Social Icons

கண்ணாமூச்சி ரே ரே - 3


 




அத்தியாயம் 6

பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை நிறமே பரவிப் படர்ந்திருந்தது.. மலைகளில் முளைத்திருந்த மர, செடி, கொடிகளின் பச்சை..!! சிகரங்கள் அனைத்தும் குளிருக்கு இதமாய் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தன.. முகடுகளை சுற்றிலும் அடர்த்தியாய் வெண்பனி மூட்டங்கள்..!! உடலை ஊசியாய் துளைக்கிற ஈரப்பதம் மிக்க குளிர்காற்று.. நாசிக்குள் நுழைந்திட்ட அந்த குளிர்காற்றில் யூகலிப்டஸின் வாசனை..!! பச்சைமலையை பொத்துக்கொண்டு வெள்ளையாய் வெளிக்கொட்டுகிற தூரத்து அருவி.. அந்த அருவியின் சீற்றத்தை இங்குவரை கேட்ட அதன் சப்தத்திலேயே புரிந்துகொள்ள முடிந்தது..!!

பாறையை செதுக்கி அமைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில்.. பாம்பென ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு தொடர்வண்டி..!! பக்கவாட்டில் குறுகலாய் கிடந்த அந்த தார்ச்சாலையில்.. பனிசூழ பயணித்துக் கொண்டிருந்தது வெண்ணிற ஸ்கார்ப்பியோ..!! கொண்டையூசி வளைவுகள் நிரம்பிய சிக்கலான மலைப்பாதை அது.. கவனத்துடன் நிதானத்தையும் கலந்து காரோட்டிக் கொண்டிருந்தான் சிபி..!! மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியவாறு.. மலைச்சரிவு மரங்களில் மனதை செலுத்தியிருந்தாள் ஆதிரா..!! குளிருக்கு வெடவெடத்த அவளது தளிர் உதடுகளை எதேச்சையாக பார்த்த சிபி..

"ஸ்வெட்டர் வேணா எடுத்து போட்டுக்கடா..!!" என்றான் கனிவாக.

"இல்லத்தான்.. பரவால.. இன்னும் கொஞ்ச நேரந்தான..??" அமர்த்தலாக சொன்னாள் ஆதிரா.

பத்துநிமிட பயணத்திற்கு பிறகு.. குழலாறு குறுக்கிட்ட அந்த இடத்தில்.. பாதை இரண்டாக பிரிந்து கொண்டது..!! இடது புறம் செல்கிற பாதை அகழிக்கு இட்டுச்செல்லும்.. வலது புறம் திரும்பினோமானால் களமேழி வந்துசேரும்..!! சிபி காரை இடதுபுறம் செல்கிற சாலையில் செலுத்தினான்..!!

கண்ணாமூச்சி ரே ரே - 2


 




அத்தியாயம் 3

அடுத்த நாள் காலை.. அதிகமாய் ட்ராஃபிக் இல்லாத மைசூர் காந்தராஜ் சாலை..!! அந்த சாலையில்.. அகலமாகவும் உயரமாகவும் எழுந்து நிற்கிற அப்பல்லோ மருத்துவமனை.. அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை சார்ந்த அமைதியான ஒரு அறை..!!

ஆதிரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..!! அவளுடைய மார்புகள் சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.. அவளது தலையில் பலத்த அடிபட்டிருக்க வேண்டும்.. தலையை சுற்றி பெரிதாக ஒரு பேண்டேஜ்..!! முகத்தில் காணப்பட்ட சிறுசிறு சிராய்ப்புகள்.. இன்னும் கவனிக்கப்படாமலே விடப்பட்டிருந்தன..!! அவளுடைய இடதுபுற மார்புப் பிரதேசத்தில் இருந்து கிளம்பி சென்ற ஐந்தாறு எலக்ட்ரோடுகள்.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த ECG மானிட்டரின் பின்புறமாக சென்று முடிவடைந்தன..!! ஆதிராவின் இதயத்துடிப்பு வீதத்திற்கு ஏற்ப.. அந்த ECG மானிட்டர் பச்சை நிற அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.. 'கீங்க்.. கீங்க்.. கீங்க்..' என்ற சப்தத்தோடு..!!

மூன்று கால்களில் நின்ற அந்த ஸ்டீல் ஸ்டாண்டின், விரிந்திருந்த இரண்டு கைகளுள் ஒன்றில்.. ப்ளாஸ்டிக் சலைன் பாட்டில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது..!! அதிலிருந்து சொட்டு சொட்டாக இறங்கிய நிறமற்ற திரவம்.. குழாய் வழியிறங்கி ஆதிராவின் வலதுகை நரம்புக்குள் நேரடியாக பாய்ந்து கொண்டிருந்தது..!! தீருகிற நிலையை அந்த திரவம் இப்போது அடைந்திருக்க.. வேறொரு புதிய சலைன் பாட்டிலை மாற்றினாள், ஆதிராவை கவனித்துக் கொள்கிற கன்னட நர்ஸ்..!! நாஸில் திறந்து திரவ ஓட்டத்தை சீராக்கியவள்.. எதேச்சையாக ஆதிராவின் முகத்தை ஏறிட்டபோதுதான்.. அவளுக்கு இப்போது விழிப்பு வந்திருப்பதை கவனித்தாள்..!!

"வெல்கம் பேக் ஆதிரா.. குட் மார்னிங்..!!" என்றாள் புன்னகையுடன்.

ஆதிரா அவளுக்கு ஒரு உலர்ந்த புன்னகையை சிந்த முயன்று தோற்றாள்.. களைத்துப் போயிருக்கிறாள் என்பது அவளுடைய கண்களிலேயே தெளிவாக தெரிந்தது..!! உடலின் சக்தி முழுவதும் உறிஞ்சப்பட்டுப் போனது மாதிரியான ஒரு உணர்வு அவளுக்குள்..!! இமைகளை திறந்தும் மூடியும் திறந்தும் மூடியும்.. அப்படியே மலங்க மலங்க ஒரு பார்வை பார்த்தாள்..!! பிறகு.. உதடுகளை பிரித்து ஏதோ சொல்ல முயன்றாள்.. ஆனால் சப்தம் வெளிவராமல் போகவும்..

கண்ணாமூச்சி ரே ரே - 1







திடீரென இப்படி ஒரு ஆசை எனக்கு.. த்ரில்லர் கதை எழுதவேண்டும் என்று..!! காதலை அதிகம் சொன்னதாலோ என்னவோ.. அது ஒரு எளிமையான விஷயமாக ஆகிப்போனது எனக்கு.. ஐ மீன்.. எழுதுவதற்கு..!! த்ரில்லர் அப்படி அல்ல.. எனக்கு அதிகமாக கைவராத கலைதான்..!! முயற்சிக்கிறேன்.. உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்..!!

த்ரில்லர் என்றவுடன்.. பரபரப்பாக எதையும் எதிர்பார்த்து விடாதீர்கள்..!! மதன மோக ரூப சுந்தரி, பிரேக்கிங் பாயிண்ட் கதை எல்லாம் படித்திருக்கிறீர்கள்தானே..?? அதே போன்றதொரு ஸ்டைலில்.. எனக்கு மிக மிக பிடித்த மாதிரியான.. Slow paced thriller-ஆகவே இந்தக்கதையை எழுத திட்டமிட்டுள்ளேன்..!! ஆங்காங்கே சில பரபரப்பு அம்சங்கள்.. மற்றபடி மொத்தக்கதையும் மிதமான வேகத்திலேயே பயணிக்கும்..!! படித்து பாருங்கள்.. கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்



அத்தியாயம் 1

ஆண்டு: கி.பி 1896
இடம்: மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கிற அகழி என்கிற மலை கிராமம்.

மழைமேகம் திரண்டிருக்க.. மாலை வானம் இருண்டிருந்தது..!! சுற்றிலும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த காட்டுமரங்கள்.. சூரியனின் வெளிச்சத்தை சுத்தமாய் உறிஞ்சியிருந்தன..!! மேல்வானத்தில் பளிச்சென்று ஒரு மின்னல் கீற்றோடு.. மேற்குமூலையில் திடுமென ஒரு இடி முழக்கம்..!! உறைந்திருந்த மேகங்கள் இப்போது கொஞ்சம் உருக ஆரம்பிக்க.. ஊசிக்கற்றைகளாய் தூறல் துளிகள் மரங்களை ஊடுருவின..!!

அந்த காட்டு மரங்களுக்கு உட்புறமாக.. அகலமாய் உயரமாய் இருந்த அந்த கல்மேடையை சுற்றிலும்.. அகழியின் எழுபத்து சொச்ச குடும்பத்தின் பிரதிநிதிகள் குழுமியிருந்தனர்..!! அதில் எழுபது சதவீதம் பேருக்கு மேல்சட்டை இல்லை.. பாதிப்பேர் பவ்மயமாக கைகளை கட்டியிருந்தனர்..!! பக்கவாட்டில் மூலைக்கொரு தூண்களுடனும்.. பாறையை செதுக்கி அமைத்த கூரையுடனும்.. காட்சியளித்தது அந்த கல்மேடை..!! நான்கு தூண்களில் ஒன்றில் சன்னதக்காரர் சாய்ந்திருந்தார்.. சாமியாடி முடித்த களைப்பில் கண்கள் செருகியிருந்தார்..!!

கல்மேடையின் மையத்தில், கைத்தடியை ஊன்றியவாறு புவனகிரி நின்றிருந்தார்.. அவருக்கு பின்புறமாக வேல்க்கம்பு ஏந்திய நான்கு அடியாட்கள்..!! அவருடைய பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்தது.. சிவந்து போயிருந்த அந்த கண்களில் ஒருவித அனல்கக்கும் வன்மம்..!! வெல்வட் துணியாலான இறுக்கமான உடை அணிந்திருந்தார்.. தடிமனாக கழுத்தில் தொங்கிய தங்கச்சங்கிலியில், நீலநிறக்கல் பதிக்கப்பட்ட பதக்கம் தகதகத்தது..!! இரண்டு விரல்களை மட்டும் மூளியாக்கி, எட்டு விரல்களுக்கு முரட்டு மோதிரங்கள்.. வலது கையில் ஒரு தங்க காப்பு.. கால்களுக்கு முனை நிமிர்ந்த தோல்செருப்பு..!!

அன்புள்ள ராட்சசி - 1







'அன்புள்ள ராட்சசி' - நான் அடுத்து எழுத நெனைச்சிருக்குற கதை..!! ரொம்ப சிம்பிளான கதைதான்.. என்னோட எழுத்து மூலமா சுவாரசியமாக்க முடியும்ன்ற நம்பிக்கைல.. கைல எடுத்திருக்குறேன்..!! கதை தலைப்புலேயே ஓரளவு க்ளூ கொடுத்திருக்கேன்.. ஆரம்பத்துல சில ஜாலியான விஷயங்களும், போக போக சில காதல் உணர்வுகளையும் கதைல கலக்க நெனச்சிருக்கேன்..!! என்னோட எல்லா முயற்சிக்கும், அன்போட ஆதரவளிக்கும் நண்பர்கள்.. இந்தக்கதைக்கும் என்னோட துணை இருப்பாங்கன்னு நம்பி.. இந்த முயற்சில இறங்குறேன்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்



அத்தியாயம் 1

"உ..உங்க பேரே மறந்து போச்சு..!!" பிரமிட் நடராஜன் சாயலில் இருந்த பரந்தாமன் நெற்றியை தடவியவாறே சொன்னார்.

"அ..அசோக்..!!" அவருக்கு பதிலளித்த அசோக் அல்லு அர்ஜுன் சாயலில் இருந்தான்.

"ஆங்.. கரெக்ட் கரெக்ட்.. அசோக்..!! இப்போ ஞாபகம் வந்துடுச்சு..!! ஹாஹா.. வயசாயிடுச்சுல..??"

"ம்ம்..!! அதனால என்ன ஸார்..?? பரவால..!!"

"வந்து ரொம்ப நேரம் ஆச்சோ..??"

"இல்ல ஸார்.. ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. அவ்வளவுதான்..!!"

"ம்ம்.. காஃபி, டீ ஏதும் சாப்பிடுறீங்களா..??" அவர் சம்பிரதாயமாக கேட்க,

"இ..இல்ல ஸார்.. பரவால..!!" அசோக் புன்னகையுடன் தவிர்த்தான்.

"வெயில்ல அலைஞ்சு வந்திருப்பீங்க போல.. கொஞ்சம் தண்ணியாவது குடிங்க..!!" அவர் கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை அசோக்கின் பக்கமாக நகர்த்தினார்.

"பரவால ஸார்.. இருக்கட்டும்..!!" அசோக் அதை தொட்டுக்கூட பார்க்காமல் சொன்னான்.

"ஹ்ம்ம்.. சொல்லுங்க தம்பி.. கிஷோர் தம்பி உங்களை பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னாரு.. நானும் 'சரி அனுப்பி வைங்க.. பேசிப்பாக்குறேன்..'னு சொல்லிருந்தேன்..!!" அவருடைய பேச்சில் ஒரு அலட்சியம் தெரிந்தது. இருந்தாலும்,

"ரொம்ப தேங்க்ஸ் ஸார்.. எனக்காக உங்களோட டைம் ஒதுக்கித் தந்ததுக்கு..!!" அசோக் நிஜமான நன்றியுணர்வுடன் சொன்னான்.

"பரவால தம்பி..!! மொதல்ல.. உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..!!"

அன்புள்ள ராட்சசி - 2







அத்தியாயம் 3

வடபழனியில் இருந்து வளசரவாக்கம் வருவதற்குள்ளாகவே அசோக் கண்ணயர்ந்திருந்தான். அவனுடைய தலை கார் சீட்டில் சாய்ந்து அண்ணாந்திருக்க, வாய் 'ஆ'வென்று பிளந்திருந்தது. ஆல்கஹாலால் குழம்பிப் போயிருந்த அவனது மூளை, அன்று முழுதும் அவனை பாதித்த விஷயங்களை எல்லாம், கடுகளவும் லாஜிக் இல்லாமல் கண்களுக்குள் படமாக ஓட்டிக்கொண்டிருந்தது.

கொட்டும் மழையில்.. கோரமான பற்களுடனும்.. கொலைவெறி கொப்பளிக்கும் விழிகளுடனும்.. பரந்தாமன் ஷிவாவையும், ப்ரியாவையும்.. கோடாரியுடன் விரட்டினார்..!! 'யாரைப்பாத்து ஆண்ட்டின்னு சொன்ன..? யாரைப்பாத்து சொன்ன..? இனிமே சொல்லுவியா..? சொல்லுவியா.. சொல்லுவியா..??' என்று சாலமனின் ஆள் 'குண்டு' கேத்தரினா.. பற்களை நறநறவென கடித்தவாறு.. அசோக்கின் முகத்திலேயே பாக்ஸிங் பழகினாள்..!! 'இவன் ஆளு ரொம்ம்ம்ப வயலண்டா இருக்காடா..' என்று கிஷோர் யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான்..!!

