச்சோ' என்று பதறியடித்துக் கொண்டு காரை நோக்கி ஓடினார்கள்..!!

கசக்கிப் போட்ட காகிதமாய் கார் உருக்குலைந்து போயிருந்தது.. காரை சுற்றி குபுகுபுவென ஒரே கரும்புகை.. கண்ணாடிகள் கற்கண்டு துகள்களாய் சிதறிப் போய் கிடந்தன..!! கார் ஒருபக்கமாக சாய்ந்து ஓய்ந்து போயிருக்க.. நான்கு சக்கரங்கள் மட்டும் இன்னும் ஓயாமல் சுழன்று கொண்டே இருந்தன..!! டாஷ்போர்டுக்கு மேல் தொங்கிய அந்த காதல் கிளிகள்.. இப்போது ரத்தத்தில் தோய்ந்து போய் ஊசலாடிக் கொண்டிருந்தன..!!



4 comments:

  1. Nice introduction screw sir ....
    Neenga Ithukku munnadi intha maathiri intro koduthathe illa...
    But So superb.....
    And no words to explain....
    And kurunji ya intha 2013 la enter pandra scene a romba expect pandrom.....
    So next update a quick a poda request pandren,....

    ReplyDelete
  2. ஸ்குரு சார் உங்க கதைய தமிழ் காமவெறீ பக்கதுல திருட்டுதனமா போடூறாங்க நான் அன்புள்ள் ராட்சசி படிச்சென் நிங்களூம் பாருங்க PLEASE SIR

    ReplyDelete
  3. ungaloda ella siru kadhikalai padichitten. ippo thodarkadhai padikka arampichu iruken. kadhai nalla arampichu irukkuringa. aduthu enna nadakkum endra ethirparppoda mudichu irukkuringa. nalla arampam

    ReplyDelete
  4. ungaloda ella siru kadhikalai padichitten. ippo thodarkadhai padikka arampichu iruken. kadhai nalla arampichu irukkuringa. aduthu enna nadakkum endra ethirparppoda mudichu irukkuringa. nalla arampam

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...