இந்த லட்சணத்தில்.. இவர்கள் சரக்கடித்த பாரில்.. எய்ட்டி ஃபோர் இன்ச் எல்.ஈ.டி டிவியில் ஓடிய.. ஐ.பி.எல் மேட்சின் எஃபக்ட் வேறு.. அவனுடைய கனவில் தெரிந்தது..!! வான்கடே மைதானத்தின் மையத்தில்.. வானை முட்டிவிடுவது மாதிரி நின்றது.. ஒரு ராட்சத வடிவ ராயல் சேலன்ச் குவார்ட்டர் பாட்டில்..!! தந்தூரி அடுப்பில் சுடப்பட்டு கருகிப்போன லெக்பீஸ் ஒன்று, அந்த பாட்டில் மீது ஸ்டைலாக சாய்ந்திருந்தது..!! ஃபுட் கோர்ட்டில் பார்த்த அந்த ஸ்ட்ரேஞ்சர் அழகி (நம்ம ஹீரோயின்தான்).. சியர்லீடர் கெட்டப்பில் மஞ்சள் நிற கச்சையும், குட்டைப்பாவாடையும் அணிந்து கொண்டு.. கையில் சிவப்பு நிற பாம்பாம்களுடன்.. முகத்தை வேறு சோகமாக வைத்துக்கொண்டு.. ராட்சத ராயல் சேலன்ச் பாட்டிலை சுற்றி சுற்றி வந்து.. கிறிஸ் கெயிலுடன் கங்ணம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாள்..!! இதெல்லாம் பத்தாதென்று, எந்த சம்பந்தமுமே இல்லாமல்.. ஹர்பஜன் சிங் வேறு இடையில் புகுந்து.. 'ஹே.. பல்லே பல்லே பல்லே..' என்று ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியுடன் தவ்வித்தவ்வி குதித்துக் கொண்டிருந்தார்..!!

"மச்சி வீடு வந்துடுச்சுடா..!!"

அன்புள்ள ராட்சசி - 3


 




அத்தியாயம் 4

அடுத்த நாள் காலை அசோக் கண்விழித்தபோது, அவனது தலைக்கடியில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டுமாய் நான்கு தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு ஒரு மூலையில் கிடந்த அந்த போர்வை, இப்போது அவன் உடலை முழுவதுமாய் போர்த்தி, காலைக்குளிருக்கு இதமாக கதகதப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இரவில் பளிச்சென்று எரிந்த குழல்விளக்கு இப்போது அணைந்துபோயிருக்க, கண்ணை உறுத்தாத வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது இரவு விளக்கு ஒன்று..!!

கண்விழித்ததுமே மனதுக்குள் ஒரு புத்துணர்வும் புதிதாய் விழித்துக் கொண்டதை அசோக்கால் உணர முடிந்தது. தலையை திருப்பி மணி பார்த்தான். ஏழரை என்று காட்டியது கடிகாரம்..!! அவனுக்கும் அன்றிலிருந்து ஏழரை ஸ்டார்ட் ஆகப்போகிறது என்பதை அறியாதவனாய், படுஉற்சாகமாகவே படுக்கையை விட்டு எழுந்தான். பாத்ரூமுக்குள் புகுந்தவன் கால் மணி நேரம் கழித்து, கமகமவென வாசனையாக வெளிப்பட்டான். வேறு உடைகளை பரபரவென அணிந்துகொண்டு அவனுடைய அறையை விட்டு வெளியேறினான். கிச்சனுக்குள் நுழைந்தான். பொங்கிய பாலின் கொதிப்பை அடக்குவதற்காக, குனிந்து ஸ்டவ் ரெகுலேட்டர் திருகிக் கொண்டிருந்த பாரதி, மகன் உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள்.

"என்னடா.. பொழுது விடிஞ்சிருச்சா..??"

"ம்ம்.. அரை மணி நேரத்துக்கு முன்னாடியே..!!"

"நல்லா தூக்கமா..??"

"செம தூக்கம்..!! தலை வச்சு படுத்தது என் மம்மி மடியாச்சே.. எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்கினேன்..!!"

அன்புள்ள ராட்சசி - 4


 




அத்தியாயம் 6

அந்த நாளும் அடுத்த நாளும் அசோக்கிற்கு ஒருவித பிரம்மையும் பிரச்னையுமாகவே கழிந்தன..!! ஆசைஆசையாக பேச சென்றவனின் மனதை.. அந்தப் பெண்ணுடைய அனல் கக்கும் பார்வையும்.. அவள் கழற்றி கையிலெடுத்த செருப்பும்.. அந்த செருப்பின் அகலமான அடிப்புறமும்.. அதில் ஓரமாய் ஒட்டியிருந்த பபிள்கமும்.. என எல்லாமும் சேர்ந்து.. ரொம்ப.. ரொம்பவே பாதித்துவிட்டன..!! அந்த பாரதிக்கு.. 'பார்க்கும் மரங்கள் எல்லாம் பச்சை நிறம்' தோன்றிய மாதிரி.. இந்த பாரதி மைந்தனுக்கு.. காணும் இடங்கள் எல்லாம் கலர் கலராய் செருப்புகள்தான் தோன்றின..!!

"என்னடா.. வெறும் சாதத்தையே சாப்பிட்டுட்டு இருக்குற.. இந்தா.. இதை கொஞ்சம் கடிச்சுக்கோ..!!" என்றவாறு, அசோக்கின் அம்மா அவனுடைய வாய்க்கருகே செருப்பை நீட்டினாள்.

"மம்மீஈஈ..!!!!" அலறியே விட்டான் அசோக். அவனுடைய முகம் பட்டென வியர்த்துப் போனது.

"அ..அசோக்கு... அசோக்கு... என்னப்பா ஆச்சு..??" பாரதி பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டவளாய் கேட்டாள்.

"ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்ல மம்மி..!!"

அம்மாவின் கையில் இருப்பது அப்பளம்தான் என்று புரிந்ததும், சற்றே நிம்மதியடைந்த அசோக், சமாளிக்கும் விதமாய் சொன்னான். ஆனால் அப்புறமும் பாரதி சமாதானம் ஆகாமல்,

"எ..என்னடா நீ... இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி..!!"

என்றவாறே, தண்ணீர் டம்ளரை எடுத்து அவளே தன் மகனுக்கு நீர் புகட்டினாள். அன்று மாலை அசோக் வீடு திரும்பியதில் இருந்தே, அவனிடம் ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருந்த பாரதி, 'எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே..?? எதைப்பாத்து பயந்தான்னு புரியலையே..?? ஒத்தை ஆளா எத்தனை பேய்ப்படம் வேணா பார்ப்பானே..?? இன்னைக்கு அப்பளத்தை பாத்தாலே அனகோண்டாவை பாத்தவன் மாதிரி அலர்றானே..?? காளியாத்தா மாரியாத்தா.. காமாட்சி மீனாட்சி.. கருமாரி மகமாயி.. நீங்கதான் எம்புள்ளைக்கு தொணை இருக்கணும்டியம்மா..' என்று மனதுக்குள்ளாகவே கவலையும் ரகசியமுமாய் வேண்டிக்கொண்டாள்.

அன்புள்ள ராட்சசி - 5


 




அத்தியாயம் 8

அன்று மாலை அசோக்கின் வீட்டில்.. அவனுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது..!! மலர் மாலை அணிவித்து.. மங்கள ஆரத்தி எடுக்காத குறைதான்..!! பந்தயம், பரிட்டோ, செருப்பு, முறைப்பு என.. சில சிக்கலான விஷயங்களை மட்டும் தவிர்த்துவிட்டு, மீதி விஷயங்களை எல்லாம்.. ஒன்றுவிடாமல் அசோக்கின் குடும்பத்துக்கு ஒலிபரப்பு செய்திருந்தது.. தி கிரேட் கிஷோர் FM..!! 'அசோக் ஒருபெண்ணை பலநாட்களாக பார்வையாலேயே காதலித்தான்.. இன்று பத்தே நிமிடம் அவளிடம் பேசி.. பதிலுக்கு அவளையும் ஐ லவ் யூ சொல்ல வைத்துவிட்டான்..' என்ற அளவில்தான் செய்தி ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது..!!

விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே.. வீட்டில் அனைவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம்.. குதுகலம்.. மகிழ்ச்சி..!! அனைவரது முகத்திலுமே அப்படி ஒரு பூரிப்பு.. சிரிப்பு.. மலர்ச்சி..!! பொசுபொசுவென, வெள்ளை வெளேரென இருக்கும் பொமெரேனியன்கள் இரண்டும் கூட.. வாசலில் போடப்பட்டிருந்த ரங்கோலியில் புரண்டு எழுந்து.. அன்று கலர்ஃபுல்லாய் காட்சியளித்தன..!! அசோக் வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓடிச்சென்று.. அவனுடைய காலை சுற்றி சுற்றி வந்து.. முகர்ந்து முகர்ந்து பார்த்தன..!! அனைவருமே அவசரமாய் சென்று அசோக்கை சூழ்ந்து கொண்டனர்.. அன்புடன் கட்டிக்கொண்டனர்.. கைகுலுக்கினர்.. 'கலக்கிட்டடா' என்று கன்னம் கிள்ளினர்..!!

தன் குடும்பத்தினரிடம் இருந்து, அத்தகைய வரவேற்பை அசோக் எதிர்பார்த்திருக்கவில்லை.. திணறிப் போனான்..!! ஏற்கனவே அந்த மீரா தனது காதலை சொல்லிச் சென்றவிதத்தில், அவனுடைய மனம் ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.. இதில் இவர்கள் வேறு ஆளாளுக்கு கலாட்டா செய்ய.. செய்வதறியாது திருதிருவென விழித்தான்..!! அவனுடன் எப்போதும் சண்டை போடுகிற சங்கீதா கூட.. அன்று அண்ணனின் காதல் கணிந்துவிட்டதென மிக சந்தோஷத்தில் இருந்தாள்..!! அசோக்கை பார்த்து கண்சிமிட்டியவாறே, தனது இனிய குரலால் பாடினாள்..!!

"பெண்கள் பின்னால் சுற்றாமல்.. பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ ஓ.. அவனே காதல் மன்னன்... காதல் மன்னன்.. காதல் மன்னன்..!!"

அன்புள்ள ராட்சசி - 6


 




அத்தியாயம் 10


வீங்கிப்போன முகத்துடன், அசோக்குக்கு மூக்கும் சேர்ந்து கிழிந்திருந்தது. அவனுடைய உருண்டையான நீளமான மூக்கின் மையப்பகுதியில், குறுக்குவாக்கில் ஒரு கீறல். தோல் பெயர்ந்து வந்திருக்க, அதன் வழியே ரத்தம் துளிர்த்திருந்தது. அன்டர்டேக்கர் தன் விரலில் அணிந்திருந்த மண்டையோடு மோதிரம்தான் அதற்கு காரணமாயிருக்க வேண்டும். அசோக் மூக்கை இருபுறமும் பிடித்துக்கொண்டு, 'உஷ்.. உஷ்.. உஷ்..' என உதடுகள் குவித்து காற்று ஊதிக்கொண்டிருந்தான். மீரா தன் பேகை கையிலெடுத்து பக்கவாட்டு ஜிப்பை திறந்தாள். உள்ளே விதவிதமாய் மாத்திரைப் பட்டைகள்.. ஒன்றிரண்டு ஆய்ன்மென்ட்கள்.. பேண்டேஜ்.. பிளாஸ்டர்..!!

"ம்ம்.. கையை எடு..!!" மீரா சொல்ல, அசோக் மூக்கிலிருந்து கைகளை விலக்கிக் கொண்டான்.

மீரா அசோக்கின் மூக்கில் கொஞ்சமாய் கொப்பளித்திருந்த ரத்தத்தை பஞ்சால் துடைத்து சுத்தம் செய்தாள். அப்புறம் ப்ளாஸ்டர் பிரித்து, சரக்கென இழுத்து, அசோக்கின் மூக்குக்கு குறுக்காக அழுத்தமாக ஒட்டிவிட்டாள்.

அன்புள்ள ராட்சசி - 7


 




அத்தியாயம் 12

வயலினும், புல்லாங்குழலும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்து தேனிசையை கசிய.. கூடவே 'திம்.. திம்.. திம்..' என்று ட்ரம்ஸின் மெலிதான தாளமும் சேர்ந்து கொள்ள.. ஒரு ஆணுடைய மெலிதான, ஹஸ்கியான, ஏக்கமான குரலில் ஆரம்பமானது அந்தப் பாடல்..!!

'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!'

வீட்டு சுவரேறி வெளியே குதித்த அவள்.. தடுமாறி கீழே விழுந்தாள்..!! உடனே எழுந்து.. முழங்கையில் ஏற்பட்ட சிராய்ப்பை தடவிக்கொண்டே.. உற்சாகமாக ஓடி வந்தாள்..!! அவன் கிக்கரை உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முறுக்கினான்..!! அவள் ஓடி வந்து பின் சீட்டில் அமர்ந்து கொண்டு.. 'போ.. போ..' என்று அவனுடைய தோளை தட்டி அவசரப் படுத்தினாள்.. பைக் பறந்தது..!! மொட்டைமாடியில் நின்று.. யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவளுடைய அரசியல்வாதி அப்பா.. எதேச்சையாக இந்த காட்சியை காண நேரந்ததும்.. உடனடியாய் அவரிடம் ஒரு பதற்றம்..!! ஆத்திரம் அப்பிய முகத்துடன் படிக்கட்டில் தடதடவென இறங்கினார்.. தன்னுடைய அடியாட்களை அழைத்து.. கையை அப்படியும் இப்படியுமாய் ஆட்டி ஆட்டி.. கோபம் கொப்பளிக்க சில உத்தரவுகள் பிறப்பித்தார்..!! பிறகு அவர்களுடன் அந்த டாடா சுமோவில் வேகமாய் கிளம்பினார்..!!

குறுக்கும் மறுக்குமாய் வாகனங்கள் வர.. அதற்குள் லாவகமாக புகுந்து ஓடியது பைக்.. அந்த பைக்கை விடாமல் துரத்தியது டாடா சுமோ..!! அவனுடைய இடுப்பை அவள் இறுக்கி பிடித்துக்கொள்ள.. சர்ரென சீறிப்பறந்த பைக் சென்றதுமே.. படக்கென விழுந்தது சிவப்பு சிக்னல்..!! 'ச்சே..' என்று வெறுப்பாக தொடையை தட்டிக் கொண்டார் அரசியல்வாதி அப்பா..!!

இருபுறமும் பச்சை பசேலென அடர்த்தியான மரங்களுடன்.. நேர்வகிட்டு கூந்தல் போல நீளமாய் கிடந்த.. அந்த அழகான ஆளரவமற்ற தார்ச்சாலையில்.. அவன் பைக்கை கவனமாக செலுத்திக் கொண்டிருக்க.. இவள் கைகள் இரண்டையும் அகலமாய் விரித்து.. அப்படியே ஆனந்தத்தில் திளைத்தாள்..!!

'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!'

அன்புள்ள ராட்சசி - 8


 




அத்தியாயம் 14

அதன்பிறகு வந்த சில நாட்கள்.. மீரா என்ற புதிருக்கான விடையை அறிந்து கொள்வதில்.. அசோக்கிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிற நாட்களாகவே அமைந்தன..!! முன்பிருந்தது போலல்லாமல்.. முற்றிலும் மாறுபட்ட ஒரு மீராவை அசோக் அந்த நாட்களில் காண நேர்ந்தது..!! அவளுடைய நடவடிக்கைகளின் அர்த்தத்தை.. அவ்வளவு எளிதாக அசோக்கால் விளங்கிக் கொள்ள முடியவில்லை..!! ஏரியின் மீது நின்று தான் பேசிய ஆவேச பேச்சு.. ஏதோ ஒருவகையில் மீராவை பாதித்திருக்கிறது என்பது மட்டுமே அசோக்குக்கு புரிந்தது..!! அது எந்தவகை பாதிப்பு.. அந்த பாதிப்பின் பலன் பாஸிட்டிவா, நெகட்டிவா.. என்பதை எல்லாம் சரியாக அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை..!!

அன்று அவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது.. ஒன்று.. மீரா தன்னை புரிந்து கொள்ளாமல் எரிந்து விழப் போகிறாள்.. இல்லை என்றால்.. தன் தவறை உணர்ந்து, மனமுருக மன்னிப்பு கேட்கப் போகிறாள்.. என்றுதான் அசோக் எதிர்பார்த்திருந்தான்..!! எதற்கும் சம்பந்தமில்லாமல்.. எங்கோ பார்த்துக்கொண்டு.. அவள் 'ச்சோ.. ச்ச்வீட்..' என்று சொன்னதை.. அவன் சற்றும் எதிர்பார்த்திரவில்லை..!! அப்படி சொல்கையில் அவளுடைய முகபாவனை வேறு.. அசோக்கை சற்று மிரள செய்திருந்தது.. அவளுடைய கண்ணீர் மட்டும் அவனுடைய மனதை பிசைவதாக இருந்தது.. ஆனால், அவளிடம் மேற்கொண்டு எதுவும் கேளாமல் மவுனமாகவே இருந்தான்..!! 'ச்சோ.. ச்ச்வீட்..' என்று சொல்லிவிட்டு.. கொஞ்ச நேரம் அமைதியாக ஆகாயத்தையே வெறித்து பார்த்துவிட்டு.. அடுத்து அவள் பேசிய வார்த்தைகள்..

"கெளம்பலாம்.. டைம் ஆச்சு..!!" என்பதுதான்.

சொல்லிவிட்டு அசோக்கை எதிர்பாராமலே, பைக் நோக்கி விடுவிடுவென நடந்தாள். அசோக்குக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதும் புரியவில்லை..!! அவஸ்தையுடன் அவளையே பார்த்தவன், பிறகு அவளின் பின்னால் நடந்தான்.. பில்லியனில் அவள் ஏறிக்கொள்ள.. பைக்கை உதைத்து கிளப்பினான்..!!

வாகன போக்குவரத்து அதிகமில்லாத தார்ச்சாலையில்.. வண்டி மிதமான வேகத்திலேயே சென்று கொண்டிருந்தது..!! ஏரியில் நனைந்த இருவரது உடல்களும்.. எதிரே வீசிய குளிர்ந்த காற்றுக்கு.. லேசாய் வெடவெடத்தன..!! அதே நேரம் இருவருடைய இதயங்களும்.. ஒருவித வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்தன..!! இருவரும் ஒரு இறுக்கமான மனநிலையுடன்.. எதுவுமே பேசாமல்தான் சென்று கொண்டிருந்தனர்..!! அசோக்தான் மீராவின் அமைதியை நெடுநேரம் பொறுக்க முடியாமல்.. முதலில் பேச ஆரம்பித்தான்..!!

அன்புள்ள ராட்சசி - 9


 




அத்தியாயம் 16

அடிவயிற்றில் சென்ஸார் தாங்கியிருந்த அந்த நீர்க்குழாய்.. அசோக்கின் கைகள் குறுக்காக வந்ததுமே.. சரியாக புரிந்துகொண்டு சர்ரென நீர்க்கற்றையை கொட்டியது..!! கைகளை முதலில் கழுவிக்கொண்ட அசோக்.. பிறகு கழுவிய கைகளில் கொஞ்சமாய் நீர் தேக்கி.. வாயும் கொப்பளித்துக் கொண்டான்..!! டிஷ்யூ பேப்பர் உருவி, கைகளை துடைத்துக்கொண்டே.. கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை கவனமாக பார்த்தான்..!! சற்றே கலைந்து ஒதுங்கியிருந்த முடிக்கற்றையை.. கைவிரல்களாலேயே ஒழுங்கு படுத்திக் கொண்டான்..!! சுருட்டப்பட்ட டிஷ்யூ பேப்பரை டஸ்ட் பின்னில் எறிந்துவிட்டு.. விருட்டென வாஷ்ரூம் கதவு திறந்து வெளியேறினான்..!!


மாலைநேரம் அது.. மஞ்சள்நிற நியான் விளக்குகளை ஸீலிங்கில் தாங்கிய காரிடார் அது.. கால்களை கவ்வியிருந்த கேன்வாஸ் ஷூ, டைல்ஸ் தளத்தில் அழுந்தி 'டக்.. டக்..' என சப்தம் எழுப்ப.. கைவிரல்கள் கோர்த்து சொடுக்கெடுத்தவாறே அசோக் மெல்ல நடந்தான்..!! சிறிது தூரம் நடந்து இடப்பக்கம் திரும்பியதுமே.. ஃபுட்கோர்ட்டின் அந்த விஸ்தாரமான மையப்பகுதி பார்வைக்கு வந்தது..!! தூரத்தில் மீரா தெரிந்தாள்.. அவள் வழக்கமாக அமர்கிற அதே டேபிளில்.. கைகள் ரெண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு.. அவளை நோக்கி நடந்து செல்கிற இவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவளுக்கு எதிரே கிடந்த சேரில் சென்று இவன் அமர்ந்ததுமே.. அவளை ஏறிட்டு அவசரமாக சொன்னான்..!!

"ம்ம்.. சாப்பிட்டும் முடிச்சாச்சு.. இப்போவாவது சொல்லு..!!"

அன்புள்ள ராட்சசி - 10


 




அத்தியாயம் 18

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில்.. அதிக சலசலப்பு இல்லாமல் சாந்தமாகவே காட்சியளித்தது அந்த கட்டிடம்.. வடபழனி R-8 காவல் நிலையம்..!! கட்டிடத்துக்குள்ளே.. கைதிகளை அடைத்து வைக்கிற ஸெல்லுக்குள்.. செங்கலாலும், சிமெண்டாலும் ஆன அந்த மேடை மீது.. சற்றே வாயை பிளந்து வைத்தவாறு உறங்கிக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாச பிரசாத்..!! எஸ்.ஐ ஆக இருக்கையிலேயே.. எல்லோரும் அவரை எஸ்.பி என்று அழைக்கிறார்கள் என்றால்.. தாய், தந்தை வைத்த தனது பெயருக்குத்தான் அவர் நன்றி கூற வேண்டும்..!! 'எஸ்.பி ஸார் வர்றார்.. எஸ்.பி ஸார் போறார்..' என்பது மாதிரி கான்ஸ்டபிள்கள் தங்களுக்குள் பேசி.. அந்த ஸ்டேஷனுக்கு புதிதாக வருகை தந்திருக்கிற நபர்களை.. புரியாமல் தலை சொறிய வைப்பார்கள்..!!

மஃப்டி உடையிலே உறங்கிக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாச பிரசாத்.. மார்பு திறந்திருக்க, சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் கழன்டிருந்தன.. தடித்த தங்கச்சங்கிலி ஒன்று அவரது கழுத்தில் தகதகத்தது..!! அசதியால் ஏற்பட்டிருந்த அவருடைய ஆழ்ந்த உறக்கத்தை.. ஸ்டேஷனுக்கு முன்புறம் இருந்து, சலசலவென வந்த அந்த சப்தம்.. சற்றே அசைத்து கலைத்துப் பார்த்தது..!! கான்ஸ்டபிள் கனகராஜன்.. கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த யாரிடமோ.. அசுவாரசியமான குரலில் விசாரித்துக் கொண்டிருந்தார்..!!

"ஓடிப்போயிட்டாளா..??"

"கா..காணாமப் போயிட்டாங்க..!!"

"ரெண்டும் ஒன்னுதானய்யா..??"

"இ..இல்ல ஸார்.. ரெண்டும் வேற வேற..!!"

முன்பிருந்து வந்த சப்தம் மட்டும் இல்லாமல்.. அவருடைய முகத்துக்கு முன்பாக 'ஈஈய்ங்.. ஈஈய்ங்..' என்று இரைச்சலிட்டவாறே சுற்றி சுற்றி வந்த ஈ ஒன்று.. இப்போது அவரது மூக்கிலேயே சென்று அமர.. அவருடைய உறக்கம் முழுமையாக கலைந்து போனது..!! 'ப்ச்..' என்று சலிப்பான குரலுடன் முகத்துக்கு முன்பாக கையை வீசியவர்.. தலையை சிலுப்பியவாறே எழுந்து அமர்ந்தார்..!! கண்கள் தூக்கத்தால் இன்னும் சுருங்கிப்போயிருக்க.. முரட்டுத்தனமான அவருடைய முகவெட்டில் இப்போது ஒருவித கடுகடுப்பு..!! ஈ மீது எழுந்த கடும் எரிச்சலுடன்.. பக்கத்து அறையில் இருந்து வந்த கனகராஜனின் கட்டைக்குரல் வேறு அவருக்கு கடுப்பை கிளப்ப..

"ஏய்ய்ய்..!!!"

என்று இங்கிருந்தே அந்த அறையைப் பார்த்து கத்தினார்..!! இவருடைய குரல் கனகராஜனின் காதில் விழவில்லை போலிருக்கிறது.. எந்த தடையும் இல்லாமல் தனது எகத்தாளப் பேச்சை அவர் தொடர்ந்துகொண்டிருந்தார்..!!

"என்னய்யா.. வெளையாடுறீங்களா..?? எல்லாம் தண்ணி போட்டு வந்திருக்கீங்களா..??"

"ஐயோ.. இ..இல்ல ஸார்..!!"

"அப்புறம்..?? பேர் என்னன்னு கேட்டா இந்தாள் மீரான்றான்.. நீ என்னடான்னா மீரா இல்லைன்ற..??"

அன்புள்ள ராட்சசி - 11


 




அத்தியாயம் 20

தும்பைப்பூவின் வண்ணத்துடன் மிக தூய்மையாகவே காட்சியளித்தது அந்த அறை..!! திரும்புகிற பக்கம் எங்கெங்கிலும்.. வெண்ணிறமே பொங்கி வழிந்தது அந்த அறையில்..!! வெள்ளி நிலவை வெட்டிக்கொணர்ந்து.. பாலீஷிட்டு பதித்திட்டமாதிரி.. தளத்தில் அணிவகுத்திருந்த டைல்ஸ்..!! கறந்த பாலை நிறமியாக்கி.. பெயிண்ட் என்ற பெயரில் தடவினார்களோ என தடுமாறும் அளவிற்கு.. சுவற்றிலும் ஸீலிங்கிலுமான வர்ணப்பூச்சு..!! சிறிய அறைதான்.. அதன் பெரும்பான்மையான பரப்பு வெறும்பான்மையாகவே காட்சியளித்தது..!! ஓரமாக கிடந்த படுக்கையும், சாய்வாக நின்றிருந்த இருக்கையும்.. வெண்ணிற விரிப்பையே வெளிப்புறம் போர்த்தியிருந்தன..!! வெண்மையான வெளிச்சத்தை மட்டுமே கசிவேனென்று.. ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்தது மின்விளக்கொன்று..!! அந்த அறைக்குள் உலவித் திரிந்தால்.. உடைத்த தேங்காய்க்குள் ஊர்ந்து திரிகிற.. ஒரு கட்டெறும்பின் உணர்வு கிட்டுவது கட்டாயம்..!!

அறையின் நிறம் மட்டுமல்ல.. அதன் மையத்தில் அமர்ந்திருக்கிற.. மீராவுடைய அகத்தின் நிறமும் அஃதேதான்..!!

திரைச்சீலை விலகியிருந்த அறையின் ஜன்னல்.. கதிரவனின் வெளிச்சத்தையும், காலைநேர காற்றினையும்.. அறைக்குள் ஒருசேர அனுப்பிக்கொண்டிருந்தது..!! மீரா தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்..!! வலது கால் இடது தொடையின் மீது.. இடது கால் வலது தொடையின் மீது.. தளிர்ப்பாதங்கள் இரண்டும் தடம்புரண்டு மேலே பார்த்தன..!! முழங்கால் தரையை தீண்டியிருக்க.. முதுகுத்தண்டு விறைப்பாய் நின்றிருக்க.. மூக்கு சீராக மூச்சினை வெளியிட்டது..!! இமைகள் விழிகள் மீது முழுமையாய் கவிழ்ந்திருந்தன.. இரண்டு கைகளும் மார்பின் குறுக்கே மையமாய் குவிந்திருந்தன..!! குழைவான இடுப்பின் சதைப்பிதுக்கத்தில்.. துளிர்த்திருந்த சில வியர்வை முத்துக்கள்.. ஜன்னல் வெளிச்சத்துக்கு மின்னிக் கொண்டிருந்தன..!! புஜங்கள் அணையிட்ட நெஞ்சத்தடாகத்தில்.. பூத்திருந்த இரு தாமரை மொக்குகள்.. விடுகிற மூச்சுக்கு விரிந்து கொண்டிருந்தன..!!

அன்புள்ள ராட்சசி - 12


 




அத்தியாயம் 21

மனிதர்களை போல அவர்களுடைய மனதிற்கு ஒற்றை முகம் கிடையாது.. அது எப்போதும் பன்முகங்கள் கொண்டதாகவே இருக்கிறது.. அறுதியான ஒரு வரையறைக்குள் அகப்பட மறுக்கிறது..!! 'ஒருவன் மனது ஒன்பதடா.. அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா' என்று கவியரசர் சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரலாம்..!! பலதரப்பட்ட சூழ்நிலைகளில்.. பலவிதமான முகங்களை மனிதமனம் மாட்டிக்கொள்கிறது.. அது எல்லோருமே அறிந்த ஒன்றுதான்..!!

நான் இங்கே சொல்லவிருப்பது சற்று வித்தியாசமானது..!! எதிர்பாராத இக்கட்டான ஒற்றைச்சூழலில்கூட.. மனிதருடைய ஒற்றைமனம்.. இந்த மாதிரி பன்முகங்களை.. ஒரே நேரத்தில் வெளிக்காட்டக் கூடும்..!! இக்கட்டான ஒரு சூழ்நிலையில்.. நம்மில் எத்தனை பேரால் தெளிவாக சிந்திக்க முடிகிறது..?? ஒருமனதாக ஒரு முடிவெடுக்க தடுமாறுகிறோமே..?? ஏன் அப்படி..??

'மனம் என்பது மூளையில் எழுகிற எண்ணங்களின் தொகுப்புதான்' என்கிறது அறிவியல் ஆராய்ச்சி..!! எதிர்பாராத ஒரு நிகழ்வினால்.. எண்ணங்களில் ஏற்படுகிற குளறுபடியினால்.. மனம் ஒரே நேரத்தில் பலவித முகங்களை உடனுக்குடன் மாற்றிக்கொள்ளலாம்..!! தூரத்தில் அசோக்கை பார்க்க நேரிட்ட மீராவுக்கும் அதுதான் நேர்ந்தது..!!

பார்த்த விழிகள் பார்த்தபடியே இருந்தன.. ஜன்னல் கம்பிகளை பற்றிய விரல்கள் பற்றியபடியே இருந்தன.. மீராவுடைய உடலும் பார்வையும் உறைந்து போயிருக்க.. அவளுடைய உளமும் சிந்தனையும் உலுக்கிவிடப் பட்டிருந்தன..!! அடுக்கடுக்காய் பல குழப்பக் கேள்விகள் அவசரமாய் கிளம்பி.. அவளுடைய மனதின் மையத்தில் குவிய ஆரம்பித்தன..!!

அன்புள்ள ராட்சசி - 13


 




அத்தியாயம் 22

வடபழனி NGO காலனி மெயின் ரோட்..!! வளர்ந்து அடர்ந்திருந்த பச்சை மரங்கள்.. வழிநெடுக தார்ச்சாலைக்கு குடைவிரித்திருந்தன..!! கிளைகளையும், இலைகளையும் ஊடுருவ முடியாத சூரியக்கதிர்கள்.. செறிவற்ற வெளிச்சத்தையே செல்கிற பாதையில் தெளித்திருந்தன..!! மத்தியில் வெண்ணிறப்பட்டை இழைக்கப்பட்ட கருஞ்சாலையின் தேகம் எங்கும்.. மஞ்சள் நிறத்திலான இலைதழைகள் மண்டிப்போய் கிடந்தன..!! சன்னமாய் புகை துப்பியவாறே அசோக்கின் பைக்.. சரக்கென அச்சாலையில் சீறியபோது.. பதறிப்போன மஞ்சள் இலைகள்.. பறந்து சிதறி.. பாதையில் இருந்து விலகி வழிவிட்டன..!!

வண்டியின் வேகத்தை அதிகம் குறைக்காமல்.. வலதுபுறம் செல்கிற சாலையில் அசோக் திரும்பினான்..!! எதிர்பாராத விதமாய் ஒரு ஆட்டோ.. எதிர்ப்புறம் இருந்து வெளிப்படவும்.. ஷகிரா இடுப்பசைப்பது மாதிரியான ஒரு லாவகத்துடன்.. பைக்கை நெளித்து சுளித்து வளைத்து.. ஆட்டோவின் மூக்குரசி முத்தமிடுவதை இறுதி நொடியில் தவிர்த்தான்..!! சடனாக பிரேக்கிட்ட ஆட்டோ ட்ரைவர்.. சத்தமாய் உதிர்த்த கெட்ட வார்த்தை.. காற்றோடு கலந்து காதில் விழுவதற்குள்.. காத தூரம் பறந்திருந்தான்..!!

அடுத்த இரண்டாம் நிமிடத்தில்.. அசோக்கின் பைக் அந்த தெருவுக்குள் நுழைந்தது..!! அப்படி நுழைந்ததுமே.. அந்த தெருவில் நிலவிய ஒருவித அமைதியை.. அசோக்கால் உடனடியாக உணர முடிந்தது..!! வீதியின் இருபுறமும் கோடிகளை தின்று கொழுத்துப் போயிருந்த வீடுகள்..!! எல்லா வீடுகளுக்கு முன்பாகவும், ஏதாவது ஒரு காஸ்ட்லி கார் மினுமினுப்புடன் நின்றிருந்தது..!! அந்த வீடுகளை விடுத்து வெளிப்பட்டிருந்த மனித தலைகள்.. கேட்டுக்கருகே கொத்துக்கொத்தாய் குழுமியிருந்தன.. கிசுகிசுப்பான குரலில் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தன..!!

அன்புள்ள ராட்சசி - 14


 




அத்தியாயம் 23

மனித மனதில் ஒரு மாற்றத்தை விதைப்பதென்பது.. மலையைக் குடைந்து பாதை அமைப்பதற்கு சமானம்..!! அந்த மனம் அத்தனை நாளாய் நம்பியிருந்த சித்தாந்தங்கள்.. எல்லாவித நிகழ்விற்குமான அந்த மனதின் எதிர்வினை சிந்தனைகள்.. இயல்பான அதன் அணுகுமுறைகள்.. இறுகிப்போன அதன் குணநலன்கள்.. இவை எல்லாவற்றையும் தகர்த்து எறிந்தால் மட்டுமே.. எந்தவொரு ஒரு மனிதனின் மனதையும் மாற்றிவிடுகிற சூத்திரம் மட்டுப்படக்கூடும்..!! சாத்தியமான காரியமே எனினும்.. சாதாரணமான காரியம் என இயலாது..!!

கடினமான அந்த காரியத்தை, மிக எளிதாக செய்து முடிக்கிற ஒன்று.. அண்டத்தில் உண்டெங்கில், அதனை அன்பென்றுதான் சொல்ல வேண்டும்..!! ஒரு உயிர் இன்னொரு உயிர் மீது கொண்ட உறுதியான அன்பென்பது.. உன்னதமானது மட்டுமல்ல.. சக்தி வாய்ந்தது.. வலிமை கொண்டது.. அளப்பரிய ஆற்றல் படைத்தது..!! அன்பினை ஒரு வேதியியல் வினையூக்கியுடன் ஒப்பிடலாம்.. அது மனித மனதில் ரசாயன மாற்றத்தை விளைவிக்க வல்லது.. அந்த மாற்றம் நேர்மறையானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதிர்மறையான மாற்றமாகக்கூட இருக்கலாம்..!! அன்பு.. மனதை இளக, உருக செய்கிறது.. இறுக, உறைய வைக்கிறது.. மென்மையாக்குகிறது.. வன்மையாக்குகிறது.. மூர்க்கமாக்குகிறது.. சில சமயங்களில் முட்டாளாக்குகிறது..!! ஒரு வடிவத்தில் இருக்கிற மனதினை.. வேறொரு வடிவத்துக்கு சுலபமாக மாற்றுகிற பண்பு.. அன்பின் அனுகூலங்களில் ஒன்று..!!

'காதல் வீரனை கோழையாக்கும்.. கோழையை வீரனாக்கும்..' என்கிற பிரபலமான மேற்கோள் வாசகத்தில்.. காதல் என்ற சொல்லுக்கு பதிலாக, அன்பு என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்பது எனது அபிப்ராயம்.. நம்மூரில் காதல் என்கிற சொல், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அந்தரங்க அன்பை மட்டுமே குறிக்கிற சொல்லாக இருப்பதாலேயே இதை சொல்கிறேன்..!! எந்தவகை அன்புக்குமே மனிதமனத்தை மாற்றிவிடுகிற வல்லமையுண்டு.. சங்ககாலத்தில் முறத்தால் அடித்து புலியை விரட்டியவள் ஒரு தமிழ்த்தாய்தானே ஒழிய.. தமிழ்க்காதலி அல்ல..!!

அன்புள்ள ராட்சசி - 15


 




அத்தியாயம் 24

'கண்ணிழந்தான்.. பெற்றிழந்தான்.. எனவுழந்தான்..' என்கிற கம்பராமாயண வரிகள் கொண்டு.. அசோக்கின் மனநிலையை கொஞ்சமேனும் அளந்திட, அறிந்திட முயலுவோம்..!! கண்பார்வையற்ற மனிதவாழ்வு மிகவும் கொடுமையானதொரு வாழ்வுதானே.. கனவென்ற போலிமகிழ்ச்சி பெறவும் கொடுத்துவைத்திடாத வாழ்வுதானே..?? பிறவியிலிருந்தே பார்வையற்ற ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும்.. தொடுகிற பொருட்களின் தோற்றம் கண்டிட துடிக்கும் அவனது ஏக்கம் எப்படி இருக்கும்..?? துயரம்தானே..??

அதைவிட பெருந்துயரம் எது தெரியுமா..?? மண்ணில் ஜீவித்த நாள்முதலாய், கண்ணில் ஜீவனன்றி வாழும் ஒருவனுக்கு.. விழிகளில் ஒளி கொடுத்து.. வெளிச்ச வெள்ளத்தில் அவனை நனைத்து.. உலகின் அழகை அவனுக்கு உணர்த்தி.. வண்ணங்களின் அற்புதத்தை அக்கண்களில் வார்த்து.. கண்பார்வையின் அருமையை முழுதாக அறியவைத்து.. பிறந்ததன் பலனை அடைந்துவிட்டதாய் அவன் பறந்து திரிகையில்.. மீண்டும் அவனது பார்வையை பறித்து இருளில் தள்ளினால்.. அவனது மனநிலை எப்படி இருக்கும்..?? முன்பிருந்ததைவிட பெருந்துயரம்தானே..??

காதலும் கூட கண்பார்வை போன்றதுதான்.. அசோக்கின் நிலையும்கூட கிட்டத்தட்ட அத்தனை கொடிதுதான்..!! பெரியவன் ஆனதிலிருந்தே பெண் நட்பு அறியாதவன்.. காதலர்களுக்கு மத்தியிலே காலம் சென்றாலும், அவனுக்கென்று ஒரு காதல் அமையப் பெறாதவன்.. வெளியிலே வெறுப்பென்று நடித்து திரிந்தாலும், உள்ளுக்குள் காதலுக்காக உண்மையாய் ஏங்கியவன்..!! தேடியிருந்த தேவதையாய் மீரா அவன் வாழ்வில் வந்தாள்.. பெண்ணின் ஸ்பரிஸத்தை அவனுக்கு உணர்த்தினாள்.. காதலெனும் உன்னத உணர்வை அவனுக்குள் ஊற்றினாள்.. அந்த உணர்வு தந்த ஆனந்தத்தில் அவன் திளைத்துக் கொண்டிருக்கும்போதே.. கண்ணைப் பிடுங்கிப் போனது மாதிரி.. அவனது காதலைப் பறித்துச் சென்றால்..??

அன்புள்ள ராட்சசி - 16


 




அத்தியாயம் 27

இருட்டுக்குள் இப்போது மிக பிரகாசமாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. கூரையில் இருந்து கீழ்தொங்கிய மின்விளக்குகள் வீட்டுக்குள்ளே வெளிச்சத்தை கிளப்பின என்றால்.. தரையில் இருந்து மேற்கிளம்பிய குமிழ்விளக்கு கம்பங்கள் வீட்டுக்கு வெளியே ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன..!! வாயிற்கதவுக்கருகே ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்போடு சேர்த்து.. இப்போது மேலும் இரண்டு போலீஸ் ஜீப்புகள், ஒரு ஒழுங்கற்ற கோணங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.. அதில் ஒரு ஜீப்பின் நெற்றியில், சிவப்பு விளக்கு இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!! விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வெளியே குழுமியிருந்த ஜனங்களின் கண்களில்.. ஒருவித ஆர்வமும், மிரட்சியும் ஒருசேர காணக்கிடைத்தன..!! வீட்டை சுற்றி வளர்ந்திருந்த மரங்கள்.. சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து.. அசையக்கூட மனமின்றி அப்படியே உறைந்து போயிருந்தன..!!

வீட்டுக்குள்ளே.. காவல்துறையை சேர்ந்த கைரேகை மற்றும் தடவியல் குழுவினர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்..!! அவர்களிடம், ரெட்ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் மலரவன் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டும், உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டும்.. குற்றம் நடந்திருந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்..!! ஆதாரங்கள் என்ற பெயரில் வீட்டிலிருந்த சில பொருட்கள் சேகரிக்கப்பட்டன.. ரத்தத்தில் நனைந்திருந்த மாய கிருஷ்ணனின் சிலை, பாலித்தீன் கவருக்குள் பத்திரமாக்கப்பட்டது..!! அறையின் ஒருமூலையில்.. எச்சில் வடிகிற நாக்கை நீளமாக தொங்கப் போட்டுக்கொண்டு அந்த மோப்ப நாய்.. வீட்டுக்குள் நுழைந்ததுமே வீராவேசமாக பின்பக்கம் ஓடி.. ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு சீறிப்பாய்ந்து.. பிறகு ஒரு புதரைக் கண்டதும் சிறுநீர் பெய்துவிட்டு.. மீண்டும் வீட்டுக்குள் வந்து ஓரமாக செட்டில் ஆகியிருந்தது..!!

உயிரற்ற உடல்கள் பிரேத பரிசோதனைக்கென மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க.. அவை விழுந்து கிடந்த இடங்கள் சாக்பீஸால் மார்க் செய்யப்பட்டிருந்தன..!! எப்போதோ உறைந்து போயிருந்த கருஞ்சிவப்பு ரத்தச்சேற்றில்.. இப்போது ஈக்கள் ரீங்காரமிட்டபடி வந்தமர்ந்து, மொய்க்க ஆரம்பித்திருந்தன..!! காற்றில்கூட குருதியின் நெடி கலந்துபோய்.. சுவாசிப்பவர்களின் முகத்தை சற்றே சுளிக்க வைத்தது..!!

அன்புள்ள ராட்சசி - 17







அத்தியாயம் 30

காதலியின் புகைப்படத்தை கையில் ஏந்தியிருந்த அசோக்.. இதயத்தை ஆட்கொண்ட அந்த இன்ப அதிர்ச்சியில்.. சில வினாடிகள் சிலை போலவே உறைந்திருந்தான்..!! வெகுதூரம் ஓடிக்களைத்தவன் போல அவனுக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது.. வெடவெடத்த விரல்களால் புகைப்படத்தை பற்ற கடினமாயிருந்தது..!! உடலெல்லாம் ஜிலீரென்று ஒரு சிலிர்ப்பு.. உள்ளமெல்லாம் ஜிவ்வென்று ஒரு பூரிப்பு..!! சில வினாடிகள்தான்.. உடனடியாய் அவனை ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது..!!

"மம்மிஈஈஈஈ..!!" என்று கத்திக்கொண்டே உள்ளறைக்கு ஓடினான்.

"என்னடா..??" பாரதி கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

"மீ..மீரா.. மீரா மம்மி..!!" நடுநடுங்கிய கையிலிருந்த புகைப்படத்தை அவளிடம் நீட்டினான்.

"மீ..மீராவா..??" புகைப்படத்தை கையில் வாங்கிப் பார்த்த பாரதிக்கு எதுவும் புரியவில்லை.

"இ..இந்த ஃபோட்டோ.. இ..இது.. இது மீரா மம்மி.. இ..இது.. எ..என் மீராதான்.. ச..சந்தேகமே இல்ல..!!" உள்ளத்தில் இருந்த தவிப்பில் உதடுகள் படபடக்க, வார்த்தைகள் தெளிவாக வெளிவர மறுத்தன.

"ஓ..!! இ..இது.. இது எப்படி..??" பாரதி சந்தோஷமும், குழப்பமுமாய் மகனை ஏறிட்டாள்.

"நா..நான்.. நான் உன்கிட்ட சொல்லிருக்கேன்ல.. அ..அந்தப்பொண்ணு.."

"எந்தப்பொண்ணு..??"

"அ..அதான் மம்மி.. அந்த மும்தாஜ்.. எ..எனக்கு யோகா சொல்லி தந்த பொண்ணு..!!"

"ஆமாம்..!!"

"அ..அந்தப்பொண்ணுதான்.. அ..அவ... அவங்க.. படிக்கிறதுக்கு எனக்கு ஒரு புக் தந்தாங்க மம்மி.. அ..அந்த புக்குக்குள்ளதான் இந்த ஃபோட்டோ இருந்தது..!!"

"அ..அப்படினா..??"

"ஆமாம் மம்மி..!!! அ..அந்த மும்தாஜ்க்கு மீரா பத்தி தெரிஞ்சிருக்கணும்.. அவங்கட்ட விசாரிச்சா மீராவை எப்டியாவது கண்டுபுடிச்சுடலாம்..!! யெஸ்.. யெஸ்.. யெஸ்..!!!!"

ஐ ஹேட் யூ, பட்.. 1








இது ரொம்ப சிம்பிளான, கொஞ்சம் ஜாலியான கதைதான்.. படிக்கிறவங்களுக்கு நெறைய மனஅழுத்தம் தராம, இலகுவான உணர்வை கொடுக்குற விதத்துலதான் கதையை எழுத ப்ளான் பண்ணிருக்கேன்.. ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே சின்னப்புள்ளத்தனமான கேரக்டர்ஸ்.. அவங்களுக்கு இடையிலான நட்பு, பிரச்னை, சீண்டல், காதல், மோதல்.. இதுதான் மொத்தக்கதையுமே..!! கதைன்னு பாத்தா ரெண்டு வரில சுருக்கமா சொல்லிறலாம்.. அதை நான் நீட்டி முழக்கி சொல்லப்போறேன்..!! உங்களுக்கு எந்த அளவுக்கு புடிக்குதுன்னு பாக்கலாம்..!!




அத்தியாயம் 1

"One of the most commonly known cardiac surgery procedures is the coronary artery bypass graft, also known as bypass surgery..!!"

ஸ்வர்ணா டிவியில் 'ஆரோக்ய ஜீவனா' ப்ரோக்ராம் டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டிருந்தது. காலங்காத்தாலேயே கார்டியாக் சர்ஜரி பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின்னணியில் குரல் ஒலிக்க, திரையில் நிஜமான அறுவை சிகிச்சையையே க்ளோசப்பில் காட்டிக் கொண்டிருந்தார்கள். பச்சை நிற உடை அணிந்திருந்த பேஷன்ட், மார்பு கிழிக்கப்பட்டு மல்லாந்திருந்தார். சுற்றி நின்றிருந்த மூன்று நான்கு சர்ஜன்கள், அவருடைய ஹார்ட்டுக்குள் கை விட்டு நோண்டிக் கொண்டிருந்தார்கள். குருதியில் குளித்திருந்த இருதயம் படக் படக்கென துடித்துக் கொண்டு கிடக்க, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலாலான ஊசிகளையும், கிடுக்கிகளையும் தாங்கிய கைகள், கவனமாக அந்த இருதயத்தை குத்தி குத்தி பார்த்துக் கொண்டிருந்தன.

விரிந்த விழிகளும், திறந்த வாயுமாக ப்ரியா டிவியையே வெறித்துக் கொண்டிருந்தாள். காதுகளை கூர்மையாக்கி, வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளை கவனமாக கிரஹித்துக் கொண்டிருந்தாள். வாய்க்குள் இருந்த உப்புமாவை அவ்வப்போது அசை போடுவதும், அப்புறம் அசை போட்டதை விழுங்க மறந்து அப்படியே ஃப்ரீஸ் ஆவதுமாக இருந்தாள். டிவி நிகழ்ச்சியோடு அந்த அளவுக்கு ஒன்றிப் போயிருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த சோபாவிலேயே அவளுக்கு அருகே வரதராஜன் அமர்ந்திருந்தார். சர்க்கரை தோய்க்கப்பட்ட உப்புமா தாங்கிய கையை மகளுடைய உதட்டுக்கருகே நீட்டியவாறு உறைந்திருந்தார். அரைத்ததை விழுங்கிவிட்டு அவள் மறுபடியும் எப்போது வாய் திறப்பாள் என்று, அவளுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகளுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவர், அவளுடைய இந்த குழந்தைத்தனமான செய்கையை கண்டு சற்றே நொந்து போயிருந்தார். மகளுடைய முகத்தையும், டிவி திரையையும் மாறி மாறி பார்த்தவர், இப்போது கெஞ்சலான குரலில் கேட்டார்.

ஐ ஹேட் யூ, பட்.. 2







அத்தியாயம் 4

"புதுப் ப்ராஜெக்ட்ன்றது, புதுப் பொண்டாட்டி மாதிரி ஃபோக்ஸ்.. ஆரம்பத்துல விட்டுட்டோம்னு வச்சுக்கோங்க.. அப்புறம் கடைசி வரை புடிக்கவே முடியாது..!!"

இது அன்றைய மீட்டிங்கில் திரு. பாலகணேஷ் அவர்கள் தனது திருவாய் மலர்ந்து அருளிய தத்துவம்..!! அவர் எப்போதும் இப்படித்தான். எதற்கெடுத்தாலும் ஏதாவது புதிது புதிதாக உதாரணம் யோசிப்பார். குப்புறப் படுத்தா.. மல்லாக்கப் படுத்தா.. என்று தெரியவில்லை. பெண்கள், பெண்டாட்டி, காதல், கல்யாணம்.. இந்த நான்கு விஷயங்களில் ஒன்றைத்தான் உதாரணங்கள் சொல்ல தேர்ந்தெடுப்பார். கழுத்தில் தொங்குகிற ஐடி கார்டையும், கல்யாணத்தில் கட்டுகிற தாலி கயிறையும் கம்பேர் செய்வார். லைசென்ஸ் என்பார். பவர்ஃபுல் என்பார். பட் டேஞ்சரஸ் என்பார். ஹேண்டில் வித் கேர் என்பார்.

சில நேரங்களில் அவருடைய அசட்டுத்தனமான கம்பேரிசன்கள் அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்கும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் அலட்டிக்கொள்வது இல்லை.

"ச்ச.. எனக்கு வாச்ச பொண்டாட்டியும் அப்படித்தான் இருக்குறா.. க்ளையன்ட்டும் அப்படித்தான் இருக்கானுக அசோக்..!!" என்பார் திடீரென.

"ஏன் பாலா.. என்னாச்சு..??" என்று அசோக் சீரியஸாக கேட்பான்.

"என்ன பண்ணினாலும் ரெண்டு பெரும் சாடிஸ்ஃபையே ஆக மாட்டேன்றாங்க..!!"

என்று எஸ்.ஜே.சூர்யாத்தனமாய் ஒரு ஜோக் அடித்து விட்டு இளிப்பார். 'ஐயே..!!' என்று மனசுக்குள் தலையில் அடித்துக் கொள்வான் அசோக்.

ஆனால் அன்று அவர் மீட்டிங்கில் சொன்ன தத்துவத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எந்த ப்ராஜக்ட்டுக்கும் ஆரம்ப கட்டம் மிக முக்கியம். அந்தக்கட்டத்தில் ஸ்லிப் ஆகிவிட்டால், அப்புறம் எல்லாக்கட்டமுமே 'கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல..' கணக்காக மாறிவிடும். புதுமனைவியின் விருப்பு, வெறுப்புகளை மனம் விட்டு பேசி தெரிந்து கொள்வது போல, க்ளையன்ட்டின் தேவை, ஆசைகளை மீட்டிங் போட்டு அறிந்து கொள்வது அவசியம்.

'எங்களிடம் வேலை பார்ப்பவர்களின் சம்பளக்கணக்கை நிர்வகிக்கிற மாதிரி ஒரு மென்பொருள் வேண்டும்..!!' என்று க்ளையன்ட் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாதிரி ஒரு மென்பொருளை தயாரித்து கொடுப்பதுதான் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனிகளின் வேலை. அதைத்தான் ப்ராஜக்ட் என்கிறார்கள். 'வாழ்க்கைன்றது ஒரு வட்டம்டா..!!' என்று டாக்டர் ஒருவர் சொல்லியிருக்கிறார் அல்லவா..?? அதுபோல மென்பொருள் அபிவிருத்திக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. அதை மென்பொருள் அபிவிருத்தி வாழ்க்கை சக்கரம் என்று தமிழ்ப்படுத்தலாம். அந்த சக்கரத்திற்கு நிறைய வடிவங்கள் இருந்தாலும், அதில் வருகிற முக்கியமான கட்டங்கள் என்றும் மாறாது. அவை மூன்று கட்டங்கள்..!!

ஐ ஹேட் யூ, பட்.. 3


 




அத்தியாயம் 7

புகழ்ச்சியை 'போதை' என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. கண்ணை மறைக்க கூடியது அது. புத்தியை மழுங்கடிக்க செய்வது அது. ப்ரியாவுக்கு தன்னை யாராவது புகழ்ந்தால் மிகவும் பிடிக்கும். அடுத்தவர்கள் தன்னை பற்றி பெருமையாக பேசும்போது அவளுடய மனதிலும், உடலிலும் பரவுகிற அந்த பரவசம் பிடிக்கும். சிறியதொரு பாராட்டுக்கே சிட்டென விண்ணில் பறக்க ஆரம்பித்து விடுவாள். ஆயிரம் பேர் கூடியுள்ள அரங்கில், அத்தனை பெரும் அவளுக்காக கைகள் தட்டினால் என்ன ஆவாள்..?? அருகில் இருக்கும் அசோக்கை மறந்து போவாள்..!!

'தான்' என்ற எண்ணம் தகாத கிருமிக்கு ஒப்பானது. அன்பென்ற தூய்மையான பாலை திரித்து விட கூடியது அது. வலுவான உறவில் கூட விரிசலை ஏற்படுத்தி விடும் வல்லமை கொண்டது அது. அந்த கைதட்டல்கள் எல்லாம் 'தனக்கு கிடைக்க வேண்டியவை' என்ற எண்ணம் அசோக்கின் மனதுக்குள் கிருமியென கிளம்பி, அவன் ப்ரியா மீது வைத்திருந்த அன்பென்ற பாலில் சென்று விழுந்தது. தன்னுடன் இருப்பவர்கள் மத்தியில் தன் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்று நினைப்பவன் அவன். தன்னை சுற்றி நடக்கிற சம்பவங்கள் பிடிக்காத பாதையில் பயணிக்கையில், தான் விரும்புகிற பாதைக்கு திருப்பிவிட துடிப்பவன். தனது உழைப்புக்கு மற்றொருவருக்கு பெரும்பாராட்டு என்ற அதிர்வு.. அத்தனை நாளாய் தனது கைக்குள் இருந்த ப்ரியா, தன்னை மீறி செல்வது போன்றதொரு உணர்வு.. இவைகளுடன் அவள் இவனை கண்டுகொள்ளவில்லை என்கிற நினைவும் சேர்ந்து கொண்டால் என்ன செய்வான்..?? அவளை விட்டு விலகி நடப்பான்..!!

விலகி நடந்த அசோக், மீட்டிங் ஹாலில் இருந்து வெளிப்பட்டதுமே விடுவிடுவென சென்று தனது க்யூபிக்கலில் அமர்ந்து கொண்டான். இன்னும் மீட்டிங் முடிந்து யாரும் திரும்பியிருக்காத நிலையில், அந்த தளத்தில் அவன் மட்டுமே இப்போது தனித்திருந்தான். சிஸ்டம் முன் அமர்ந்து கீ போர்டில் எதையோ நோக்கமில்லாமல் தட்டினான். அவனுடைய மனதை ஒரு இனம்புரியாத அழுத்தம் நிரப்பியிருந்தது. ஐந்தரை வருடங்களாக ப்ரியாவுடனான நட்பில், இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையை அவன் இப்போதுதான் சந்திக்கிறான். இந்த மாதிரியான சூழ்நிலைக்கு அவன் தயாராயிருக்கவில்லை. எப்படி இதை கடந்து செல்வது என்றும் அவன் புத்திக்கு பிடிபடவில்லை.

ஐ ஹேட் யூ, பட்.. 4



 




அத்தியாயம் 10

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று சொல்வார்கள் இல்லையா..?? அடைகிற அவமானம் கூட சில நேரங்களில் அத்தகைய உதவியை செய்யக்கூடும்..!! யாருக்குமே தன்மானம் என்பது மிகவும் உன்னதமான விஷயம்..!! அந்த தன்மானத்தை சீண்டுகிற மாதிரியான சம்பவம் நடக்கிறபோது.. அழுகை வரலாம்.. ஆத்திரம் வரலாம்.. ஆனால் அதையெல்லாம் விட தனது நிலையை உயர்த்திக் காட்டவேண்டும் என்ற ஒரு வேகம் வர வேண்டும்..!! ஆன்சைட் சென்று அவமானப்பட்டு திரும்பியபோது கோவிந்திற்கு ஒரு வேகம் வந்ததே.. தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று.. அது மாதிரி..!! அத்தகைய ஒரு வேகத்தையே அசோக் அள்ளி வீசிய வார்த்தைகள் ப்ரியாவுக்குள்ளும் ஏற்படுத்தின..!!

அதன் பிறகு வந்த நாட்களில் அந்த வேகமே ப்ரியாவை உந்தித் தள்ளியது. தனது திறமையால் டெக் லீட் பதவி தன்னை தேடி வரவில்லை என்பதை அவள் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தாள். ஆனால் இப்போது அந்த பதவி தானாக வந்த பிறகாவது, அதற்கேற்ற திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம், எல்லாவற்றையும் சரிக்கட்டிவிட முடியும் என்றே நம்பினாள். கம்யூனிகேஷன் ஸ்கில், பிரசன்டேஷன் ஸ்கில் போன்ற சாஃப்ட் ஸ்கில்ஸ்களில் அவள் எப்போதுமே கில்லாடிதான். டெக்னிகல் ஸ்கில்ஸ்தான் அவளது பலவீனம். அந்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் அவளது முதல் குறிக்கோளாக இருந்தது.

ப்ரியா நினைத்தை முடிக்க நிறைய முயற்சிகள் எடுத்துக்கொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும். தான் எந்தெந்த டெக்னாலஜிகளில் வீக் என்பதை முதலில் பட்டியல் இட்டுக் கொண்டாள். அவர்கள் கம்பனியில் அந்த டெக்னாலஜிகளில் எங்காவது ட்ரெயினிங் நடந்தால், தேடிப்பிடித்து தன்னை நாமினேட் செய்து கொண்டாள். மிகவும் சின்சியராக அந்த ட்ரெயினிங் எல்லாம் அட்டன்ட் செய்தாள். சில ஆன்லைன் டெக்னாலஜி ஃபோரம்களில் உறுப்பினர் ஆகிக்கொண்டாள். அங்கு நடக்கிற விவாதங்களை ஒதுங்கி நின்று கவனித்தாள். நிறைய கற்றுக்கொண்டாள்.. சில புரியாத விஷயங்களை மனப்பாடம் செய்தாவது மனதில் நிறுத்திக் கொண்டாள்..!!

ஐ ஹேட் யூ, பட்.. 5







அத்தியாயம் 14

அசோக்கிற்கு திகில் படங்கள் பார்ப்பதென்றால் அலாதி ப்ரியம்..!! அதுவும் நள்ளிரவில்.. கும்மிருட்டுக்குள்.. தனியாக அமர்ந்து பார்க்கவேண்டும்..!! தனது லேப்டாப்பில்.. ஆங்கில மொழியில் வெளியான பேய்ப்படம் ஒன்றை ஓட விட்டு.. காதுக்கு ஹெட்ஃபோன் கொடுத்து.. கண்களிலும் இதயத்திலும் பயம் நிரம்பி வழிய வழிய.. ஒருவித பதைபதைப்புடன் பார்க்கவேண்டும்.. பார்க்கும்போதே இதயம் படக் படக்கென பதறி துடிக்கவேண்டும்.. அதில் அவனுக்கு ஒரு ஆனந்தம்..!!

அன்றும் அந்த மாதிரிதான்.. நேரம் நள்ளிரவு 12 மணியை தாண்டியிருந்தது..!! அசோக் தனது படுக்கையில் கால்களை இறுக்க கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்பிருந்த லேப்டாப்பில் புதிதாக வெளியாயிருந்த ஒரு ஆங்கில பேய்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அறையின் இரவு விளக்கு கூட அணைக்கப்பட்டிருக்க, லேப்டாப் மட்டுமே செவ்வக வடிவத்தில் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. படம் முழுக்கவே அவ்வப்போது வந்த பயமுறுத்தும் காட்சிகளால் அசோக் திகிலடைந்து போயிருந்தான். இப்போது படத்தின் க்ளைமாக்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. பார்ப்பவர்களை உச்சபட்சமாய் பயமுறுத்தி பார்க்கிற படலம்..!!

இருண்டு போன பேய் பங்களா ஒன்றில் தனியாக மாட்டிக்கொண்ட கதாநாயகன், ஒரு அறைக்குள் இருந்து வினோத ஒலி கிளம்புவதை கேட்கிறான். சுற்றிலும் இருள் மண்டிக்கிடக்க, கையில் இருக்கும் ஒரு சிறிய விளக்குடன் அந்த அறையை நோக்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிறான். சிறு ஓசை கூட இல்லாமல் ஒரே நிசப்தமாய் காட்சி நகர, அசோக் அந்த காட்சியுடன் மிகவும் ஒன்றிப்போய் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விழிகள் விரிந்து போய் லேப்டாப்பை வெறித்துக் கொண்டிருக்க, அவனது இதயம் சுருங்கி விரியும் சப்தத்தை கூட அவனால் தெளிவாக கேட்க முடிந்தது. அப்போதுதான் திடீரென அவனுடைய முதுகுப்பக்கம் கிடந்த செல்போன் வீறிட்டது..!!

ஐ ஹேட் யூ, பட்.. 6







அத்தியாயம் 18

காதல் வயப்படுதல் யாருக்கும் எளிதுதான்..!! 'எனக்கு சொந்தமான உயிர்' என்கிற மாதிரியான உணர்வு கிளம்புகிறார்போல.. எதிர்பாலர் ஒருவரை கண்டுவிட்டால்.. உள்ளம் காதலிக்க ஆரம்பித்து விடுகிறது..!! இனி மீதம் உள்ள வாழ்க்கையை இவருடன் கழித்தால்.. இன்பத்தில் தினம் திளைக்கலாமே என்று கனவு காண ஆரம்பித்து விடுகிறது..!! அவ்வாறு கனவு காணுதலை போல.. அந்த காதலை உரைத்தல் அவ்வளவு எளிதல்ல..!! மனதில் உள்ள காதலை உரியவரிடம் உரைக்கவே.. ஒரு முரட்டு தைரியமோ.. அல்லது ஒரு அசட்டு தைரியமோ வேண்டும்..!!

காதலை சொல்லும் தைரியம் மட்டுமே அந்த காதலின் வெற்றிக்கு போதாது.. அதை சொல்லுகிற விதமும் மிக மிக முக்கியம்..!! முறைப்படி உரைக்க தவறிய காதலர்களால்.. முறிந்து போன காதல்களும் நிறைய உண்டு..!!

தனது காதலை அசோக்கிடம் சொல்லிவிடவேண்டும் என்ற தைரியம் ப்ரியாவுக்கு வந்திருந்தது.. அதை சொல்கிற விதம் பற்றிதான் இப்போது அவளது கவலை இருந்தது..!! ஆபீசுக்கு வந்து அசோக்கிற்காக காத்திருந்தவள்.. கைப்பை திறந்து கண்ணாடி எடுத்து.. அதில் தனது முகத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டாள்.. நெற்றியில் வந்து விழுந்திருந்த ஒற்றை கூந்தல் கற்றையை ஓரமாக ஒதுக்கி விட்டாள்..!! உபயோகிக்கப் போகிற வார்த்தைகளை சற்றே உற்று ஆராய்ந்தாள்.. 'மனசுன்னு சொல்லலாமா.. இதயம்னு சொல்லலாமா..?? எது எஃபக்டிவா இருக்கும்..??'

ஐ ஹேட் யூ, பட்.. 7







அத்தியாயம் 21

நீங்கள் அன்பு கொண்டிருப்பவரை தன்முனைப்புடன் அணுகுவது.. அளவற்ற வேதனையையே அள்ளித்தரும்.. அவருக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் சேர்த்து..!! தான் காதலிப்பவருக்கு சிறு கஷ்டம் நேர்ந்தாலே இதயம் பதைபதைத்து போகிறது.. கட்டுப்பாடின்றியே கண்கள் நீரை உகுக்க ஆரம்பிக்கின்றன.. அன்று நேத்ரா அழுதாளே.. அது மாதிரி..!! காய்ச்சலில் படுத்திருக்கும் காதலனுக்காவே நேத்ரா அந்த மாதிரி உருகிப் போனாள் என்றால்.. விபத்தில் காயம்பட்டு வீழ்ந்திருக்கும் காதலனை எண்ணி ப்ரியா எந்த மாதிரி உடைந்து போயிருப்பாள்..?? அதுவும் அந்த விபத்திற்கு காரணமே அவள்தான் என்று உணர நேருகையில்..!! அசோக்குடைய உடலில் பட்ட காயத்தின் அளவை விட.. ப்ரியாவின் உள்ளத்தில் ஏற்பட்ட காயத்தின் அளவுதான் பெரிதாக இருந்தது..!!

இதயத்தில் இடி விழுந்த மாதிரி இருக்க.. இரு கண்களும் இருட்டிக்கொண்டு வர.. மயங்கி சரிந்து.. சேரை தள்ளிவிட்டவாறு.. தரையில் வீழ்ந்தாள் ப்ரியா..!! அவளுடைய அறைக்கு மிக அருகில் அமர்ந்து வேலை பார்ப்பது கவிதாதான். அறைக்குள் 'தட்..!!!' என்று சேர் கவிழும் சப்தம் கேட்டதுமே படக்கென்று எழுந்து பார்த்தாள். ஒருவித பதட்டத்துடனே அறைக்குள் நுழைந்தவள், உள்ளே மயக்கமுற்று கிடந்த ப்ரியாவை காண நேரிட்டதும், அலறியே விட்டாள். கவிதாவின் அலறலை கேட்டு அனைவருமே எழுந்து ஓடி வந்தனர். அவசரம் தொற்றிக்கொன்றவர்களாய் ப்ரியாவின் மயக்கத்தை தெளிய வைத்தனர்.

கண் விழித்த ப்ரியா கண்ணீருடனே விபத்து பற்றிய விஷயத்தை எல்லோருக்கும் தெரிவித்தாள். பதறிப்போன ஹரி உடனே அசோக்கின் வீட்டிற்கு கால் செய்து விபரம் சொன்னான். கோவிந்த் பாலாவின் அறைக்கு ஓடி அவருடைய காரை இரவல் வாங்கி வந்தான். டீமில் இருக்கும் ஐந்து பேருமே அசோக்கை காண ஆபீசில் இருந்து பரபரப்பாய் காரில் விரைந்தனர். வழிநெடுக ப்ரியா புலம்பிக்கொண்டே வந்தாள்.

ஐ ஹேட் யூ, பட்.. 8







அத்தியாயம் 24

நீண்ட நாட்களுக்கு அப்புறம் அலுவலகத்துக்கு சென்றாலும், அன்றாட வேலைகளில் அசோக்கால் எளிதாக தன்னை பொருத்திக்கொள்ள முடிந்தது. சென்ற முதல் நாளே சுறுசுறுப்பாக தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான். அவனுக்கும் ப்ரியாவுக்குமான காதலும், ஊடலும் டீமில் எல்லோருக்கும் அரசால் புரசலாக தெரிந்து போனது. அதை வைத்தே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அசோக்கையும் ப்ரியாவையும் காலை வாறுவது, அனைவருக்கும் ஒரு வழக்கமாகிப் போனது.

தினமும் காலையில் அவர்களுக்கு டீம் மீட்டிங் இருக்கும். அன்றைய தினத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக.. அன்று செய்யவேண்டிய வேலைகள் பற்றி கூடிப் பேசி கொள்வார்கள்..!! ஒருநாள்.. மீட்டிங் முடிந்து.. எல்லோரும் டிஸ்பர்ஸ் ஆக..

"அசோக்.. நீ மட்டும் இரு.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!!"

என்று அலுவல் சம்பந்தமாக ஏதோ பேசத்தான், ப்ரியா அவ்வாறு இயல்பாக சொன்னாள். ஆனால் டீமில் அனைவரும் மனதுக்குள்ளேயே ஒரு கற்பனையை ஓட்டியவர்களாய்.. 'ஹ்ஹ்ம்ம்ம்..' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே கலைந்து சென்றார்கள். 'நடத்துங்க.. நடத்துங்க..!!' என்று முனுமுனுத்தவாறே, அறையை விட்டு வெளியேறினார்கள். கடைசியாக சென்ற ஹரி மட்டும் கொஞ்சம் அதிகப்படியாய்..

"கம்பனி மீட்டிங் ரூமை.. கடலை போடுற சேட்டிங் ரூமா மாத்திட்டீங்க.. ஹ்ம்ம்... நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா.. நல்லா வருவீங்க..!!" என்று கமென்ட் அடித்தான்.

"டேய்.. மூடிட்டு போடா..!!" என்று அவனை பார்த்து கடுப்பாக கத்தியது ப்ரியாவேதான்.

ஆண்மை தவறேல் - 1







மீண்டும் ஒரு சிம்பிளான கதையை கையில் எடுத்திருக்கிறேன். கதை சொல்லும் விதத்தையும், இந்தக்கதைக்காக நான் உருவாக்கிய சில கேரக்டர்களையும் நம்பியே இந்தக்கதையை ஆரம்பிக்கிறேன். எது ஆண்மை..? எது ஆண்பிள்ளைத்தனம்..? என்பது பற்றி என்னுடைய கருத்தை இந்தக்கதையில் சொல்ல கொஞ்சம் முயற்சிக்கிறேன். கதை சற்று நிதானமாகவே நகரும். உங்களுடைய பொறுமைக்கு பெரும் சோதனை காத்திருக்கிறது. என்னுடைய முயற்சிகள் அனைத்தையும் இதுவரை உற்சாகப்படுத்திய உங்களிடம் இருந்து, இந்த முயற்சிக்கும் அத்தகைய உற்சாகத்தை எதிர்பார்த்து, இந்தக்கதையை ஆரம்பிக்கிறேன். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்


அத்தியாயம் 1

அதிகாலை இருளில் அந்த இடம் தெப்பலாக நனைந்திருந்தது. நேரம் அப்போது 4.30..!! நான்கு புறமும் இரும்புக்கம்பி வேலிகளால் சூழப்பட்ட அந்தக் கட்டிடம், அந்த அதிகாலை இருளுக்குள் அமைதியாக நின்றிருந்தது. நான்கு அடுக்குகள் கொண்ட.. அகலமாய் விரிந்திருந்த.. பிரம்மாண்டமான கட்டிடம்..!! கட்டிடத்தை சுற்றிலும் உயரம் உயரமாய் வளர்ந்திருந்த பச்சை பசேல் மரங்கள், இப்போது கரிய நிறத்தில் காட்சியளித்தன.. காற்றுக்கு மெல்ல தலையசைத்துக் கொண்டிருந்தன..!!

அது ஒரு மாணவர் விடுதி.. கோவையில் இருக்கும் ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான மாணவர் விடுதி..!! மாணவர்கள் தங்கியிருந்த அறைகள் எல்லாம் இந்த நேரத்தில், விளக்குகள் அணைக்கப்பட்டு இருண்டிருந்தன. கேட்டுக்கு இருபுறமும் நின்றிருந்த உயரமான ஸ்டீல் போஸ்டுகளில் மட்டும் இரண்டு குழல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விளக்குகள் உமிழ்ந்த வெள்ளை நிற வெளிச்சத்தின் அடியில், வாட்ச்மேன் வாய் பிளந்தவாறு சேரில் உறைந்திருந்தான்.

கட்டிடத்தின் நான்கு அடுக்குகளிலும் தெரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட இருண்ட ஜன்னல்களில், ஒன்று மட்டும் இப்போது பளிச்சென வெளிச்சமாய் ஒளிர்ந்தது. விளக்கினை உயிர்ப்பித்த அசோக், உடனே கண்களை இறுக்கி மூடிக் கொண்டான். திடீர் வெளிச்சத்துக்கு கூசியதால், அவன் கண்களை மூடிக்கொள்ளவில்லை. அவனுடைய அறையின் சுவர் எங்கிலும் ஆபாச சித்திரங்கள் ஒட்டப் பட்டிருக்கும். அரைகுறை உடைகளோடு.. அளவுக்கு மீறி வளர்ந்திருக்கும் தங்களுடைய அங்கங்களை காட்டியவாறு.. பெண்கள் அந்த சித்திரங்களில் சிரிப்பார்கள். காலையில் எழுந்ததுமே அந்த ஆபாசத்தை காணக் கண்கூசிதான் அசோக் விழிகளை அவ்வாறு மூடிக்கொண்டான். இது தினமும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.

கண்களை மூடிக்கொண்டவன், இரண்டு கைகளையும் முன்புறமாக நீட்டி.. சுவரையும், சுவரோடு பொருந்தியிருந்த அலமாரியையும் தடவி தடவியே.. அறையின் அடுத்த மூலையில் இருந்த அந்த டேபிளை அடைந்தான். அதன் மீதிருந்த அவனது பெட்டியை திறந்தான். உள்ளே கைவிட்டு தன் மூக்கு கண்ணாடியை தேடி அணிந்து கொண்டான். அப்புறம் தன் இமைகளை மெல்ல பிரித்தான். பெட்டியின் உட்புறமாக ஒட்டப்பட்டிருந்த விநாயகரின் படத்தில் கண் விழித்தான்.

ஆண்மை தவறேல் - 2







அத்தியாயம் 4

அன்றிலிருந்து அடுத்த ஆறு வருடங்களுக்கு அசோக்கின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை, இந்த அத்தியாயத்தில் பரபரவென ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்யப் போகிறேன். இந்த அத்தியாயம் முடிகையில், அந்த ஆறு வருடங்களில் அசோக்கின் மாற்றம் பற்றியும், அவனுடைய குணங்கள் பற்றியும் உங்களால் தெளிவாக ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நம்புகிறேன். ஓகே.. லெட்ஸ் ஸ்டார்ட்.. எல்லோரும் சீட் பெல்ட் மாட்டிக் கொள்ளுங்கள்..!! ஹிஹி..!!

அசோக்கும் புருஷோத்தமனும், குனியமுத்தூரில் இருக்கும் அந்த ஒதுக்குப்புறமான வீட்டுக்குள் நுழைந்தார்கள். 'இவன் என் ஃப்ரண்ட் அசோக்' என்று புருஷோத்தமன் அறிமுகம் செய்து வைத்ததும்.. கருத்த மலைப்பாம்புக்கு கைகால் முளைத்த மாதிரி இருந்த அந்த பெண்மணி.. தனது கனத்த மார்புகள் நசுங்க அசோக்கை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..!! அசோக்கிற்கு அனகோண்டாவின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட மாதிரியான ஒரு உணர்வு..!!

நாலைந்து பெண்கள் வந்து வரிசையில் நிற்க.. 'யாருப்பா வேணும் உனக்கு..?' என்று அந்த பெண்மணி கேட்க.. 'இதுல யாருக்கு நெறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு..?' என்று கேட்டு அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தான்..!! 'இங்க வந்து நெறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற பொம்பளையை கேட்ட மொத ஆள் நீதாண்டா..' என்று புருஷோத்தமன் நக்கலடித்தான்.

'இதுதான் உனக்கு ஃபர்ஸ்ட் டைமா..?' சிவப்பாகவும், களையாகவும் இருந்த அந்த முப்பத்திரண்டு வயது பெண்.. தனது ப்ளவுசின் மூன்றாவது கொக்கியை நீக்கிக்கொண்டே கேட்க.. 'இல்ல.. டிராயிங்ல பாத்திருக்கேன்..' என்று அந்தப்பெண்ணின் கழுத்துக்கு கீழே பார்த்தவாறே சொன்னான் அசோக்..!! 'அட.. நான் பாக்குறதை பத்தி கேக்கலைப்பா..!!' அந்தப்பெண் சலிப்பாக சொல்லிக்கொண்டே ப்ளவுசை உருவி கையில் எடுத்தாள்.

'ஏன் இவ்வளவு மட்டமான சென்ட் யூஸ் பண்றீங்க..?' என்று கேட்டு அந்தப்பெண்ணை எரிச்சலடைய செய்தான். 'ஐயோ.. அப்படி பாக்காதீங்க.. எனக்கு வெக்கமா இருக்கு..' என்றவாறு முட்டிக்கொண்டு நின்ற தன் உறுப்பை மூடிக்கொள்ள முயன்றான். 'உங்களுக்கும் இங்கல்லாம் முடி வளருமா..?' என்று பிடித்து இழுத்து, அந்தப்பெண்ணை 'ஷ்ஷ்ஷ்ஷஷ்..' என்று வலியில் நெளிய வைத்தான்.

ஆண்மை தவறேல் - 3







அத்தியாயம் 8

அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து..

அந்த மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் கிடந்த நாற்காலிகளில் ஒன்றில் நந்தினி அமர்ந்திருந்தாள். அவளுடைய கன்னத்தை கையொன்று தாங்கியிருக்க, அவளது கண்களில் கவலை தேங்கியிருந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது அவளது தேகத்தில் சதைப்பற்று கூடி சற்று மினுமினுப்பாக தோன்றினாலும், அவளது மனமோ எதைப்பற்றியோ எண்ணி மருகிக்கொண்டு, முகம் களையிழந்து காட்சியளித்தது. கவலையில் இருந்தவள் அவ்வப்போது கண்களை சுழற்றி ஹாஸ்பிட்டல் வாசலையும் பார்த்துக் கொண்டாள்.


அப்போதுதான் வாசலில் அந்த ஆட்டோ வந்து அவசரமாய் நின்றது. பின் சீட்டில் அந்த ஆள்.. முரட்டு தேகமும், முள்முள்ளாய் தாடியும், முகமெங்கும் வழியும் கண்ணீருமாய்..!! அவருக்கருகில் அந்த பெண்மணி.. நிறைமாத வயிறும், தலையை சுற்றி துணிக்கட்டும், அந்த கட்டை மீறி நெற்றியில் வழியும் இரத்தமுமாய்..!! அந்தப்பெண்மணியும்.. வலியிலும், வேதனையிலும் 'ஆ.. ஆ.. ஆ.. ஆ..' என்று அரற்றிக் கொண்டு இருந்தாள்..!!

அவர்களைப் பார்த்ததுமே நந்தினியிடம் ஒரு பதற்றம் பரவ, நாற்காலியில் இருந்து எழுந்துகொண்டாள். ஆட்டோவை விட்டு கீழே இறங்கிய அந்த முரட்டு ஆள், இப்போது தன் லுங்கி மடிப்பை தடுமாற்றமாய் பிரிக்க, திரும்பி பார்த்த ஆட்டோ டிரைவர் கத்தினார்.

"துட்டுலாம் ஒன்னும் வேணாய்யா.. சீக்கிரம் உன் வூட்டம்மாவை உள்ள தூக்கினு போ..!!"

ஒருகணம் திகைத்த அந்த ஆள் அப்புறம் தன் மனைவியை இரண்டு கைகளிலும் அள்ளிக்கொண்டார். அவருடைய கண்கள் இரண்டும் அங்குமிங்கும் அலைபாய, அவசரமாய் ஹாஸ்பிட்டலுக்குள் ஓடி வந்தார். எதிர்ப்பட்ட நந்தினியிடம்,

"எ..எமர்ஜன்சி வார்டு எங்கம்மா இருக்குது..?" என கேட்டார் பதட்டமான குரலில்.

"நே..நேரா போய்.." என்று முதலில் கையை நீட்டிய நந்தினி, அப்புறம்

"என் பின்னால வாங்க.. நான் கூட்டிட்டு போறேன்.."

என்றுவிட்டு அந்த ஆளுக்கு முன்னால் ஓடினாள். அவரும் தன் மனைவியை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு, 'ஒன்னுல்லம்மா.. ஒன்னுல்லம்மா.. இதோ வந்துட்டோம்மா..' என்று வேதனையில் துடிக்கும் மனைவிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே, நந்தினியை பின் தொடர்ந்தார்.

"என்னங்க ஆச்சு.. தலைலாம் ரத்தம்..?" நந்தினி ஓடிக்கொண்டே கேட்க,

"புள்ளத்தாச்சி பொம்பளையை கார்ல இடிச்சுனு.. நிக்காம கூட போயிட்டான்மா.. ஒரு பொறம்போக்கு தே..புள்ள..!!" அவர் அவள் பின்னால் ஓடிக்கொண்டே சொன்னார்.

ஆண்மை தவறேல் - 4







அத்தியாயம் 12

இரவு நெடுநேரம் அழுதுகொண்டிருந்த நந்தினிக்கு, நள்ளிரவுக்கு மேல் கண்கள் செருக ஆரம்பித்தன. அவளையுமறியாமல் அசந்து உறங்கிப் போனாள். காலையில் இருந்தே நெடுநேரம் மணமேடையில் நின்றது.. வருகிறவர்களுக்கெல்லாம் வணக்கம் வைத்தது.. காரில் எங்கெங்கோ அலைந்தது.. களைப்பு..!! அடித்து போட்டது போல உறங்கிப் போனாள்..!!

அடுத்த நாள் காலையில் அவளுக்கு விழிப்பு வந்த போது, ஏழு மணியை நெருங்கியிருந்தது. இமைகளை மெல்ல பிரித்தவளுக்கு, எங்கே இருக்கிறோம் என்பதை முழுவதுமாய் புரிந்து கொள்ளவே சில வினாடிகள் ஆயின. அப்புறந்தான் அவள் படுக்கையில் அசோக்கிற்கு மிக நெருக்கமாக படுத்திருப்பதை உணர்ந்தாள். அசோக்கின் பக்கமாக அவள் சாய்ந்து படுத்திருக்க, அவளது வலது கை அவனுடைய இடுப்பில் படர்ந்திருந்தது. அதை உணர்ந்த நந்தினி, உடனே பதறிப் போனவளாய் தன் கையை அவனது உடலில் இருந்து எடுத்துக் கொண்டாள்.

அவசரமாய் தலையை நிமிர்த்தி அசோக்கின் முகத்தை பார்த்தாள். அவன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அதை பார்த்த பிறகுதான் அவளுக்கு நின்றுபோன மூச்சே திரும்ப வந்தது. கண்களை ஒருமுறை நிம்மதியாக மூடி திறந்தாள். கைவிரல்களை மடக்கி தன் தலையில் தானே ஒரு குட்டு வைத்துக் கொண்டாள். தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

'ச்சே.. என்ன காரியம் செய்திருக்கிறேன் நான்..?? எனக்கு முந்திக்கொண்டு அவன் விழித்திருந்தால் என்ன ஆயிருக்கும்..?? அவனை நான் அணைத்துக் கொண்டு கிடப்பதை பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பான்..?? வெட்கம் கெட்டவள் என்று எண்ணியிருக்க மாட்டானா..?? ம்ஹூம்.. இது சரிப்பட்டு வராது.. இனி இவனுடன் ஒரே கட்டிலில் படுக்க கூடாது.. ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடும்.. அவன் மீது மட்டுமல்ல.. இப்போது என் மீதே எனக்கு நம்பிக்கை போயிற்று..!!'

அறையை விட்டு வெளியே வந்தாள். அமுதாவும், வந்தனாவும், கௌரம்மாவும் அதற்குள்ளாகவே எழுந்து சுறுசுறுப்பாக காணப்பட்டார்கள். மஹாதேவன் வாக்கிங் சென்றுள்ளதாக சொன்னார்கள். வீட்டில் தங்கியிருந்த உறவினர்களில் பலர், அதிகாலையிலேயே கிளம்பியிருக்க, சிலர் இப்போது கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நந்தினி மூவருடனும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். இரவு தனக்கு நடந்த கொடுமையான அனுபவத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், இயல்பாகவே பேசினாள். உதட்டில் புன்னகையும், புன்சிரிப்புமாய் நந்தினி காட்டிய போலி சந்தோஷத்தை கண்டு, அமுதாவும் கௌரம்மாவும் மனதுக்குள் நிஜமாகவே சந்தோஷப் பட்டனர்.

ஆண்மை தவறேல் - 5







அத்தியாயம் 16

அன்று மாலை ஆனதுமே நந்தினி பரபரப்பாக மாறினாள். கௌரம்மா வியப்பாக பார்க்க, ஆறு மணி வாக்கில் சென்று அன்று இரண்டாம் முறையாக குளித்து விட்டு வந்தாள். 'இந்தப்புடவை உனக்கு நல்லாருக்கு நந்தினி..' என்று அசோக் என்றோ சொன்ன அந்த அடர்சிவப்பு நிற புடவையை தேடிப்பிடித்து அணிந்து கொண்டாள். உற்சாகமாக கிச்சனுக்குள் நுழைந்தவள், உள்ளே காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த கௌரம்மாவிடம் சொன்னாள்.

"நீங்க ஹால்ல போய் டிவி பாருங்கம்மா.. இன்னைக்கு சமையல் எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!"

"இல்லம்மா.. இந்த காய்கறி.." சொல்லிக்கொண்டிருந்த கௌரம்மாவை இடைமறித்து,

"அப்படியே வச்சுடுங்க.. நான் பாத்துக்குறேன்.." என்று பட்டென சொன்னாள்.

கௌரம்மாவும் கையிலிருந்த கத்தியை காய்கறி தட்டிலேயே போட்டுவிட்டு, 'இன்று என்னாயிற்று இந்தப்பெண்ணுக்கு..?' என்பது போல நந்தினியை வித்தியாசமாக பார்த்தவாறே, ஹாலுக்கு நகர்ந்தாள். அவள் சென்ற பிறகு ஓரிரு நிமிடங்கள், நந்தினி இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றியவாறு, கிச்சனையும் கிச்சனில் இருந்த சமைப்பதற்கு தேவையான மூலப் பொருட்களையும் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். அவற்றில் அசோக்கிற்கு என்னென்ன ஐட்டங்கள் பிடிக்கும் என்று மனதுக்குள் ஒருமுறை ஓட்டிப் பார்த்தாள். அந்த ஐட்டங்களை வைத்து என்னெல்லாம் அன்று இரவு உணவுக்கு தயார் செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

முடிவுக்கு வந்ததுமே மீண்டும் அவளை ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. பம்பரம் போல சுழன்று சமையல் வேலைகள் எல்லாவற்றையும் அவளே தனியாக முடித்தபோது, மணி எட்டை நெருங்கியது. 'ரெடியாயிடுச்சும்மா.. நீங்க மாமாவுக்கு சாப்பாடு எடுத்து வைங்க.. நான் இதோ வந்துர்றேன்..' என்று கௌரம்மாவிடம் சொல்லிவிட்டு நந்தினி மீண்டும் தன் அறைக்குள் நுழைந்தது கொண்டாள்.

ஆண்மை தவறேல் - 6







அத்தியாயம் 20


நந்தினியின் கைகள் இரண்டும் காய்கறிகள் நறுக்குவதில் பிஸியாக இருந்தன. ஒரு கையால் கேரட்டை பிடித்துக்கொண்டு, இன்னொரு கையிலிருந்த கத்தியால் அதை ஸ்லைஸ் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய தலை ஒருபக்கமாக சாய்ந்து, காதுக்கு கொடுத்திருந்த செல்போன் கீழே விழுந்து விடாமல் இருக்க, தோள்ப்பட்டையோடு சேர்த்து அழுத்திக் கொண்டிருந்தது. மறுமுனையில் ரிங் போய்க்கொண்டிருந்தது. கால் பிக்கப் செய்யப்பட்டதும்..

"ஹலோ.." என்றாள்.

"ஹலோ.." என்றான் அடுத்த முனையில் அசோக்.

"என்னங்க பண்ணிட்டு இருக்குறீங்க..?"

"IPL மேட்ச் பாத்துட்டு இருக்குறேன் நந்தினி.."

"மேட்ச்சா..?? ஆபீஸ்ல ஏது டிவி..??"

"ஆபீஸ்ல இல்லம்மா.. ஸ்டேடியத்துல..!!"

"ஸ்டேடியத்துலயா..??" நந்தினி ஆச்சரியமாக கேட்டாள்.

"ம்ம்.. சேப்பாக்கத்துல இருக்கேன்.. சென்னை பேட்டிங்..!!"

"ஓ.. அப்போ இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆகுமா..?"

"ஆமாம்.. லெவன், லெவன் தேர்ட்டி ஆயிடும்..!! அதுசரி.. நீ எதுக்கு கால் பண்ணின..??"

ஆண்மை தவறேல் - 7







அத்தியாயம் 23

அடுத்து வந்த சில நாட்களில்.. நந்தினியும் சந்தோஷமாக இல்லை.. அசோக்கும் நிம்மதியாக இல்லை..!! ஒவ்வொரு நாள் பொழுதும் அவர்களுக்கு ஒரு போராட்டமாகவே கழிந்தது..!!

நந்தினி ஒரு மாதிரி விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். எதிலுமே பிடித்தம் இல்லாமல் எந்திரம் போலவே நடந்து கொண்டாள். அசோக்குடைய செயலை எண்ணி எண்ணி தினமும் அகத்துக்குள் குமைந்தாள். அவனை மாற்றிவிடலாம் என தான் நம்பியதை நினைத்து, 'பைத்தியக்காரி..' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். அவனுக்கு தன் மீது காதல் வந்துவிட்டது என்ற எண்ணத்தில், தன் கால்கள் தரையில் நில்லாமல் மிதந்ததை நினைத்து, 'வெக்கங்கெட்டவ' என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

அவளுடைய பார்வைக்கு, அவளது எதிர்காலமே இப்போது ஒரு சூனியமாக காட்சியளித்தது. 'இவனுடனான என் வாழ்க்கை, என்னை எங்கே கொண்டு சேர்க்கும்..?' என்று அவள் அடிக்கடி எழுப்பிய கேள்விக்கு, அவளுடைய புத்தியால் தெளிவான பதில் சொல்லவே முடியவில்லை. 'காதலித்து வேறு தொலைத்து விட்டேன்.. இனி கண்ணீர் மட்டுந்தான் மிச்சம் போலிருக்கிறது..' என்றே அவளுக்கு தோன்றியது.

விரக்தியில் இருந்தாலும் அசோக்கிற்காக அன்றாடம் செய்கிற வேலைகளில் இருந்து அவள் விலகிவிடவில்லை. எப்போதும் போலவே.. காலையில் அவனை துயில் எழுப்புவாள்.. ஆனால் அவள் பார்வையில் காதல் இருக்காது..!! காபி கலந்து அவனிடம் நீட்டுவாள்.. அதில் ஒரு கனிவு இருக்காது..!! உணவு சமைப்பாள்.. அள்ளிக்கொண்டு ஆபீசுக்கு செல்வாள்.. உடனிருந்து பரிமாறுவாள்.. ஆனால் அவள் உள்ளத்தில் பரிவு இருக்காது..!! அசோக் மீது அவளுக்கிருந்த அன்பும் அக்கறையும் இப்போது நமத்துப் போயிருந்தன..!!

சிலநேரங்களில் 'இப்படியே இருந்துவிட்டு போய் விடலாமே..' என்று கூட அவளுக்கு தோன்றும். விரக்தியில் உழன்றவள் அதிலேயே ஒரு சுகம் காண ஆரம்பித்திருந்தாள். 'இவனுடன் திருமணம் என்றதும்.. ஆரம்பத்தில் இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையைத்தானே நான் எதிர்பார்த்திருந்தேன்..? இடையில் வந்ததுதானே இவன் மீதான காதல், இனிமையான வாழ்க்கை என்ற நம்பிக்கை எல்லாம்..? அந்த காதலையும் நம்பிக்கையையும் கனவென எண்ணி மறந்தால் என்ன..? எப்படியோ போய் தொலைகிறான் எனக்கென்ன என்றே இருந்தால் என்ன..?'

ஆண்மை தவறேல் - 8







அத்தியாயம் 27

உணர்சிகள் அற்றுப்போய்.. உயிருமற்ற ஜடம் போலே.. வெறித்த பார்வையும், வெந்து போன மனதுமாய்.. நந்தினி அந்த ஆபீஸை விட்டு வெளியே வந்தாள். உள்ளே செல்லும்போது தெளிவாயிருந்த வானம், இப்போது மேகக்குழப்பங்களுடன் காணப்பட்டது. அவளுடைய உள்ளத்தில் அடிப்பது மாதிரியே ஒரு பலத்த காற்று, இப்போது வெளியிலும் சுழன்றடித்தது. காற்றில் கூந்தல் பறக்க, காரில் ஏற மறந்து போய், கடந்து சென்றவளை பார்த்ததும், கதவை திறந்து கொண்டு கீழிறங்கினார் ராமண்ணா.

"நந்தினிம்மா.. நந்தினிம்மா.. கார் இங்க இருக்கு..!!"


பதட்டமாய் அவர் அழைத்ததும், நந்தினிக்கு ஓரளவு சுயநினைவு வந்தது. ஓரிரு வினாடிகள் மலங்க மலங்க விழித்தவள், பிறகு திரும்பி நடந்து வந்து காருக்குள் ஏறிக்கொண்டாள். ட்ரைவர் சீட்டில் அமர்ந்த ராமண்ணா, பின்னால் திரும்பி, நந்தினியை ஒருமுறை பாவமாக பார்த்தார். பின்பு சாவி திருகி காரை கிளப்பினார். ஸ்டியரிங் வளைத்து சாலையில் செலுத்தினார்.

நந்தினியின் பார்வை எங்கோ சூனியத்தில் நிலைத்திருந்தது. இதயம் சோகமாய் துடித்து ஓலமிட்டது. கணவன் பேசிய வார்த்தைகளே அவளுடைய காதுக்குள் ஊசி செருகிக்கொண்டிருந்தன. காருக்குள் மாமனார் இல்லாததை தாமதமாகவே கவனித்தாள்.

"மா..மாமா.. மாமா எங்க..?"

"ஐயா வேற டாக்ஸி புடிச்சு வீட்டுக்கு போயிட்டார்மா..!!"

"ம்ம்.."

"என்னாச்சும்மா.. ஏதும் பிரச்னையா..?? ஐயா மொகமே வாடி போய் போறாரு..??"

"ம்ம்.. பிரச்னைதான்.. பெரிய பிரச்னை..!!"

ஆண்மை தவறேல் - 9






அத்தியாயம் 31

அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து..

அசோக் தனது தலையை சற்றே கவிழ்த்து, கைகள் இரண்டாலும் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் தாங்கிப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான். அவனது கண்கள் இரண்டும் எதையோ கூர்மையாக வெறித்துக்கொண்டிருந்தன. அவனுக்கு முன்பாக அவனது லேப்டாப் திறந்து வைக்கப் பட்டிருந்தது. லேப்டாப் திரையில், நந்தினி தனது வெண்பற்கள் தெரிய வெகுளித்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தாள். அசோக்கின் உள்ளமெல்லாம் இப்போது பலவித உணர்ச்சிகள் மொத்தமாய் சேர்ந்து அழுத்திக் கொண்டிருக்க, எந்தக் கவலையும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் மனைவியையே, 'என்ன செய்வது இவளை..??' என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்கள் கணினியில் நிலைத்திருந்தாலும், அவனது மூளை பின்னணியில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நந்தினியின் அறிமுகம் கிட்டியதில் இருந்து.. இன்று வரை நடந்து முடிந்த சம்பவங்கள் எல்லாம்.. அவன் மனக்கண்ணில் வந்து போயின. யோசிக்க யோசிக்க.. அவனுக்கு நிறைய விஷயங்கள் புரிபட ஆரம்பித்தன..!! இந்தனை நாளாய் நந்தினி மீது தனக்கிருந்த உணர்வு, எந்த மாதிரியானது என்பது இப்போது அவனுக்கு தெளிவாக புரிந்து போனது. அவளை மனதில் ஏற்றிய பிறகு இன்னொருத்தியை தொட கூசுகிறது என்றால்.. இது காதலை தவிர வேறென்ன..??

"நான் கெளம்புறேன் அசோக்.."

சப்தம் கேட்டு அசோக் நிமிர்ந்து பார்த்தான். தோளில் பேகுடன்.. வீட்டுக்கு வருகையில் அணிந்திருந்த அதே உடையுடன்.. மாலினி நின்று கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் எந்த சலனமும் இருக்கவில்லை. அவளுடைய பார்வை லேப்டாப் திரையில் பதிந்திருந்தது. அசோக்கும் அவளை சில வினாடிகள் அமைதியாக பார்த்தான். அப்புறம் அருகில் இருந்த லேப்டாப் பேகின் பக்கவாட்டு ஜிப்பை திறந்து, ஏற்கனவே அவள் பெயருக்கு எழுதி வைத்திருந்த செக்கை எடுத்து அவளிடம் நீட்டினான்.

"இல்லை அசோக்.. வேணாம்..!!" மாலினி மறுக்க, அசோக் இப்போது திகைப்பாக அவளை ஏறிட்டான்.

நெஞ்சோடு கலந்திடு - 1







'நெஞ்சோடு கலந்திடு..' ஒரு மென்மையான காதல் கதைதான். புதுமையான கதை என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால்.. சொல்லும் விதத்தில் வித்தியாசப்படுத்தி காட்டமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதமான போக்கிலேயே கதையை செலுத்த திட்டமிட்டிருக்கிறேன். எனது முயற்சிகள் எல்லாவற்றிற்கும் உற்சாகம் தரும் நண்பர்கள், இந்தக்கதைக்கும் அதே உற்சாகத்தை தருவார்கள் என்று நம்புகிறேன். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்

அத்தியாயம் 1

பதினைந்து வருடங்களுக்கு முன்பு..!!

மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்.. சிலைமானை தாண்டியதும் இடப்பக்கமாக முதலில் வருகிற அந்த சிறிய கிராமம்தான் வேப்பங்குளம்..!! சாலையின் இருபுறமும்.. நீர்குடித்து நாளாகி.. தாகத்தில் தகித்திருந்த.. காய்ந்து போன வயல்நிலங்கள்..!! வானத்தை வாய்பிளந்து பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தன..!! அவற்றின் ஊடே.. ஆங்காங்கே கருவேல மரங்கள் மட்டும் பச்சை நிறத்தில் கெக்கலிப்புடன் தலையாட்டிக் கொண்டிருந்தன..!!

வயல் வரப்புகளில் வளர்ந்திருந்த கோரைப்புற்களை கடித்து, பசி தீர்த்துக் கொள்ளும் ஒரு ஆட்டுக்கூட்டம்..!! அந்த ஆட்டுக்கூட்டத்திற்கு சற்று தள்ளியே அந்த ஆள் நின்றிருந்தான். அழுக்கேறியும் கசங்கியும் போயிருந்த வேஷ்டியை, அவன் உயர்த்தி கட்டியிருக்க, உள்ளே அணிந்திருந்த சிவப்புநிற கால்சட்டை, பளிச்சென வெளியே தெரிந்தது. உச்சி வெயில் மண்டையை பொசுக்காமல் இருக்க.. தலையை முழுவதுமாய் மறைத்து.. துண்டு போர்த்தியிருந்தான். அவனுடைய ஒரு கையில்.. நீளமான தடிமனான ஒரு கம்பு. இன்னொரு கையில்.. இன்னும் சிறிது நேரத்தில் அவனுடைய வயிறை குளிர்விக்கப்போகும்.. பழைய சாதம் அடங்கிய தூக்குச்சட்டி..!!

நிதானமாக மதமதப்பாக புல் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள், திடீரென மிரண்டு போய், 'பே...!!!!' என்று கத்தியவாறு, பேய்பிடித்துக் கொண்டமாதிரி நாலாபுறமும் சிதறி ஓடின. குழப்பத்தில் ஆடுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள, அவற்றின் கழுத்தில் கட்டியிருந்த மணிகளின் 'கிணிகிணி' ஓசை, அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்தது. ஆடுமேய்ப்பவன் காரணம் புரியாமல் திகைத்துப் போய் நின்றிருக்க, ஆட்டுக்கூட்டத்தை அந்தமாதிரி சிதறி ஓட செய்த அந்த சிறுவனும், அந்த சிறுமியும் ஒரே நேரத்தில் வரப்பை தாண்டிக் குதித்தவாறு ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

"ஏய்ய்ய்ய்... எடுப்பட்ட பய புள்ளைகளா..!! என்ன பண்றேன் பாரு உங்களை...!!"

நெஞ்சோடு கலந்திடு - 2






அத்தியாயம் 5


காதலுக்கும், கவிதைக்கும் என்ன தொடர்பு..? காதல் மயக்கம் கொண்டவர்களில் கணிசமான விழுக்காட்டினர், ஏன் கவிதையிலும் மையல் கொண்டு திரிகின்றனர்..? அசோக்கிற்கு புரியில்லை..!!

"அவருக்கு நல்லா கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்..!!"

திவ்யாவின் வார்த்தைகள் திரும்ப திரும்ப அவனுடைய செவிப்பறையில் வந்து மோதிக்கொண்டிருந்தன. தான் திவ்யாவை உயிருக்கும் மேலாக காதலித்துக்கொண்டிருப்பதாக கருதிக்கொண்டிருக்கிறான். ஆனால் தனக்கு ஏன் கவிதையில் ஈடுபாடு இல்லாமல் போனது என்று அவனுக்கு புரியவில்லை..!! ஒருவேளை தன் காதலில் ஏதும் குறை உள்ளதா..? ச்சே..!! இருக்காது..!! முயலவில்லை.. அதனால்தான் கவிதை முளைக்கவில்லை..!!

ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். இன்று திவ்யாவை நினைத்து ஒரு கவிதையாவது எழுதிப் பார்த்துவிடவேண்டும்..!! எப்படி ஆரம்பிப்பது..?? அன்பே என்றா.. அடியே என்றா..?? கண்ணே என்றா.. காதலியே என்றா..?? உயிரே என்றா.. உறவே என்றா..?? ஆரம்ப வார்த்தையிலேயே அடுக்கடுக்காய் குழப்பம்..!! நெற்றியை சொறிந்தவாறே நெடுநேரம் அமர்ந்திருந்தான். எதுவுமே பிடிபடாமல் போக எரிச்சலுக்கும் இயலாமைக்கும் உள்ளானானான்..!!

பேனா பிடித்த அவன் கை சும்மா இராமல், கிறுக்க ஆரம்பித்தது. திவ்யா என்றும்.. ஐ லவ் யூ என்றும்.. வார்த்தைகளை தாறுமாறாக காகிதத்தில் சிந்தியும் சிதறியும் வைத்தது..!! புத்தகங்களில் காணும் புதுக்கவிதைகளை விட, அவளுடைய பெயர் அழகாக இருப்பதாக, அவனது கண்களுக்கு தோன்றிற்று..!! 'சரியான அல்பம்டி நீ.. நீயே ஒரு அற்புதமான கவிதை.. எதுக்குடி உன்னை நெனச்சு கவிதை எழுதனும்னு உனக்கு ஒரு அல்ப ஆசை..?' என்று திவ்யாவிடம் கேட்பதாக மனதுக்குள் சொல்லிப் பார்த்தான். சிரிப்பு வந்தது..!!

அடுத்த கணமே.. ச்சே..!! 'கவிதை எழுத தெரியலை.. அதுக்கு இப்படி ஒரு சப்பைக்கட்டா..?' என்று அவன் மனசாட்சி கேள்வி எழுப்ப.. கடுப்பானான்..!! கிறுக்கிய காகிதத்தை கையில் எடுத்து எரிச்சலுடன் கசக்கி எறிந்தான். எறிந்தவன் அடுத்த கணமே அதற்காக வருந்தினான்..!!

எறியப்பட்ட காகிதம் வாசலில் நின்ற செல்வாவின் முகத்தில் பட்டு கீழே விழுந்தது. ஒருகணம் அசோக்கை திகைப்பாய் பார்த்த செல்வா, பின்னர் குனிந்து அந்த பேப்பரை எடுக்க சென்றார். அசோக் பதறிப்போய் எழுந்து ஓடினான்.

நெஞ்சோடு கலந்திடு - 3







அத்தியாயம் 8

காதலை மனதினில் பூட்டி வைக்காதீர்கள்..!! அது காதலென்று உறுதியானதுமே உரியவர்களுக்கு உணர்த்தி விடுங்கள்..!! காதலை உணர்தலை விட, உணர்த்துதல் மிகவும் கடினமான காரியம்தான்.. கவனமாக கையாள வேண்டிய விஷயம்தான்.. இல்லை என்று சொல்லவில்லை..!! ஆனால்.. காதலை உணர்த்த காலம் தாழ்த்தினால்.. இறுதிவரை அந்தக்காதலை, உங்கள் இதயக்கூட்டுக்குள் புதைத்து வைக்கும் பரிதாப நிலைக்கு நீங்கள் தள்ளப்படக்கூடும்..!! அப்படிப்பட்ட ஒரு பரிதாப நிலை தனக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான், அசோக்கின் மனதை இப்போது அசுரத்தனமாய் கவ்வியிருந்தது..!! அசோக் அந்த பயத்தையும், அதனால் எழுந்த பதட்டத்தையும் மனதுக்குள் மறைத்துக்கொண்டு, சற்றே தடுமாற்றமான குரலில் கேட்டான்.

"ம்ம். ந..நல்லாருக்காரு திவ்யா..!! ஆ..ஆமாம்.. யா..யாரு இவரு.. எப்படி உனக்கு பழக்கம்..?"

"இவர் பேர் திவாகர்.. இ..இப்போ கொஞ்ச நாளா.. ஒரு ஒருமாசமாத்தான் பழக்கம்.. ஆன்லைன் மூலமா..!!"

"ஆன்லைன் மூலமாவா..?"

"ம்ம்.. எனக்கு சில ஈ-புக்ஸ் வேணும்னு ஒரு ஃபோரத்துல கேட்டிருந்தேன்.. இவர்தான் அதெல்லாம் என் ஈமெயிலுக்கு அனுப்பினாரு..!! அப்புறம் நான் தேங்க்ஸ் சொல்ல.. அவர் என்னைப் பத்தி கேட்க.. நான் அதுக்கு பதில் சொல்ல.. அப்படியே பழக்கம் ஆகிடுச்சு..!!"

"ஓ..!! ஃபோன்ல பேசிருக்கியா அவர் கூட..?"

"இல்லடா.. சேட் மட்டுந்தான்.. ஃபோட்டோவே இன்னைக்கு காலைலதான் அனுப்பினாரு..!!"

"ஆன்லைன்ல வர்ற ஆளுங்களை நம்புறது கொஞ்சம் கஷ்டம் திவ்யா.."

"சேச்சே.. இவர் அப்படி இல்ல அசோக்..!! ரொம்ப நல்லவர்..!!"

"ம்ம்.. என்ன பண்றார்..?"

"பிசினஸ்.. ஷேர் ட்ரேடிங்..!!"

"ம்ம்ம்.."

"எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. நல்லா கலகலப்பா பேசுறாரு.. என் டேஸ்டும் அவர் டேஸ்ட்டும் நல்லா ஒத்துப் போகுது..!! எனக்கு இவரை ரொம்ப பிடிச்சிருக்கு அசோக்.. அவர் எழுதின கவிதைலாம் கொஞ்சம் அனுப்பிச்சிருந்தாரு.. எவ்வளவு அமேசிங்கா இருந்தது தெரியுமா..?? நான் தேடிட்டு இருந்தது இவரைத்தான்னு தோணுது அசோக்..!! இவரை லவ் பண்ணலாம்னு நெனைக்கிறேன்..!! நீ என்ன நெனைக்கிற..?"

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...